நண்பர்களுக்கு இசையுடன் கூடிய வணக்கங்கள்,
இன்று இடம் பெற இருக்கும் பாடல் காதல் கலந்த வரிகள் கொண்டவை. வாலி அவர்கள் காவிய கவி நடையுடன் இசை மெருகேற…பாடல் ரம்மியமாய் அமைத்துள்ளது. மிகவும் பிரபலாமாகாவிட்டாலும் பாடல் கேட்க மென்மையும் அருமையாக இருக்கிறது. பாடல் இடம் பெற்ற படம் பண்ணையாரு பத்மினியும்,பாடல் எனக்காக பொறந்தேனே எனதழகி.
காதலுக்கு காலம் இல்லை ! வயசும் இல்லை ! என்பதை அழகாக சித்தரிக்கும் பாடல்.. வரிகள் மொத்தம் அருமை.. பின்னணி இசை மற்றும் பாடியவர்கள் என்று அனைத்தும், கேட்டவுடன் வசீகரிக்கும் விதமாக அமைந்து இருக்கிறது.
மனைவியானவளை காதலிக்க பெரும்பாலும் நேரம் கிடைக்காவிடினும் ..சின்ன சின்ன சந்தர்பங்களை ஆண்கள் அழகாக கையாளுவர். வாழ்க்கை பயணம் தொடர காதல் வளர்ந்து கொண்டே தான் இருக்கும். சொல்லி கொண்டே போகலாம் காதலைப் பற்றி.. எஸ் பி பி-யின் இளைய சாரீரம் போல் ஒலிக்கிறது சரணின் குரல்.
***
(ஜி-பிளஸ் வட்டத்தில்) தமிழ் எழுதியது :
படம் பார்த்து விட்டு வந்த பிறகு “ஒனக்காக பொறந்தேனே” பாட்டைக் கேட்க நினைத்தேன்… மடிகணினியில் எங்கோ ஓர் மூலையில் கிடந்த அந்த கோப்பை (!) எடுத்து ஒலிக்க விட்டேன்
முதல் முறை மெல்லிய வசீகரமாக இருந்தது. மீண்டும் கேட்கத் தூண்டும் இசை. மீண்டும் மீண்டும் கேட்டவுடன் வரிகளை விட்டுவிட்டு இசையை மட்டும் உன்னிப்பாகக் கேட்டேன். என்னளவில் உணர்ந்த ஒரு விஷயம் சரியோ தப்போ தெரியவில்லை.. ஆனால் அசந்தேவிட்டேன்…
பாடலின் முதல் இடையிசையைக் கேட்டிருக்கிறீர்களா? அப்படியே MSV காலத்திற்கான tribute! அதைவிட ஆச்சர்யம் இரண்டாவது இடையிசை… அப்படியே ராஜா’ங்கம்! இரண்டு இடையிசைகளிலுமே கோரஸ் இருக்கும்…ஆனால் இரண்டிலும் பெரும் வித்தியாசம் இருக்கும்.. ….இரண்டாவதில் 80-களின் லாலாலா…. இரண்டாவதில் புல்லாங்குழல் உபயோகம் சான்ஸே இல்லை!! அற்புதம்! அதிலும் அதைத் தொடர்ந்து வரும் பீட் அப்படியே 80-களின் ராஜா…
***
இங்கே இதனை அவரிடம் (தமிழிடம்) அனுமதி பெறாமலேயே பதிவு செய்கிறோம், எங்கள் நோக்கம் இசையை அவரைப் போல சரியா ரசிக்க தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பது. ஒரு காலம் சார்ந்த படத்துக்கு, மிக சரியான இசையப் பொருத்திய ஜஸ்டின் அவர்களை வாழ்த்த வேணும். பாடலை ரசிக்கலாம் வாருங்கள்.
பாடல்: எனக்காக பொறந்தாயே எனதழகி
படம் :பண்ணையாரும் பாத்மினியும்
இசை :ஜஸ்டின் பிரபாகரன்
பாடலாசிரியர் : வாலி
பாடியவர்கள் : எஸ்.பி.சரண்,அனு ஆனந்த்
எனக்காக பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி
அ…….அ………ஆ…….
எனக்காக பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி
உனக்கு மாலையிட்டு
வருஷங்கள் போனா என்ன ?
போகாது உன்னோட பாசம் !
எனக்கு என்மேலெல்லாம் ஆச இல்ல
உன் மேல தான் வச்சேன் !
என்ன ஊசியின்றி நூலுமின்றி
உன்னோடதான் தச்சேன் !
உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
உனக்கு வாக்கப்பட்டு
வருஷங்கள் போனால் என்ன ?
போகாது உன்னோட பாசம் !
எனக்கு என்மேலெல்லாம் ஆச இல்ல
உன் மேல தான் வச்சேன்
என்ன ஊசியின்றி நூலுமின்றி
உன்னோடதான் தச்சேன்
லைய் லாய் லாய் லல்லே
லல்லாய் லலலல்லாய்
லைய் லாய் லாய் லல்லே
லல்லாய் லலலல்லாய்
ஒதுங்காதே தொட்டு
உசுப்பேத்தி விட்டு
உனக்கா ஒவ்வொரு மாதிரி
நாக்குல நெஞ்சில
பச்சைய குத்தி வச்சேன்
இதுதாண்டி ரதம்
இதலதான் நிதம்
உன்னத்தான் உட்காரவச்சி
நா ராசாத்தி ராசனா
ஊர்வலம் வந்திடுவேன்
உன்னோடு நான் சேர
மென்மேல வந்து ஒரு
நேந்து தான் சாமிக்கு
வப்பேனே வெள்ளாடு !
ஆத்தோரம்… காத்தாடும்…
காத்தோடு… நாத்தாடும்…
நான் பாத்தாட்டமா நாத்தாட்டமா
உன்னால அழும் நாளும்
நீ மாலையிடும் வேளையில
கேட்குதா என் தோடு !
உனக்காக புறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
(கோரஸ்)
உனக்கு மாலையிட்டு
வருஷங்கள் போனால் என்ன ?
போகாது உன்னோட பாசம்
தன்னனனான தன்னனான
நன்னானானனான…
இப்பாடலைப் போல் “உனக்காக பிறந்தேனே ” என்ற பாடலும் இதே படத்தில் அமைந்துள்ளது விரைவில் பதிவாக இசைப்பாவில் இடம் பெறலாம்.