இசையின் வணக்கம்
கும்கி படத்தில் வரும் “எல்லா ஊரும் “ என்று பாட்டை போல, கயல் பாத்தில் வரும் பாடலிது. நாடோடி வாழ்கை, ஏது வந்தாலும் இலகுவாக எடுத்துக்கொள்ளும் மனம். சந்தோஷத்தை அளவில்லாமல் நுகரும், இளமை காளை பருவத்தில் உள்ள கதாநாயகனின் மனத்துடிப்பு. இயற்கையுடன் இயந்து வாழும் அவனது நாடோடி வாழ்க்கை, சிறு சிறு விஷயங்களையும் சிலிர்ப்புடன் அனுபவிக்கிறது. இமான் இசை உற்சாகமூட்டுகிறது. யுகபாரதி வரிகள், நாமும் அப்படி இருக்கலாமே என்று ஏங்க வைக்கிறது. ஹரிச்சரன் குரல் துள்ளல் ஆட்டம் போடா வைக்கிறது. ரசித்து மகிழலாம் வாருங்கள்.
பாடல்: பறவையாப் பறக்கிறோம்
இசை: இமான்
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்: ஹரிசரண்
படம்: கயல்
பறவையாப் பறக்கிறோம்,
காத்துல மெதக்குறோம்,
போற வழியில,
பூக்களா சிரிக்கிறோம்!
எங்க ஊரு ஒலக,
ஊரா நினைக்கிறோம்!
ஏ வீடு வாசல் வீதி
ஒன்னும் வேணாம்!
ஏ காடு மேடு கடலத்
தாண்டி போவோம்!
சூரியன் போல
நாங்க சுழலுவோம்,
சோகம் வந்தா
குப்பையில வீசுவோம்!
பூமி பந்து மேல
ஒத்துயடி பாத போடுவோம்.
அந்த வானவில்லு,
எங்களுக்கு சோடி.
தினம் வட்ட நிலா,
கூட சில்லு ஆடி.
மேகம் ஏறி,
வெரசா நடப்போமே.
அந்த மின்னல் கொடிய,
கயிறா திரிப்போமே!
பறவையா…
ஏ ஆடு மாடு கோழி
எங்களுக்கு கூட்டு!
அத போல வாழ
தேவையில்ல நோட்டு!
கண்டத வாங்கி
சேர்க்க நினைக்கல!
ஒரு தந்திரம் போட்டு
ஊர கெடுக்கல!
நாளை என்ன ஆகும்
எண்ணி வாழ மாட்டோம்!
இந்த சின்னம்சிறு பிஞ்சு போல
உள்ள வர துள்ளி விளையாட
காலம்பூரா கவல கிடையாதே
நானா போற பாத
எதுவும் முடியாதே
பறவையா பறக்கிறோம்
காத்துல மெதக்குறோம்!
மீண்டும் ஒரு நல்ல பாடலுடன் இணைவோம்