ஒரு நிலா ஒரு குளம்

வணக்கம்.

காதல் பாடல்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறோம். அவ்வகையில் இன்னுமொரு இனிய பாடல். ஏற்கனவே மழையில் குளித்த மலர்வனம் பாடலைத் தந்தோம். அதே பாணியில் இன்னுமொரு காதல் பாட்டு. வித்யாசாகர்+பா.விஜய் கூட்டணியில்.

பாடகர்களும் சும்மா இல்லை. கார்த்திக், ஷ்ரேயா கோஷல். சற்றே பெரிய அணி இப்பாடலில் இணைந்திருக்கிறது.  பாடல் குறித்து கவிஞர் சொல்கிறார்..

”இளைஞன் திரைப்படம் 1959ல் நடக்கின்ற கதைக்களம். இந்த மெட்டுக்கள் புதுமையாய் இருக்க வேண்டும். ஆனால் நவீன நகரத்துவம் இருக்கக் கூடாது  என்ற விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பாடல்! எனவே இதை படமெடுக்க ரோம், வெனீஸ் போன்ற புராதனச் சின்னங்களோடுதான் பயணிக்க வேண்டும் என்று  முடிவெடுத்தோம்.

பாடல் வரிகளாய் ஹைக்கூ வடிவத்தைப் பயன்படுத்தலாம் என்ற யோசனை பிறந்தது. கட்டறுத்த காற்றாய் கவிதைகள் கிளம்பின!

ஆண்:     ஒரு நிலா.. ஒருகுளம்!
ஒரு மழை.. ஒரு குடை!
நீ‡ நான் போதும் ஒரு விழா!

பெண்:     ஒரு மனம்.. ஒரு சுகம்!
ஒரு இமை.. ஒரு கனா!
நீ ‡நான் போதும் ஒரு யுகம்! “

ஆம். ஹைக்கூ வடிவத்தை அடியொற்றி, சந்தச் சுவை கூட்டி, தமிழோடு விளையாடும் வார்த்தைக் குவியல்கள்தான் பாடல். பாடலுக்கேற்ற ஈர்ப்பைக் கொடுக்கிறது இசை. தெளிவாக வார்த்தைகள் விழுகின்றன. இதுவே பாடலைக் கேட்பதற்கான உற்சாகத்தையும் தருகிறது. வரிகளை வாசித்தாலே ஒரு உற்சாகம் பிறக்கும். யூட்யூப்-ல் இப்பாடலின் வீடியோவும் இல்லை! வழக்கம்போல் பாடலைக் கேட்டு ரசிக்க செவிகளைத் தயார்படுத்துங்கள்!

படம்: இளைஞன்
இசை: வித்யாசாகர்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள்: கார்த்திக், ஷ்ரேயா கோஷல்

நெடும்பகல்…. நீண்ட கனவு!
நிஜமாகுமா?

ஒரு நிலா ஒரு குளம்
ஒரு மழை ஒரு குடை
நீ..நான் போதும்
ஒரு விழா!

ஒரு மனம் ஒரு சுகம்
ஒரு இமை ஒரு கனா
நீ..நான் போதும்
ஒரு யுகம்!

ஒரு கணம் இரு இதழ்
ஒரு நிழல் இரு தடம்
நீ..நான் போதும்
ஒரு தவம்!
(ஒரு நிலா ஒரு குளம்..)

காற்றில் ஒட்டிய முன்பனி நீ
பனியை ஒற்றிய ஒளிவிரல் நான்!
மேகம் கும்மிய மின்னல் நீ!
மின்னல் தூவிய தாழை நான்!

சங்கம் கொஞ்சிய செய்யுள் நீ
செய்யுள் சிந்திய சந்தம் நான்!
வெட்கம் கவ்விய வெப்பம் நீ!
வெப்பம் தணிகிற நுட்பம் நான்!

நீ..நான் போதும்
முதல் தனிமை!
(ஒரு நிலா ஒரு குளம்..)

மஞ்சம் கொஞ்சிய மன்மதம் நீ!
கொஞ்சல் மிஞ்சிய கொள்முதல் நான்!
மொழிகள் கெஞ்சிய மௌனம் நீ!
மௌனம் மலர்கிற கவிதை நான்!

ஓவியம் எழுதும் அழகியல் நீ!
உன்னை வரைகிற தூரிகை நான்!
உயிரை மீட்டிய விழிவிசை நீ!
உன்னுள் பூட்டிய இதழிசை நான்!

நீ..நான் போதும்
புது உணர்வு!

இன்னுமொரு இனிய பாடலோடு விரைவில் இணைவோம்.

காற்றில் வரும் கீதமே…

இசை பிரியர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் !

ஜாதி மல்லிப் பூச்சரமே, சங்கத் தமிழ் பாச்சரமே என்றொரு தமிழ்த் திரைப்படப் பாடல் வரி உண்டு. ‘புஷ்பேஷு ஜாதி’ என்றொரு சொற்றொடர் வடமொழியில் உள்ளது. அதன் பொருள் பூக்களில் உயர்ந்தது ஜாதி என்பதாகும். இந்தப் பாடலில், தலைவன் தலைவியை சாதிமல்லிப் பூச்சரமே என்கிறான். மலர்களில் உயர்ந்த மலர் போன்றவள் நீ என்று சொல்லிவிட்ட பிறகு வருகிற அதற்கு அடுத்த வரி இன்னும் சிறப்பான ஒன்றைக் கொண்டிருக்க வேண்டும். ஆகவே சங்கத் தமிழ் பாச்சரமே என்கிறான். தமிழே இனிமை, சங்கத்தமிழ் அதனினும் இனிமை. அப்படிப்பட்ட சங்கத்தமிழில் இயற்றப்பட்ட பாடல் நீ, அதுவும் ஒரு பாடல் இல்லை, பல பாடல்களைக் கொண்ட சரம் நீ என்கிறான்.

குழலுடன் கண்ணன்அருமையான ஓசை நயம் கொண்ட, கேட்பதர்க்கினிய ராகத்தில் அமைந்த சங்கத் தமிழ் பாடல்களுக்கு இணையான பாடல்கள் சில தமிழ் திரைப்படங்களில் அமைந்து விடுவது உண்டு. ஒருநாள் ஒரு கனவு என்கிற ஓரிருநாள் மட்டுமே ஓடிய ஒரு திரைப்படத்தில் இளையராஜா இசையில் வாலியின் வளமையான வரிகள் கொண்ட ‘காற்றில் வரும் கீதம்’ என்கிற பாடல் நான் மேலே குறிப்பிட்டுள்ள வகைப்பாடல்களில் சேரும்.

சொட்டும் பக்திரசமாகட்டும், பைந்தமிழ் வரிகளாகட்டும், செவிக்கினியதோர் மதுரமான ராகமாகட்டும்…. எல்லா விதங்களிலும் இப்பாடல் ஒரு அற்புதமான தமிழ்ப் பாசுரத்திற்கு நிகரானது.

கல்யாணி ராகத்தில் அமைந்த பாடல். இதே ராகத்தில் இளையராஜாவின் வேறு சில குறிப்பிட தகுந்த பாடல்கள் : அம்மா என்றழைக்காத… *மன்னன் ; சுந்தரி கண்ணால் ஒரு சேதி… *தளபதி. பாடல் உருவான விதம், ராஜாவும் வாலியும் மேற்கொண்ட உரையாடல் சுவையானது. நீங்களும் கேளுங்கள் :

கதையின் நாயகி கதாநாயகனின் இல்லத்துக்கு முதல் முறையாக வருகிறாள். பக்தனின் பாடல் கேட்டுத் தாழ் திறந்த ஆலய மணிக் கதவைப்போல் ஒரு பாடலோடு திறக்கிறது கதாநாயகனின் வீடு. ஒரு பாடலைக் கடனே என்று பாடாமல் இறைவனுக்கும் நமக்குமான பரிபாஷையே இசைதான் என்கிற உணர்வோடு, பாடலில் லயித்து ஆத்மார்த்தமாகப் பாடுவதை, பெரியோர் ‘நாத உபாசனை’ என்பார்கள். அப்படி இசையையே இறையாக எண்ணி வாழும் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து பாடுவதாக அமைந்து இருக்கறது இப்பாடல். கண்ணனை வர்ணிக்கத் துவங்கினாலும் இப்பாடல் இசை என்கிற கண்ணனுக்கும் நமக்கும் நடுவில் உள்ள பாலத்தை சொற்களால் அலங்கரிக்கிறது.

பாடலாசிரியர்: வாலி
படம்: ஒரு நாள் ஒரு கனவு 
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, ஹரிஹரன், சாதனா சர்கம், ஷ்ரேயா கோஷல், பவதாரணி 
ராகம் : கல்யாணி

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…..

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…..

அவன் வாய்க் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய்… நடந்தாய்…
அலைபோல் மிதந்து…

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…

பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்

வருந்தும் உயிருக்கு……..
ஒரு மருந்தாகும்..
இசை அருந்தும் முகம்
மலரும் அரும்பாகும்
இசையின் பயனே
இறைவன் தானே…

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா….

ஆதார ஸ்ருதி அந்த
அன்னை என்பேன்
அதற்கேற்ற லயம்
எந்தன் தந்தை என்பேன்

ஸ்ருதிலயங்கள் தன்னைச்
சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல
இசைக் குடும்பம்

திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை
விருந்து குறையாது
இதுபோல் இல்லம்
எது சொல் தோழி…

காற்றில் வரும் கீதமே,
என் கண்ணனை அறிவாயா…..

அவன் வாய்க் குழலில் அழகாக
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய்… நடந்தாய்…
அலைபோல் மிதந்து…

கவிஞர் வாலியின் தெய்வீக வரிகளுக்கு உயிர் தந்து இந்தப் பாடலை அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாய் ஆக்கியோர்: இளையராஜா, ஹரிஹரன், சாதனா சர்க்கம், ஷ்ரேயா கோஷல் மற்றும் பவதாரணி ஆகியோர். இறுதியில் வரும் கல்யாணி ராகத்தின் ஆலாபனை  மட்டுமே ரசிக்க.  பாடலின் சுட்டி கீழே:

இசைப்பா முதலாம் ஆண்டு வெற்றியை நோக்கி பயணம் செய்கிறோம். அதன் பொருட்டு சிறந்த பாடல்களின் சிறப்பு வரிசை இந்த பாடலுடன், இனிப்பு தீபாவளியுடன், இளையராஜாவுடன், இன்ப வாலியுடன், இசையுடன், இறையுடன் தொடங்குகிறது !

மேலும் உங்கள் வரவுக்கு நன்றி. தளம் மேம்பட உங்கள் கருத்துகளை சொல்லலாமே. நீங்களும் பங்கு பெறலாம், பகிரலாம் 🙂

முன்பே வா… என் அன்பே வா!

இனிமையான இசை வணக்கம்.

எடுத்து ஓர் அம்பை எய்வதற்குச்  சுக்ரீவர்களும் விரும்பிய வாலி!
எடுத்து ஓர் அம்பை எய்வதற்கு
சுக்ரீவர்களும் விரும்பிய வாலி!

இன்று வாலி பிறந்த நாள். சிறப்பு பதிவு இடலாம் என்று எண்ணியவுடன் இப்படல் மனதினுள் வந்தது. சமீபத்திய திரைப்பாடல்களைக் கேட்கிற எல்லோருக்கும் விருப்பமான பாடல்களுள் இதுவும் ஒன்றாக கண்டிப்பாக இருக்கும். இப்பாடலுக்கு பல சிறப்புகள் உண்டு. எனினும் முக்கியமானது. கவிஞர் வாலிக்குப் பிடித்த வாலியின் பாடல் என்ற பெயர் பெற்ற பாடல் இதுவாகும். தான் எழுதியதில் தனக்குப் பிடித்த பாடல்கள் என இரு பாடல்களைக் குறிப்பிட்டுள்ளார் வாலி. அதில் இடம்பெற்ற பிற்காலத் தமிழ்ப்பாடல் இதுவாகும். காட்சியமைப்பிலும், இசையமைப்பிலும்.

இப்பாடலுக்கு போட்ட மெட்டின் அடிப்படையில் வாலி “அன்பே வா… என் முன்பே வா!” என்று எழுதினாராம். முழுப் பாடலையும் பார்த்துவிட்டு, இசையமைப்பாளர் ரஹ்மான் இப்பாடலின் முதல் வரியை மட்டும் மாற்றியமைக்கச் சொல்லியிருக்கிறார். சில மெட்டுகள் போடும்போதே அவற்றின் வெற்றி உறுதியாகிவிடும். அதை உணர்ந்த ரஹ்மான் இப்பாடலின் முதல் வரி “முன்பே வா…என் அன்பே வா!” என்று மாற்றச் சொல்லியிருக்கிறார்.

ஏன் மாற்ற வேண்டும்? வாலிக்கும், ரஹ்மானுக்குமான  ஹிட் ரகசியம் அது! இருவரும் இணைந்த பாடல்களில் ஹிட் அடித்த பாடல்களில் ‘மகர’ வருக்கத்தில் அமைந்த பாடல்கள் பெரும் வெற்றி அடைந்தவை. (உதா: முக்காபுலா, மயிலிறகே,….) (மற்ற பாடல்கள் தெரிந்தால் குறிப்பிடவும்.) இப்பாடலும் அதே அளவு ஹிட் ஆகும் என்கிற எதிர்பார்ப்பில் உருவான பாடல்.

எதிர்பார்ப்பிற்கும் மேலான வெற்றியடைந்த பாடல் இது. காரணம்? பாடகர்களின் வசீகரிக்கும் குரலும், அதைக் காட்டிலும் வசீகரிக்கும் இசையும், அதை சிறப்பான காட்சியமைப்பால் திரையில் காண்பித்த இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என ஒரு குழுவே இப்பாடலின் மாபெரும் வெற்றிக்குப் பின்புலமாக இருந்தது அனைவரும் அறிந்ததே.

கவிஞர் வாலி, ரஹ்மான், ஷ்ரேயா கோஷல், நரேஷ் அய்யர் என பணியாற்றிய அனைவரின் சிறந்த பாடல்கள் பட்டியலில் இடம் பெறும் இனிய பாடல் இது. வேறென்ன வேண்டும். வாலியின் உடலுக்கு மட்டும்தான் இறப்பு. வரிகளுக்கல்ல என்பதை இன்னுமொரு முறை அழுத்தமாக எடுத்துரைக்கும் பாடல் இது. பாடலை ரசியுங்கள்.

பாடலாசிரியர்: வாலி
படம்: சில்லுனு ஒரு காதல்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள்: ஷ்ரேயா கோஷல், நரேஷ் அய்யர்

முன்பே வா என் அன்பே வா!
ஊனே வா  உயிரே வா!
முன்பே வா என் அன்பே வா!
பூப்பூவாய்ப் பூப்போம் வா!

நான் நானா? கேட்டேன் என்னை நானே!
நான் நீயா? நெஞ்சம் சொன்னதே!

(முன்பே வா….)

ரங்கோ…ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம்போட்ட கைகள்
வாழி வளையல் சத்தம்
ஜல்ஜல்

(முன்பே வா….)

ரங்கோ…ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம்போட்ட கைகள்
வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன!

பூவைத் தாய்ப் பூ வைத்தாய்
நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
மணப் பூவைத்துப் பூவைத்துப்
பூவைக்குள் தீ வைத்தாய் ஓஓ!

தேனே நீ நீ மழையில் ஆட
நான் நான் நான் நனைந்தே வாட
என் நாளத்தில் உன் ரத்தம்
நாடிக்குள் உன் சத்தம்
உயிரே ஓஒ

தோளில் ஒரு சில நாழி
தனியென ஆனால் தரையினில் மீனாய்… ம்ம்ம்ம்ம்

(முன்பே வா….)

நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா?
நாம் வாழும் வீட்டுக்குள்
வேறாரும் வந்தாலே தகுமா?

தேன் மழை தேக்கத்து நீராய்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா
நான் சாயும் தோள் மேல்
வேறாரும் சாய்ந்தாலே தகுமா?

நீரும் செம்புலச் சேறும்
கலந்தது போலே
கலந்தவர் நாம்

 ( முன்பே வா)

(ரங்கோ ரங்கோலி)

இசைப்பா +
இப்படத்தின்  அனைத்து பாடல்களையும் எழுதியது கவிஞர் வாலிதான்

பா.விஜய்யின் இரங்கற் பாவில் இருந்து..

கடல்போல் பாட்டு இயற்றியும்
கடல் தாண்டா கவியே…..
உடல் தாண்டித்தான் போயிருக்கிறாய்
உயிர் எங்கள் வசமே!

இசைப்பாவில் வந்த வாலியின் பிற பாடல்களுடன் மகிழ சொடுக்கவும் :

cooltext1123981540