என்றும் மனதை வருடும் பாடல்களில் இன்னும் ஒன்று. இசையில் ஒரு மாஜிக். அனுபவத்தில் ஒரு சோகம். இந்த வார இறுதி இனிதாகட்டும்.
படம் : உயிரே
பாடலாசிரியர் : வைரமுத்து
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்: உன்னி மேனன், ஸ்வர்ணலதா
கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை….
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத் தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்
உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா
(பூங்காற்றிலே)
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்
இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா ?
காற்றில் கண்ணீரை ஏற்றி,
கவிதைச் செந்தேனை ஊற்றி,
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்
ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா…
(பூங்காற்றிலே)
(கண்ணில் ஒரு…)
காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை
உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி
ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடோடி வா
(பூங்காற்றிலே)