இசை வணக்கம்
ஹாரிஸ் ஜெயராஜ் பாடலுடன் இன்று உங்களை சந்திக்கிறோம். யான் ஓடத்தில் வந்த நெஞ்சே நெஞ்சே பாடல், ஏற்கனவே இசைப்பாவில் வெளிவந்துள்ளது. அதனை தொடர்ந்து பாம்பே ஜெயஸ்ரீ குரலில் ஒரு துள்ளலான பாடல். கேகே-வின் குரல் உற்சாக பிழம்பாக குதிக்கிறது, இசைக் கோர்வை அதி வேகத்தில் மோகம் கொள்ளச் செய்கிறது. நடு நடுவே என்.எஸ்.கே ராம்மியாவின் இடைக்குரல் பாடலுக்கு ஒரு முழுமையை தருகிறது.
பாடலைக் கேட்டுக் கொண்டே வரிகளை எழுத முற்பட்டேன். சுத்தமான தமிழில், செமையான கவிதை என்றே சொல்ல வேண்டும். தாமரையின் தனி அடையாளம் ! குந்தக பூமியில், கற்கண்டு மாமழை என்று அழகான வெளிப்பாடுகள். நுதரும், கமரும் என்ற சொற்களை இதுவரை கேட்டதில்லை, பொருள் தெரிந்தால் சொல்லுங்கள்.
படம் : யான்
பாடல் : நீ வந்து போனது…
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : தாமரை
பாடியவர் : பாம்பே ஜெயஸ்ரீ, கே கே,
என் எஸ் கே ரம்யா
நீ வந்து போனது
நேற்று மாலை
நான் என்னை தேடியும்
காணவில்லை
வெண்பனி மூடத்தின்
போர்வையாக
எங்கும் வெள்ளை….
என் மனம் தேடிய
வானவில்லை
என் காது ஏங்கிய
வாழ்வின் சொல்லை
நீ தந்த நேரத்தில்
காற்றில் கூட
அசை வில்லை….
சொப்பனம் கண்ட பின்
கண்ணைக் காணோம்
சொல்லிய வார்த்தையில்
மொழியை காணோம்
கற்பனை செய்த பின்
காண நீயில்லையே
குந்தக பூமியில்
மேகமானாய்
கற்கண்டு மாமழை
தந்து போனாய்
என் உயிர் வாழ்ந்திடும்
நேரம் உன் கையிலே
நீ வந்து போனது….
திங்கள் செவ்வாய்
இன்றே நகரும்
என்நாளென்று
இன்பம் நுதரும்
நான் கண்டேன்…
என் மரணம்
நெஞ்சை உண்ணும்
தொண்டை கமரும்
பஞ்சை பற்றி
செந்தீ பரவும்
ஓ எங்கே…
என் அமுதம் ?
திரை சீலைகள்
இல்லாத
என் ஜன்னல் ஊடாக
தேடினேன்
வெளி ஓசைகள இல்லாமல்
வாய்க்குள்ளே உன் பாடல்
பாடினேன்…
என்னை உன்
உள்ளம்கை மீது
நீ தாங்கி தாலாட்டு,
ஆடினேன் !
சாகாவரம்…
நீ தந்தால்
நான் வாழ்கிறேன்
நீ வந்து போனது…
விண்ணை விட்டு
செல்லும் நிலவே
பெண்ணை கண்டு
நின்றால் நலமே
ஓ இங்கே…
நான் தனியே
முன்னும் பின்னும்
முட்டும் அலையே
எங்கே எங்கே
எந்தன் கரையே
நீ சொன்னால்…
சேர்த்திடுவேன்
கடல் கண்ணாலே
நீ பார்த்த
பார்வைகள் போதாமல்
ஏங்கினேன்
சிறு ஓசைகள்
கேட்டாலும்
நீ தானே என்றே
நான் தேங்கினேன்
வெறும் பிம்பத்தை
நீ என்று
கை நீட்டி ஏமாந்து
போகிறேன் !
கள்ளம் இல்ல
வெள்ளை நிலா
நீதானடி
நீ வந்து போனது…
இன்னுமொரு இனிய பாடலுடன் களம் காண்கிறோம். இசை எங்கும் இனிக்கட்டும், தமிழ் எங்கும் பரவட்டும்.