இசை வணக்கம் நண்பர்களுக்கு,
வைரமுத்து அவர்களின் பாடலுடன் இப்பதிவில் சந்திப்பது மகிழ்ச்சி. என் பாடல் பட்டியலில் பெரும்பாலும் வைரமுத்து அவர்கள் எழுதிய பல பாடல்கள் இடம்பெறுவது வழக்கம். வரிகளை ரசிக்க பாடல் கேட்பது தனி இன்பமே ! பாடலை ரசிப்பது பல வகை உண்டு நாம் எந்த மனநிலையில் இருக்கிறோம் என்பது பொறுத்து பாடல்வரிகளையும் ரசிப்போம்.
இரண்டாம் உலகம் படத்தில் இடம் பெற்ற பாடல் அண்மையில் ரொம்பவும் பிரபலமான பாடலும் கூட. கார்த்திக் குரலில் ரிங்காரம் போல் நம்மையும் பாட வைக்கும் பாடல். ஹாரிஸ் ஜெயராஜ் , அனிருத் ரவிச்சந்திரன் இசையை பாராட்டியே ஆகவேன்டும். பாடலின் பேக்கிரவுண்ட் கரோக்கேவும் அருமை. இசை வடிவமைத்த விதமும் அழகு ,சினிமாட்டோகிராபியும் அருமை.
கதாநாயகன் தன் காதலை ஏற்றுக்கொள்ள நாயகியை சுற்றி சுற்றி வருகிறான். நாயகி அவன் மீது காதல் கொண்டும் அவள் அழகுற மறைத்து இருப்பதை நாயகன் கூறுகிறான். அவள் காதல் வேண்டும் என்பதற்காக அவள் மனதை இலகச் செய்ய கடைக்கண் பார்வை போதும் என்றும்….ஒரு சிறு பார்வை போதும் என்று மன்றாடி உருகுகிறான். பாடலை ரசித்த வண்ணம் வரிகளையும் ரசிப்போம் வாருங்களேன் !…
படம்: இரண்டாம் உலகம்
இசை:ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள்: கார்த்திக்,ஹரிணி ராமசந்திரன்
கனிமொழியே என்னை
கொன்று போகிறாய்
கடைவிழியால் என்னை
தின்று போகிறாய்
கனிமொழியே என்னை ….
இதயம் உடைத்து என்னை
வாழச் சொல்கிறாய்
இமைகள் பறித்து என்னை
தூங்கச் சொல்கிறாய்
ஒரு பாதி கண்ணில்
காதல் செய்கிறாய்
மறு பாதி கண்ணில்
ஊடல் செய்கிறாய்
நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா..
நான் எட்டு திக்கும் அலைகிறேன்…
ஊ….ஊ…ஊ….. ஹா..ஹ ஹ ஹ…..ஹா
உந்தன் கன்னத்தோடு எந்தன்
கன்னம் வைத்தால்
நானும் மண்ணில்
கொஞ்சம் வாழ்ந்திருப்பேன்
அடி உந்தன் கன்னக்குழியில்
என்னை புதைத்து வைத்தாய்
மண்ணில் மாண்ட பின்னும் வாழ்ந்திருப்பேன்..
ஒரு கள்ளப் பார்வை பார் அழகே…
(ஒரு கள்ளப் பார்வை பார் அழகே…)
சிறு காதல் பேசு ஊமைத் திமிரே..
(சிறு காதல் பேசு ஊமைத் திமிரே..)
நான் தேடித் திரியும்
வான்மீன் நீதானே தென்றலே….
வா முன்னே முத்தமா கேட்கிறேன்?
உருவம்தான் கேட்கிறேன்
கனிமொழியே…ம்குமும்ம்ம்
கடைவிழியாய்…ம்குமும்ம்ம்
ம்ம்ம்ம்முஹு ஹே ஹே…
பறவை பறக்கும் போது
ஆகாயம் தொலைந்து போகும்
பார்வை பறவைமீதே பதிந்திருக்கும்
விழி உன்னை காணும் போது
உலகம் தொலைந்து போகும்
என்கண்கள் உந்தன் மீதே விழிந்திருக்கும்
என்னைக் கட்டிப்போடும் காந்தச்சிமிழே…
ஓ..ஹோ..
ஒரு பாட்டுப் பாடும் காட்டுக்குயிலே
ஹா…ஹா..ஹ ஆ
என் காலை கனவின் ஈரம் நீதானே
வாழலாம் வா பெண்ணே
வலதுகால் எடுத்துவை
வாழ்க்கையை காட்டவை
கனிமொழியே என்னை
கொன்று போகிறாய்
கடைவிழியால் என்னை
தின்று போகிறாய்
(பெண்…)
இதயம் உடைத்து என்னை
வாழச் சொல்கிறாய்
இமைகள் பறித்து என்னை
தூங்கச் சொல்கிறாய்
(ஆண்…)
ஒரு பாதி கண்ணில்
காதல் செய்கிறாய்
மறுப் பாதி கண்ணில்
ஊடல் செய்கிறாய்
நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா
நான் எட்டு திக்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா
அடி பற்றி எரியும் காட்டிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா…
இயக்குனர் செல்வராகவன் உடனான ஹாரிஸ் ஜெயராஜின் முதல் படம். மேலும் இனிய பாடல்களுடன் விரைவில் வருகிறோம். இசையுடன் ஆனந்தம் பெருகட்டும்.
ரசித்த பாடல்… பாடல் வரிகளுக்கு நன்றி…