அனார்கலி..அனார்கலி..

இசையுடன் நண்பர்களுக்கு வணக்கம்,

                               காதல் என்றாலே தனி உலகமாக வாழும் காதலர்கள் தங்கள் காதலை ரசிப்பதும் அழகே அந்த வகையில் அனார்கலி பாடல் வரிகளும் இசை அமைத்த விதமும் மனதை கவர்ந்த வண்ணம் என்றே கூறலாம்.

                                 ஏ.ஆர்.ரஹமான் இசையமைக்க பா.விஜய் அவர்களின் வரிகள் இணைந்து காதல் கசியும் அருவியாகவே பாடல் இருக்கிறது.பாடியவர்களின் மென்மைகலந்த குரலும் நம்மையும் காதல் வலைக்கு ஈர்ப்பது போன்று அமைந்து இருக்கிறது.

                                காதல் என்னும் அழகிய உலகிற்குள் சென்ற இரு மனங்கள் ஒருவரை ஒருவர் வருணித்து கொண்டு தங்கள் காதலை வெளிப்படுத்துகின்றனர் . ஒருவரை ஒருவர் ரசித்தும் தங்களின் அழகிய உணர்வுகளை பகிர்ந்தும் காதலில் கரைகின்றனர். காதலில் இணைந்த மனங்கள் தங்கள் முகவரியாக  இடமாற்றிக்கொள்கின்றனர், தத்தம் முகவரியாகவே ரசிக்கின்றனர்.

படம்: கண்களால் கைது செய்
பாடலாசிரியர்: பா.விஜய்
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள்: கார்த்திக், சித்ரா சிவராமன், கதிர் ,
உஸ்தாத் குலாம் முஸ்தபா கான்

கரி ரிசாசசா
கரி ரிசாசசா
கரி ரிசாசசா
கரி ரிசாசசா

ஆனார்கலி…. ஆனார்கலி
ஆகாயம் நீ பூலோகம் நீ
உலகத்திலே மிகப்பெரும் பூவும் நீயடி
நதிகளிலே சின்ஞ்சுற நதியும் நீயடி…
சந்தித்தேனடி உன்கண்களால்…
சுவாசித்தேனடி உன்பார்வையாள்…

ஆனார்கலி… ஆனார்கலி
ஆகாயம் நீ புலோகம் நீ
சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன்
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டு பிடித்தேன்
குளிர் காற்று நீ …நான் பாய்மரம்
நதி காற்று நீ நான் தாவரம்..
ஆனார்கலி…ஆனார்கலி
ஆகாயம் நீ புலோகம் நீ

இயந்திர மனிதரைப்போல் உன்னையும் செய்வேனே…
இருவிழி பார்வைகளால் உன்னையும் ரசித்தேனே

அழகிக்கு யெல்லாம் துணிவதிகம்
அழகியின் திமிரில் ருசியதிகம்
அதை இன்றுநானே உன்னிடம் கண்டேன்

கவிஞனுக்கெல்லாம் குறும்பதிகம்
கவிஞனின் குறும்பில் சுவை அதிகம்
அதை இன்றுநானே உன்னிடம் கண்டேன்

நடைநடந்து போகையில்…நீ இலக்கணமே
நாணம் கொண்டு பார்கையில் நீ இலக்கியமே
ஆனார்கலி….ஆனார்கலி
ஆகாயம் நீ புலோகம் நீ

நறுமணம் என்பதற்கு முகவரி பூக்கள் தானே
என்மனம் என்பதற்கு முகவரி நீத்தானே…
என்னிடம் தோன்றும் கவிதைக்கெல்லாம் முதல்வரி தந்த முகவரி நீ
இருதயம் சொல்லும் முகவரி நீ தான்…
இரவுகள் தோன்றும் கனவுகெல்லாம் இருப்பிடம் தந்த முகவரி நீ
என்னிடம் சேரும் முகவரி நீ தான்….
மழைத்துளிக்கு மேகமே முதல் வரி
உன்னிதழிலில் மௌனமே உயிர் வரியோ..

ஆனார்கலி….ஆனார்கலி
ஆகாயம் நீ பூலோகம் நீ
சிரிப்பும் அழுகையும் சேரும் புள்ளியில் என்னை தொலைத்தேன்
இசையும் கவிதையும் சேரும் புள்ளியில் கண்டு பிடித்தேன்
சந்தித்தேனடி உன்கண்களால்…
சுவாசித்தேனடி உன்பார்வையாள்…