முதல் மழை என்னை நனைத்ததே…!

சமீபக் கால திரைப்பாடல்களில் நான் மிகவும் விரும்பிக் கேட்கும் பாடல் இது.

என் விருப்பத்திற்கு பல காரணங்கள்.

முதல் காரணம் திரு ஹரிஹரன் அவர்களின் தேன்குரல். என்ன ஒரு வளமான குரல்! வார்த்தைகளை அழகாக உச்சரிக்கும் பாங்கு; பாடலின் காணொளியைப் பார்க்கத் தேவையே இல்லை; பாடலின் சூழலுக்கே நம்மைக் கொண்டு சென்று விடும் ஆற்றல் இவரது இழைந்து குழையும் குரலுக்கு உண்டு.

அவருக்கு ஈடு கொடுக்கும் திருமதி மஹதியின் அமுதக் குரல். அதுவும் இந்தப் பாடலின் ஆரம்பத்தில் இவரது குரலில் வரும் ‘ஹம்மிங்’ நம்மை ஒரு புதிய உலகிற்கு அழைத்துச் சென்று விடும்.

இது இருவர் சேர்ந்து பாடும் பாடலாக இருந்தபோதிலும் ஹரிஹரனுடன் தான் ஒரே இடத்தில் இருந்து கொண்டு இந்தப் பாடலை பதிவு செய்யவில்லை என்று தனது நேர்காணல் ஒன்றில் மஹதி கூறியிருந்தார். அவர் பாடும் வரிகள் தனியாக பதிவு செய்யப் பட்டதாகவும், தான் பாடும் வரிகள் தனியாக பதிவு செய்யப்பட்டு இரண்டையும் ‘மிக்ஸ்’ செய்தார்கள் என்றார் இந்தப் பாடகி.

அந்தக் காலத்தில்  நடிக நடிகையரே பாடவும் செய்வார்கள். இவர்கள் பாடிக் கொண்டே நடக்க, பின்னணி இசைப்பவர்கள் தங்கள் இசைக்கருவிகளை சுமந்து கொண்டு நடந்து கொண்டே இசைப்பார்களாம். பாவம் காமிராமேன். பாடும் நடிக நடிகையரை  மட்டும் படம் பிடிக்க வேண்டும்!

‘பீமா’ படத்தில் வரும் இந்தப் பாடலின் காட்சி அமைப்புக்கும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் கொடுக்கலாம்.

அமைதியான இசைக்கேற்ற அமைதியான இடங்கள்; நீல வானமும், அதனுடன் போட்டி போடும்  வெண்பனி போர்த்திய மலைகள், பச்சை வயல்கள், மஞ்சள் பூக்கள், அமைதியான நீர்நிலை என்று இயற்கையுடன் இயைந்த சூழல்.

விக்ரம், த்ரிஷா ஜோடி பொருத்தம் பற்றி சொல்லவே வேண்டாம். த்ரிஷாவின் நீல நிற உடைகளும் காட்சிக்கேற்றபடி மாறும் விக்ரமின் உடைகளும் இந்தப் பாடலுக்கு மெருகூட்டுகின்றன என்றால் அது மிகையாகாது.

‘ஹம்மிங்’ – கிலேயே  இசை மிதந்து மிதந்து செல்லும்.

பாடல் வரிகள் அற்புதம்!

கண்களை மூடிக்கொண்டு பாடலைக் கேளுங்கள்: உங்கள் மனமும் ‘கையை மீறும் ஒரு குடையாய் – மழைக்காற்றோடு தான் பறந்துவிடும்!

திரைப்படம்: பீமா
பாடல்: முதல் மழை
பாடகர்கள்: ஹரிஹரன், மகதி, R. பிரசன்னா
இசை: ஹரிஸ் ஜெயராஜ்
பாடல் ஆசிரியர்: நா. முத்துக்குமார்

மெஹு மேஹு மெஹு மேஹு பாஹி லாஹி மா..
மெஹு மேஹு மெஹு மேஹு பாஹி லாஹி மா..

ஹெய்..ஹெய்..ஹெய்..லூஒ..
மீஹெஹெஹீ..ஹி……ஹி……ரொஹிரொன..
மீஹெஹெஹீ..ஹி…..ஹி…..ரொஹிரொன..

முதல் மழை என்னை நனைத்ததே
முதல் முறை ஜன்னல் திறந்ததே…
பெயரே தெரியாத பறவை அழைத்ததே….
மனமும் பறந்ததே
இதயமும்…..ஹோய்….. இதமாய் மிதந்ததே
ம்ம்ம்ம்..

முதல் மழை நம்மை நனைத்ததே..
மூடிவைத்த ஜன்னல் திறந்ததே…
பெயரே தெரியாத பறவை அழைத்ததே….
மனமும் பறந்ததே
இதயமும்…..ஹும்ம்ம்ம்… இதமாய் மிதந்ததே

மெஹு மெஹு மெஹு பாஹி லாஹி மா
மெஹு மெஹு மெஹு பாஹி லாஹி மா..
ஹெய்..ஹெய்..ஹெய்..லூஒ..

மீஹெஹெஹீ..ரொஹிரொன..
மீஹெஹெஹீ..ரொஹிரொன..

கனவொடு தான் அடி நீ தோன்றினாய்..
கண்களால் உன்னைப் படம் எடுத்தேன்..

ஆ… ஆஆஆஅ..

என் வாசலில் நேற்று உன் வாசனை..
நீ நின்ற இடம் இன்று உணர்ந்தேன்..

ஏதுவும் புரியா புது கவிதை..
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்..
கையை மீறும் ஓரு குடையாய்..
காற்றோடுதான் நானும் பறந்தேன்..
மழை காற்றோடுதான் நானும் பறந்தேன்..

முதல் மழை என்னை நனைத்ததே
லலலலா….
முதல் முறை ஜன்னல் திறந்ததே
லலலலா……
பெயரே தெரியாத பறவை அழைத்ததே….
மனமும் பறந்ததே
இதயமும்.. ஹோய் ….. இதமாய் மிதந்ததே

ஓர் நாள் உன்னை நானும் காணாவிட்டால்..
என் வாழ்வில் அந்த நாளே இல்லை…..
ஆ…………
ஓர் நாள் உன்னை நானும் பார்த்தேவிட்டால்..
அந்நாளின் நீளம் போதவில்லை…..

இரவும் பகலும் ஓரு மயக்கம்..
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்..
உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்..
இறந்தாலுமே என்றும் இருக்கும்..
நான் இருந்தாலுமே என்றும் இருக்கும்..

ஊஹுஹுஹுஹ்ஹ்ஹ்..ஊஹுஹுஹுஹ்ஹ்ஹ்..
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
ஊஹ்ஹ்ஹ்ஹூஹ்ஹ்ஹ்ஹ்..
இதயமும்….ஹோய் …இதமாய் மிதந்ததே….

மெஹு மேஹு மெஹு மேஹு பாஹி லாஹி மா..
மெஹு மேஹு மெஹு மேஹு பாஹி லாஹி மா..
ஹெய்..ஹெய்..ஹெய்..லூஒ..
மீஹெஹெஹீ..ரொஹிரொன..
மீஹெஹெஹீ..ரொஹிரொன..

இசை மழை!
இசை மழை!

பாடலின் கர்த்தாக்களான ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களையும், கவிஞர் நா.முத்துக்குமாரையும் நாம் மறத்தல் கூடாதல்லவா!  இப்பாடலும் உங்கள் மனம் கவர்ந்த பாடலாக இருந்திருக்கும் என நம்புகிறோம். உங்கள் கருத்துகளையும், பங்களிப்புகளையும் இசைப்பா வழக்கம்போல் எதிர்பார்க்கிறது. 3000 தாண்டிய பார்வைகளுக்கு நன்றி.