கொட்டு கொட்டு மேளம் கொட்டு – கத்தி

பல புது இசையமைப்பாளர்களை, சமீபகாலமாக தமிழ் திரையுலகு  கண்டு வருகிறது. அதில் சிலர் மட்டுமே முதல் படத்திலேயே பெரிய அளவு பெருமையைத் தேடிக்கொண்டவர்கள். ஆம். கொலவெறி புகழ் அனிருத் பாடல் தான் இன்று.

இசைப்பா குழுவின் சார்பில், இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மிஸ்டர் அனிருத். சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட படப்பாடல்கள் இரண்டு தான் : கத்தி, ஐ. கத்தி படத்திலிருந்து ஒரு வித்யாசமான பாடல் உங்களுக்கு.

கொட்டு கொட்டு மேளம் கொட்டு பாடல் ஒரு துள்ளல் இசைக் கலவை. Fusion என்று இதனை சொல்லுவர். கர்நாடிக், beats, band, rock, குத்து என எல்லா இசை வகைகளும் இதில் உள்ளது. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கும் மாறும் போது வரும் இடையிசை நன்கு அமைந்துள்ளது. Transitions in Interlude. ஷங்கர் மஹாதேவன் குரல் மிகவும் உற்சாகமூட்டுகிறது. ஸ்வேதா மோகன் இலகுவாக பாடி கவர்ந்துள்ளார்.

கேள்வி பதில் போல இந்த பாடலை எழுதியுள்ளார் மதன் கார்க்கி. பாலம் என்பதைக் கருவாக கொண்டு அடுக்கியுள்ளார். தத்துவங்கள் தூவியுள்ளார். பொறப்பு இறப்பு என்று எல்லாம் வரும் போது, வைரமுத்துவின் (திரை) வரிகள் மனசில் பளிச்சிடுகிறது.

பாடலில் உள்ள பிறமொழிகளை தவிர்த்து இருக்கலாம். ஆரம்பமே ஹிந்தி! அதும் இரண்டு முறை ஒலிக்கிறது, இடையில் வரும் ஆங்கிலமே பரவாயில்லை என்று தோன்றும் அளவுக்கு.

Anirudh

 

பாட்டு: கொட்டு கொட்டு மேளம் கொட்டு
இசை: அனிருத் ரவிச்சந்திரன்
பாடலாசிரியர்: மதன் கார்க்கி
பாடியவர்கள்: ஷங்கர் மஹாதேவன், ஸ்வேதா மோகன்
படம்: கத்தி

tho dhilu shaamilu huye hai
dora se milne ye chuke hai
kabar din ek jaane hai
dho jaana ek bane hai

ஏ கொட்டு கொட்டு மேளம் கொட்டு
கட்டு கட்டு பாலம் கட்டு
இதயத்தை இதயத்துக்கு
இணைக்க பாலம் கட்டு

tho dhilu shaamilu huye hai
dora se milne ye chuke hai
kabar din ek jaane hai
dho jaana ek bane hai

மார்ஸுல இவன் பொறந்தான்
வீனஸுல இவ பொறந்தா
கிரகங்க இரண்டுத்துக்கும்
இருக்கும் பாலம் எது ?

tho dhilu shaamilu huye hai
dora se milne ye chuke hai
kabar din ek jaane hai
dho jaana ek bane hai

சொர்க்கத்துல மரமெடுத்து
கட்டுன பாலம்தான் !
முத்தத்துல கட்டி வச்ச
பாலம், காதல் தான்!
காதல் ஒரு மிதவை
மிதவை பாலம்

அது இல்லைனா
நெஞ்சுக்குள்ள மிருகம்
மிருகம் வாழும்!

காதல் ஒரு மிதவை
மிதவை பாலம்
அது இல்லைனா
நெஞ்சுக்குள்ள மிருகம்
மிருகம் வாழும்!

பேஷ்.. ! பேஷ்..!
ரொம்ப நல்லாயிருக்கு !

அண்டர் குல அதிபதி நீயே,
நமோ நமோ நாராயணாய.
தொண்டர் குலம் போற்றும் உன்னையே,
நமோ நமோ நாராயணாய.

துன்பம் இங்க ஒரு கரை தான்,
இன்பம் அங்கு மறுகரை தான்.
ரெண்டுக்கும் மத்தியில
ஓடும் பாலம் எது ?

கோவிலில கல் எடுத்து,
பக்தியில சொல் எடுத்து,
கட்டின பாலம் எது?
சாமி பாலம் அது!

பாவம் செஞ்ச கறை கழுவ
நினைக்கும் பூமிதான்,
பாவத்தை நீ உணர்ந்துபுட்டா
நீயும் சாமிதான்!

சாமி ஒரு குறுக்கு
குறுக்கு பாலம்.
அது இல்லன்னா பூமி இங்கு
கிறுக்கு கிறுக்கு கோலம்!

சாமி ஒரு குறுக்கு
குறுக்கு பாலம்
அது இல்லன்னா பூமி இங்கு
கிறுக்கு கிறுக்கு கோலம்!

Humpty dumpty அங்க falling down.
Jack and jill இங்க rolling down.
London bridge is ஐயோ falling down.
Ringa ringa all fall down.

நேத்து வெறும் இருள் மயம் தான்.
நாளை அது ஒளிமயம் தான்
நல்ல எதிர்காலத்துக்கு
போகும் பாலம் எது ?

குறும்பில இரும்பெடுத்து
அறிவுல நரம்பெடுத்து
எழுப்புன பாலம் எது?
குழந்தை பாலம் அது !

வானத்துல மீன் பிடித்து,
ரசிக்கும் வயசுதான்!
எல்லாருக்கும் வேணும்,
அந்த குழந்தை மனசுதான்!

குழைந்தைங்க கனவு
கனவு பாலம்!
அதில் பொன்னாலே கண்ணு
முன்னே ஒளிரும் ஒளிரும் காலம்!

குழைந்தைங்க கனவு
கனவு பாலம்
அதில் பொன்னாலே கண்ணு
முன்னே ஒளிரும் ஒளிரும் காலம்!

குத்துகல்லு போல நின்னானே,
முட்டித் தள்ளிப் போயேபுட்டானே,
எட்டு காலு பூச்சியாட்டம் தான்,
நாசமாயி நடந்து போனானே!

ஹேய் பொறப்பதும் ஒரு நொடிதான்
இறப்பதும் ஒரு நொடிதான்,
சொல்லடி ஞானபொண்ணு,
ரெண்டுக்கும் பாலம் எது ?

அன்புல பூ எடுத்து
நேரத்துல நாரெடுத்து
கட்டுன பாலம் எது?
வாழக்க பாலம் அது

பாதையில முள்ளிருக்கும்
குத்துனா கத்தாதே!
ஊரடிச்சு நின்னா கூட
அதுவும் பத்தாதே!
வாழ்க்க அது பூவுல காட்டுன பாலம்
நீ செத்தாலும் சேத்து வச்ச
புண்ணியம் என்னைக்கும் வாழும்!

வாழ்க்க அது பூவுல காட்டுன பாலம்
நீ செத்தாலும் சேத்து வச்ச
புண்ணியம் என்னைக்கும் வாழும்!

மீண்டும் ஒரு இனிய பாடலுடன் விரைவில் இணைவோம்.

புதிய உலகை

இசை வணக்கம்.

சில பாடல்களைக் கேட்கும்போதுதான் இன்னொரு முறை கேட்டாலும் தகும் எனத் தோன்றும். அந்த மாதிரியான பாடல்கள் கண்டிப்பாக வெற்றிபெற்றிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பாடலின் இசையோ, பாடலாசிரியரின் வரியோ, பாடியவரின் குரலோ இதற்கு காரணமாய் இருக்கலாம்.

கார்க்கியின் எளிய வரிகளுக்கு தாலாட்டு போல படரும் இமானின் இசையும், முழுப்பாடலுக்குமான சூழலை இனிமையாக ஆக்கிரமிக்கும் வைக்கம் விஜயலட்சுமியின் குரலும் நம்மை இப்பாட்லில் கவர்வதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

எந்தப் பாடலை விஜயலட்சுமி பாடினாலும் பாடலுக்குள் நம்மை மூழ்கடிக்கிறார். குரலில் மாயம் செய்யும் இவர் தொடர்ந்து நிறைய தமிழ்ப்பாடல்களைப் பாடினால் இசை ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையும்.

நீங்களும் கேட்டுப்பாருங்கள். உங்கள் Playlist-ல் இப்பாடலும் இணையும்.

vaikom vijayalakshmi

படம்: என்னமோ ஏதோ
இசை: டி.இமான்
பாடலாசிரியர்: மதன் கார்க்கி
பாடியவர்: வைக்கம் விஜயலட்சுமி 

புதிய உலகை
புதிய உலகை
தேடிப் போகிறேன்
என்னை விடு!

விழியின் துளியில்
நினைவைக் கரைத்து
ஓடிப் போகிறேன்
என்னை விடு!

பிரிவில் தொடங்கி பூத்ததை,
பிரிவில் முடித்துப் போகிறேன்!

மீண்டும் நான்
மீளப் போகிறேன்
தூரமாய்
வாழப் போகிறேன்

(புதிய உலகை..)

மார்பில் கீறினாய்
ரணங்களை
வரங்கள் ஆக்கினாய்
தோளில் ஏறினாய்
எனை இன்னும்
உயரம் ஆக்கினாய்

உன் விழி போல
மண்ணில் எங்கும்
அழகு இல்லை என்றேன்!
உன் விழி இங்கு
கண்ணீர் சிந்த
விலகி எங்கே சென்றேன்?

மேலே நின்று உன்னை
நாளும் காணும் ஆசையில்…

(புதிய உலகை..)

யாரும் தீண்டிடா
இடங்களில்
மனதை தீண்டினாய்
யாரும் பார்த்திடா
சிரிப்பை என்
இதழில் தீட்டினாய்

உன் மனம் போல
விண்ணில் எங்கும்
அமைதி இல்லை என்றேன்!
உன் மனம் இன்று
வேண்டாம் என்றே
பறந்து எங்கே சென்றேன்?

வேறோர் வானம்
வேறோர் வாழ்க்கை
என்னை ஏற்குமா?

(புதிய உலகை..)

மற்றுமொரு இனிய பாடலோடு விரைவில் இணையலாம்.

ஒசக்க! ஒசக்க!

வணக்கம்.
மீண்டும் அறிமுகப் படலம். இசை ராட்சசன் என்று சொல்லப்படுகிற அனிருத் தின் பாடல் முதல்முறையாக இசைப்பாவில். முதல் படத்தில் ஏதோ ஒரு மூலையில் பேரை போட்டார்கள். இரண்டாவது படத்தில் சக இசையமைப்பாளர்களில் முதலாவதாக வந்தார். மூன்றாவது படத்தில் விளம்பரத்தில் பயன்படுத்தினார்கள். நான்காவது படத்துக்கு விளம்பரமே அனிருத் தான்!

Anirudh

வணக்கம் சென்னை படத்தின் அனைத்துப் பாடல்களையும் அனிருத்தே பாடியுள்ளார். மதன் கார்க்கி எழுதிய இப்பாடலின் சோக பதிப்பு ஐலசா ஐலசா என்று இதே ஆல்பத்தில் இருக்கும்.

ஒசக்க என்றால் உயரே என்று பொருள்படுமாம். எந்த மொழி வார்த்தை எனத் தெரியவில்லை. ஒசக்க செத்த ஒசக்க என்றால் உயரே கொஞ்சம் உயரே என்று பொருள்.
தேனி இளைஞனும், இலண்டன் இளைஞியும் பாடிக்கொள்வது போலான பாட்டு. கொஞ்சம் நாட்டுப்புற பாணியில் அமைந்த பாடல் என்பதாலேயே கவனம் ஈர்க்கிறது.
படம்: வணக்கம் சென்னை
இசை: அனிருத்
பாடலாசிரியர்: கார்க்கி
பாடியவர்கள்: அனிருத், பிரகதி
__________________________
தேனி காத்தோட
தேனத் தெளிச்சாளே
தேளாக என் நெஞ்ச கொட்டிப்புட்டா!
தேங்கா நாராக
நெஞ்ச உரிச்சாளே
உள்ளார என்னான்னு காட்டிப்புட்டா!
எகன மொகன பாக்காம
கவுத பாடி கெடக்கேனே
தெக்கா மேக்கா கேக்காம
றெக்க கட்டி பறந்தேனே…
ஒசக்க செத்த ஒசக்க
போயி மெதக்கத்தான் வானேத்தி விட்டுப்புட்டா!
ஒசக்க செத்த ஒசக்க
பாவி இதயத்தக் காத்தாடி ஆக்கிப்புட்டா!

***************

ஹே… ஏசி ரோசா தூசி ரோட்டில்
வீசி கைவீசி பேசி வந்தா.
தேம்சு தண்ணி பாத்த மீனு
வைக ஆத்தோட நீந்த வந்தா.இந்த வயக்காட்டு மத்தியில…
இந்த வயக்காட்டு மத்தியில
முயலொண்ணா துள்ளிக்கிட்டு
புயலொண்ண நெஞ்சில் நட்டு
ஏன் போனாளோ?(எகன மொகன பாக்காம)
(ஒசக்க செத்த ஒசக்க)

***************

ஹே… கண்ண தெறந்தாலும் கலையவில்ல
கனவா நனவான்னு புரியவில்ல
பூவின் மடிமேல தூங்கும் வண்டா
நானும் மாறிட்டா கவலையில்ல
என் கண் பாக்கும் தூரம் வர….
என் கண் பாக்கும் தூரம் வர
பச்ச புல் விரிச்ச தர
அது மேல ராணியப் போல்
நான் போனேனே!
(ஒசக்க செத்த ஒசக்க)
இன்னுமொரு இனிய பாடலோடு விரைவில் இணைவோம்