குல்முகர் மலரே…

இசை வணக்கங்கள் ,

                   கவிஞர் வைரமுத்து அவர்களின் பிறந்தநாளை ஒட்டி  தொடர்ச்சியாக அடுத்தடுத்து அவரின் பாடல்கள் இசைப்பாவில் இடம்பெற உள்ளது..இன்று காணவிருக்கும் பாடல் பெரும்பாலானோரால் ரசிக்கப்பட்ட- ரசித்து கொண்டே இருக்கும் பாடல் . பாடல் இடம் பெற்ற படம் “மஜ்னு” – பாடல் “குல்முகர் மலரே..குல்முகர் மலரே..” ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அனைத்து பாடல்களும் அருமை. வரிகளில் உள்ள உணர்வுகள் பாடல்களை மெருகேற்றி அழகாக்கியுள்ளது. பாடியவர்கள் குரலும் மனதை வருடுகிறது.

vairamuthu 60

                  என் இசைபட்டியலில் பெரும்பாலான பாடல்கள் வைரமுத்து அவர்களில் பாடல்கள் இடம் பெறுவது வழக்கம்.மிகவும் அழகான வரிகளில் காதல் என்னும் மாலையை  வார்த்தைகள் என்னும் பூக்களால் தொடுத்துள்ளார் கவிஞர்.

                    மலர்கள் மென்மையாக இருப்பது வழக்கம். மென்மை கொண்ட மலர் தன்னை கொலை செய்வதாக தன் காதலியை கூறுகிறான்.  தன் இரவை மை இட்டுக்கொல்கிறாள் என்றும் தன்னை கவிஞன் ஆக்க வேண்டாம் என்றும் அழகிய வரிகளில் காதல் ததும்ப வரிகள் அமைத்து இருக்கிறார் கவிஞர். வாருங்களேன் இசை கொண்டு வரிகளில் நனையலாம்..

படம்:மஜ்னு
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : ஹரிஹரன் ,டிம்மி ,அனுபமா
பாடலாசிரியர் : வைரமுத்து

மலரே மலரே மலரே
மலரே முகவரி என்ன
உன் மனதில் மனதில்
மனதில் முகவரி என்ன
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஹோ

குல்முகர் மலரே
குல்முகர் மலரே
கொல்ல பாக்காதே
உன் துப்பட்டாவில் என்னை
கட்டி தூக்கில் போடாதே

(குல்முகர் மலரே குல்முகர் மலரே …)

தூக்கில் போடாதே
தூக்கில் போடாதே ….
மலரின் தொழிலே
உயிரை கொல்லுவதில்லையடி
மனிதன் உயிரை கொன்றால்
அதன் பேர் மலரே இல்லையடி
அதன் பேர் மலரே இல்லையடி

குல்முகர் மலரே…மலரே மலரே

உயிரைத் திருகி உந்தன்
கூந்தல் சூடிக்கொள்ளாதே
என் உதிரம் கொண்டு
உதட்டுச்சாயம் பூசிக்கொள்ளாதே
விண்மீன் பறிக்க விழியில்லை
என்று கண்களை பறிக்காதே
என் இரவை எடுத்துக் குழைத்துக்
குழைத்து கண் மை பூசாதே

என்னை விடவும் என்னை அறிந்தும்
யார் நீ என்று கேட்காதே
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்
என்னையும் கவிஞன் ஆகாதே(2)…

குல்முகர் மலரே….

உடைந்த வார்த்தையில்
உன் பெயர் சொல்லி உடனே ஓடுகிறாய்
என் ரத்த குழாயில்
புகுந்து கொண்டு சத்தம் போடுகிறாய்
கண்ணாடி நெஞ்சில்
கல்லை எரிந்து கலகம் மூட்டுகிராய்
இன்று ஐந்தரை மணிக்குள்
காதல் வருமென அறிகுறி காட்டுகிறாய்

மௌனம் என்பது உறவா பகையா
வயது தீயில் வாட்டுகிறாய்
ஏற்கனவே மனம் எரிமலை தானே
ஏனடி பெட்ரோல் ஊத்துகிறாய்
ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்..

மலரே மலரே…..

மலரே மலரே குல்முகர் மலரே…….

வைரமுத்து வாரம் தொடர்கிறது. நாளையொரு முத்தான பாடலுடன், இணைவோம். இசை எங்கும் பரவட்டும்.

vairamuthu click