முன்பே வா… என் அன்பே வா!

இனிமையான இசை வணக்கம்.

எடுத்து ஓர் அம்பை எய்வதற்குச்  சுக்ரீவர்களும் விரும்பிய வாலி!
எடுத்து ஓர் அம்பை எய்வதற்கு
சுக்ரீவர்களும் விரும்பிய வாலி!

இன்று வாலி பிறந்த நாள். சிறப்பு பதிவு இடலாம் என்று எண்ணியவுடன் இப்படல் மனதினுள் வந்தது. சமீபத்திய திரைப்பாடல்களைக் கேட்கிற எல்லோருக்கும் விருப்பமான பாடல்களுள் இதுவும் ஒன்றாக கண்டிப்பாக இருக்கும். இப்பாடலுக்கு பல சிறப்புகள் உண்டு. எனினும் முக்கியமானது. கவிஞர் வாலிக்குப் பிடித்த வாலியின் பாடல் என்ற பெயர் பெற்ற பாடல் இதுவாகும். தான் எழுதியதில் தனக்குப் பிடித்த பாடல்கள் என இரு பாடல்களைக் குறிப்பிட்டுள்ளார் வாலி. அதில் இடம்பெற்ற பிற்காலத் தமிழ்ப்பாடல் இதுவாகும். காட்சியமைப்பிலும், இசையமைப்பிலும்.

இப்பாடலுக்கு போட்ட மெட்டின் அடிப்படையில் வாலி “அன்பே வா… என் முன்பே வா!” என்று எழுதினாராம். முழுப் பாடலையும் பார்த்துவிட்டு, இசையமைப்பாளர் ரஹ்மான் இப்பாடலின் முதல் வரியை மட்டும் மாற்றியமைக்கச் சொல்லியிருக்கிறார். சில மெட்டுகள் போடும்போதே அவற்றின் வெற்றி உறுதியாகிவிடும். அதை உணர்ந்த ரஹ்மான் இப்பாடலின் முதல் வரி “முன்பே வா…என் அன்பே வா!” என்று மாற்றச் சொல்லியிருக்கிறார்.

ஏன் மாற்ற வேண்டும்? வாலிக்கும், ரஹ்மானுக்குமான  ஹிட் ரகசியம் அது! இருவரும் இணைந்த பாடல்களில் ஹிட் அடித்த பாடல்களில் ‘மகர’ வருக்கத்தில் அமைந்த பாடல்கள் பெரும் வெற்றி அடைந்தவை. (உதா: முக்காபுலா, மயிலிறகே,….) (மற்ற பாடல்கள் தெரிந்தால் குறிப்பிடவும்.) இப்பாடலும் அதே அளவு ஹிட் ஆகும் என்கிற எதிர்பார்ப்பில் உருவான பாடல்.

எதிர்பார்ப்பிற்கும் மேலான வெற்றியடைந்த பாடல் இது. காரணம்? பாடகர்களின் வசீகரிக்கும் குரலும், அதைக் காட்டிலும் வசீகரிக்கும் இசையும், அதை சிறப்பான காட்சியமைப்பால் திரையில் காண்பித்த இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என ஒரு குழுவே இப்பாடலின் மாபெரும் வெற்றிக்குப் பின்புலமாக இருந்தது அனைவரும் அறிந்ததே.

கவிஞர் வாலி, ரஹ்மான், ஷ்ரேயா கோஷல், நரேஷ் அய்யர் என பணியாற்றிய அனைவரின் சிறந்த பாடல்கள் பட்டியலில் இடம் பெறும் இனிய பாடல் இது. வேறென்ன வேண்டும். வாலியின் உடலுக்கு மட்டும்தான் இறப்பு. வரிகளுக்கல்ல என்பதை இன்னுமொரு முறை அழுத்தமாக எடுத்துரைக்கும் பாடல் இது. பாடலை ரசியுங்கள்.

பாடலாசிரியர்: வாலி
படம்: சில்லுனு ஒரு காதல்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள்: ஷ்ரேயா கோஷல், நரேஷ் அய்யர்

முன்பே வா என் அன்பே வா!
ஊனே வா  உயிரே வா!
முன்பே வா என் அன்பே வா!
பூப்பூவாய்ப் பூப்போம் வா!

நான் நானா? கேட்டேன் என்னை நானே!
நான் நீயா? நெஞ்சம் சொன்னதே!

(முன்பே வா….)

ரங்கோ…ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம்போட்ட கைகள்
வாழி வளையல் சத்தம்
ஜல்ஜல்

(முன்பே வா….)

ரங்கோ…ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய்
கோலம்போட்ட கைகள்
வாழி
சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன!

பூவைத் தாய்ப் பூ வைத்தாய்
நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
மணப் பூவைத்துப் பூவைத்துப்
பூவைக்குள் தீ வைத்தாய் ஓஓ!

தேனே நீ நீ மழையில் ஆட
நான் நான் நான் நனைந்தே வாட
என் நாளத்தில் உன் ரத்தம்
நாடிக்குள் உன் சத்தம்
உயிரே ஓஒ

தோளில் ஒரு சில நாழி
தனியென ஆனால் தரையினில் மீனாய்… ம்ம்ம்ம்ம்

(முன்பே வா….)

நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா?
நாம் வாழும் வீட்டுக்குள்
வேறாரும் வந்தாலே தகுமா?

தேன் மழை தேக்கத்து நீராய்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா
நான் சாயும் தோள் மேல்
வேறாரும் சாய்ந்தாலே தகுமா?

நீரும் செம்புலச் சேறும்
கலந்தது போலே
கலந்தவர் நாம்

 ( முன்பே வா)

(ரங்கோ ரங்கோலி)

இசைப்பா +
இப்படத்தின்  அனைத்து பாடல்களையும் எழுதியது கவிஞர் வாலிதான்

பா.விஜய்யின் இரங்கற் பாவில் இருந்து..

கடல்போல் பாட்டு இயற்றியும்
கடல் தாண்டா கவியே…..
உடல் தாண்டித்தான் போயிருக்கிறாய்
உயிர் எங்கள் வசமே!

இசைப்பாவில் வந்த வாலியின் பிற பாடல்களுடன் மகிழ சொடுக்கவும் :

cooltext1123981540