பூங்காற்றிலே ! ! !

என்றும் மனதை வருடும் பாடல்களில் இன்னும் ஒன்று. இசையில் ஒரு மாஜிக். அனுபவத்தில் ஒரு சோகம். இந்த வார இறுதி இனிதாகட்டும்.

படம் : உயிரே
பாடலாசிரியர் : வைரமுத்து
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்: உன்னி மேனன், ஸ்வர்ணலதா

ஓ… கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை
கண்ணில் ஒரு வலியிருந்தால்
கனவுகள் வருவதில்லை….

பூங்காற்றிலே உன் சுவாசத்தை
தனியாகத் தேடிப்பார்த்தேன்
கடல் மேல் ஒரு துளி வீழ்ந்ததே
அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்

உயிரின் துளி காயும் முன்னே
என் விழி உனை காணும் கண்ணே
என் ஜீவன் ஓயும் முன்னே ஓடோடி வா
(பூங்காற்றிலே)

காற்றின் அலை வரிசை கேட்கின்றதா ?
கேட்கும் பாட்டில் ஒரு உயிர் விடும்
கண்ணீர் வளிகின்றதா ?
நெஞ்சு நனைகின்றதா ?

இதயம் கருகும் ஒரு வாசம் வருகிறதா ?
காற்றில் கண்ணீரை ஏற்றி,
கவிதைச் செந்தேனை ஊற்றி,
கண்ணே உன் வாசல் சேர்த்தேன்

ஓயும் ஜீவன் ஒடும் முன்னே ஓடோடி வா…
(பூங்காற்றிலே)
(கண்ணில் ஒரு…)

வானம் எங்கும் உன் விம்பம்,
ஆனால் கையில் சேரவில்லை

காற்றில் எங்கும் உன் வாசம்
வெறும் வாசம் வாழ்க்கையில்லை

உயிரை வேரோடு கிள்ளி
என்னைச் செந்தீயில் தள்ளி
எங்கே சென்றாயோ கள்ளி

ஓயும் ஜீவன் ஓடும் முன்னே
ஓடோடி வா
(பூங்காற்றிலே)

அழகிய அழகிய கிளி…

நண்பர்களுக்கு இசையுடன் வணக்கம்,

              எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய பாடலோடு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பாடல் இடம் பெற்ற படம் அபியும் நானும் வித்யாசாகர் இசையில் பாடல் விறுவிறுப்பாக அமைந்து இருக்கும் . வைரமுத்து வரிகள் கொண்டு பிரிவை எதிர்கொள்ளும் தந்தையின் மனநிலையை அப்படியே உணர்த்தியுள்ளார்.

              மகளின் பிரிவை  எதிர்நோக்கும் விதமாக  பாடல் அமைந்து இருக்கிறது. தந்தையின் மனவலியையும்  அவரின் நிலையையும் ஒவ்வொரு வரியிலும் உணரலாம்.அவர் ஆசையாக தேவதையாக வளர்த்த அப்பெண்ணை, அவள் சேரும் இடம் எப்படி இருக்குமோ என்கிற  உருகும் மனநிலையுடன்  நம் மனதை உருக வைக்கும் அளவிற்கு வடிவமைத்துள்ளார் பாடலாசிரியர்.பாடலை கேட்டவாறே நாமும் பெண் பிள்ளைகள் பெற்ற அப்பாக்களின் உணர்வுகளை உணரலாம் வாருங்கள்.

vairamuthu (1)

படம்:அபியும் நானும்
பாடல்: அழகிய அழகிய கிளி..
பாடலாசிரியர்: வைரமுத்து
இசை:வித்யாசாகர்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்

அழகிய அழகிய
கிளி ஒன்றை
பிடிபிடி பிடித்தது பூனை
பனி விழும் – பனி விழும்
மலர் ஒன்றை
பறி பறி பறித்தது  யானை
அய்யோ அய்யோ அநியாயம்
அய்யய்யோ

உயிர்போல் வளர்த்தேன்
உன் உணர்வும் பொய்யையோ
நூலானது இழையும் இழையும்
தரிதானடி வலிகளரியும் வலிதந்தது
எனது நிலையம் ,ஆசை கண்ணே

………

…………….

அழகிய அழகிய
கிளி ஒன்றை
பிடிபிடி பிடித்தது பூனை
பனி விழும் பனி விழும்
மலர் ஒன்றை
பறி பறி பறித்தது யானை

ஒஹ்ஹ…….

………

…………..

உயிரின் பிரிவு
புதுசாய்  மரணம்
உறவின் பிரிவு
பாதி மரணம்
விதியின் பிடியில்
நானே சரணம்
ஞானம் பழக
இதுவே தருணம்
என் வாசனை வாசனை
வாடையோ இன்று வானர சேனையிடம்
அட காடுகள் கூடுகள்ஆகுமோ – என் பைங்கிளிசேருமிடம்
என் கண்ணாடி கை மாறி கை சேருமோ….

…….

………….

நூலானது இழையும் இழையும்
தரிதானடி வலிகளரியும்
அது போன்றது எனது நிலையம்
ஆசை கண்ணே ….

……..

……………

தாய் தான் அழுதால் – கூடம் நனையும்
தந்தை அழுதால் – வீடே நனையும்
ஊமை வலியில் – உள்ளம் ஒளியும்
பெண்ணை பெற்றால் – உமக்கும் புரியும்
நான் ஆசையில் சேமித்த புதையலை – ஒரு அந்நியன் திருடுவதோ

அஹ்ஹா…..

எந்தன் நெஞ்சினில் ஆடிய நிலவினை
இன்று கிரகணம் தீண்டுவதோ
இனி என் வாழிவில்
பெண் வாழ்வு என்னாகுமோ
மகள் என்பது முதலில் இனிமை
மகள் என்பது பிரிவில் கொடுமை
முடிவென்பது முதுமை தனிமை
போய் வா பெண்ணே ….

மீண்டு ஓர் இனிய பாடலுடன் சந்திக்கலாம் !

ஒருகிளி ஒருகிளி

நண்பர்களுக்கு இசையுடன் கூடிய வணக்கங்கள்,

            இன்று இடம் பெற இருக்கும் பாடல் காதல் கலந்த வரிகள் கொண்ட பாடல். வாலி அவர்கள் வரிகளோடு இசை மெருகேற…  காதல் வரிகளில் நனையலாம். மிகவும் பிரபலாமாகாவிட்டாலும், பாடல் கேட்க மென்மையும் அருமையாக இருக்கிறது. ஸ்ரேயா கோஷல் மற்றும் சதீஷ் சக்கரவர்த்தி பாடிய பாடல் “ஒருகிளி ஒருகிளி “, இடம் பெற்ற படம் “லீலை“. இந்த பாடலை லூப்பில் போட்டு கேட்க சலிப்பே வராது .

      ஹீரோ நாயகிமீது காதல் கொண்டு அவளை சுற்றுகிறான், அவளும் தன் காதலை அவனிடம் கூறி வியந்து, உருகி மெழுகாக பாடுவது போல் அமைக்கப் பெற்றுள்ளது. குரலின் மென்மை வேறுலக்திற்கே அழைத்து செல்வது போல் உள்ளது பாடலை ரசிப்போம் வாருங்களேன்..

vaali

படம் : லீலை
இசை : சதீஷ் சக்கரவர்த்தி
பாடலாசிரியர் : வாலி
பாடியவர்கள் : ஷ்ரேயா கோஷல் , சதீஷ் சக்கரவர்த்தி

ஒருகிளி ஒருகிளி சிறுகிளி
உன்னைத் தொடவே அனுமதி

ஒரு துளி ஒரு துளி
வழிகிறதே விழிவழி

உனக்குள் நான் வாழும்
விவரம் தான் கண்டு
வியக்கிறேன் ..வியக்கிறேன்

எனக்கு நானல்ல
உனக்குத்தான் என்று உணர்கிறேன்

நிழலென தொடர்கிறேன்

ஒருகிளி ஒருகிளி சிறுகிளி ….

விழி அல்ல விரலெது
ஓர் மடல் தான் வரைந்தது
உயிரல்ல உயிலது
உனக்குத்தான் உரியது…

இமைகளில் இடையில் நீ
இமைப்பதை நான் தவிர்க்கிறேன்
விழிகளில் வழியில் நீ
உறக்கம் வந்தால் தடுக்கிறேன்..

காதல் தான்….
எந்நாளும் ஒரு வாரத்தைக்குள் வராதது

காலங்கள் சென்றாலும்
அந்த வானம் போல் விழாதது

ஒருகிளி ஒருகிளி….

தூரத்து மேகத்தை
துரத்திச் செல்லும் பறவை போலே
தோகையே …
உன்னை எண்ணி நான்
தேடி வருவேன் இங்கே..

பொய்கை போல் கிடந்தவள்
பார்வை என்னும் கல்லெறிந்தாய்
தேங்கினேன் உன்கையில்
வழங்கினேன் இன்றே….

தோழியே உன் தேகமென்னும்
தென்றல் தான் தொடாததோ…

தோழனே உன் கைகள் தொட
நாணம் தான் விடாததோ

ஒருகிளி ஒருகிளி…

 

 இனிய பாடலுடன் மீண்டும் சிந்திப்போம் !