நீ வந்து போனது நேற்று மாலை – யான்

இசை வணக்கம்

ஹாரிஸ் ஜெயராஜ் பாடலுடன் இன்று உங்களை சந்திக்கிறோம். யான் ஓடத்தில் வந்த நெஞ்சே நெஞ்சே பாடல், ஏற்கனவே இசைப்பாவில் வெளிவந்துள்ளது. அதனை தொடர்ந்து பாம்பே ஜெயஸ்ரீ குரலில் ஒரு துள்ளலான பாடல். கேகே-வின் குரல் உற்சாக பிழம்பாக குதிக்கிறது, இசைக் கோர்வை அதி வேகத்தில் மோகம் கொள்ளச் செய்கிறது. நடு நடுவே என்.எஸ்.கே ராம்மியாவின் இடைக்குரல் பாடலுக்கு ஒரு முழுமையை தருகிறது.

பாடலைக் கேட்டுக் கொண்டே வரிகளை எழுத முற்பட்டேன். சுத்தமான தமிழில், செமையான கவிதை என்றே சொல்ல வேண்டும். தாமரையின் தனி அடையாளம் ! குந்தக பூமியில், கற்கண்டு மாமழை என்று அழகான வெளிப்பாடுகள். நுதரும், கமரும் என்ற சொற்களை இதுவரை கேட்டதில்லை, பொருள் தெரிந்தால் சொல்லுங்கள்.

படம் : யான்
பாடல் : நீ வந்து போனது…
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : தாமரை 
பாடியவர் : பாம்பே ஜெயஸ்ரீ, கே கே,
என் எஸ் கே ரம்யா

நீ வந்து போனது
நேற்று மாலை
நான் என்னை தேடியும்
காணவில்லை
வெண்பனி மூடத்தின்
போர்வையாக
எங்கும் வெள்ளை….

என் மனம் தேடிய
வானவில்லை
என் காது ஏங்கிய
வாழ்வின் சொல்லை
நீ தந்த நேரத்தில்
காற்றில் கூட
அசை வில்லை….

சொப்பனம் கண்ட பின்
கண்ணைக் காணோம்
சொல்லிய வார்த்தையில்
மொழியை காணோம்
கற்பனை செய்த பின்
காண நீயில்லையே

குந்தக பூமியில்
மேகமானாய்
கற்கண்டு மாமழை
தந்து போனாய்
என் உயிர் வாழ்ந்திடும்
நேரம் உன் கையிலே

நீ வந்து போனது….

திங்கள் செவ்வாய்
இன்றே நகரும்
என்நாளென்று
இன்பம் நுதரும்
நான் கண்டேன்…
என் மரணம்

நெஞ்சை உண்ணும்
தொண்டை கமரும்
பஞ்சை பற்றி
செந்தீ பரவும்
ஓ எங்கே…
என் அமுதம் ?

திரை சீலைகள்
இல்லாத
என் ஜன்னல் ஊடாக
தேடினேன்

வெளி ஓசைகள இல்லாமல்
வாய்க்குள்ளே உன் பாடல்
பாடினேன்…

என்னை உன்
உள்ளம்கை மீது
நீ தாங்கி தாலாட்டு,
ஆடினேன் !

சாகாவரம்…
நீ தந்தால்
நான் வாழ்கிறேன்

நீ வந்து போனது…

விண்ணை விட்டு
செல்லும் நிலவே
பெண்ணை கண்டு
நின்றால் நலமே
ஓ இங்கே…
நான் தனியே

முன்னும் பின்னும்
முட்டும் அலையே
எங்கே எங்கே
எந்தன் கரையே
நீ சொன்னால்…
சேர்த்திடுவேன்

கடல் கண்ணாலே
நீ பார்த்த
பார்வைகள் போதாமல்
ஏங்கினேன்

சிறு ஓசைகள்
கேட்டாலும்
நீ தானே என்றே
நான் தேங்கினேன்

வெறும் பிம்பத்தை
நீ என்று
கை நீட்டி ஏமாந்து
போகிறேன் !

கள்ளம் இல்ல
வெள்ளை நிலா
நீதானடி

நீ வந்து போனது…

இன்னுமொரு இனிய பாடலுடன் களம் காண்கிறோம். இசை எங்கும் இனிக்கட்டும், தமிழ் எங்கும் பரவட்டும்.

நெஞ்சே நெஞ்சே…. – யான்

இவர் தமிழ் உச்சரிப்பை பாராட்டாதவர்களே இல்லை. 90களில், பலபல மெலோடிகளின் சொந்தக்காரர் இவர்: உன்னி கிருஷ்ணன். இப்பொழுது யான் என்னும் படத்தில் ஒரு சோகமான காதல் கீதத்தில் பாடியுள்ளார். தொழிநுட்ப வளர்ச்சியா, அல்லது இவரது தனித்துவமான நேர்த்தியா என்று தெரியவில்லை, குரல் இன்னும் அப்படியே இருக்கிறது, ஈர்க்கிறது. பாந்தமான தாலாட்டு போல, அமைந்துள்ள பாடல். வரிகளுக்கு பிரதான முக்கியத்துவம் கொடுத்து, குரலில் உணர்ச்சியை குழைத்து, இசையை குறைத்து, வெகு சிறப்பாக வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். கேபா அவர்களின் கித்தார் எப்பொழுதும் போல் விளையாடியுள்ளது. இன்னும் ஒரு இனிய பாடல் நம்முடன் சேர்க்கிறது, காற்றோடு கனக்கிறது.


படம்: யான்
பாடல்: நெஞ்சே நெஞ்சே
பாடலாசிரியர்: கபிலன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சின்மயி

நெஞ்சே நெஞ்சே
காதல் நெஞ்சே
என்னை நீ தான்
என்னடி செஞ்சே ?

பூமி இங்கே
மேகம் அங்கே
ரெண்டை சேர்க்கும்
மழைதுளி எங்கே ?

தூரம் நின்று நீ
என்னை கொல்லாதே !
வேரும் பூவும்
வேறென்று சொல்லாத !

காதல் அருகேயில்லை
அதனால் தொல்லை
அறிவேனோ மனமே ?

உன்னை மறந்தாபோனேன் ?
இறந்தா போனேன் ?
வருவேன் ஓர் தினமே !

நெஞ்சே நெஞ்சே…

பூவை தொட்டு வந்தாலும்
கையில் வாசம்
விட்டு போகாதே !

உந்தன் மனம் தான்
மறப்பேனோ ?
அதை மறந்தால்
இறப்பேனோ ?

கண்ணை மூடி
தூங்க வேண்டும்
ஆடு பெண்ணை
அழகிய லாலி

காதல் கண்கள்
தூங்கும் போது
பூவே உந்தன்
புடவையே தூளி

என்னை விட்டு நான்
போனேன் தன்னாலே
கண்ணீரில் மீனானேன்
உன்னாலே !

பேச வழியேஇல்லை
மொழியே இல்லை
தவியாய் நான்
தவித்தேன்…

காதல் கனவே
உன்னை முழுதாய்
காண….
பிறையாய் நான்
இளைத்தேனே !

நெஞ்சே நெஞ்சே
காதல் நெஞ்சே
என்னை நீ தான்
என்னடி செஞ்சே ?

பூமி இங்கே
மேகம் அங்கே
ரெண்டை சேர்க்கும்
மழைதுளி எங்கே ?

இன்னமொரு பாடலுடன் இனிதே சந்திப்போம்.

லேசா லேசா…

கவிஞர் வாலி காற்றோடு கரைந்து சரியாக ஒரு வருடமாகிவிட்டது. இன்னுமின்னும் அவரது கடைசி பாடல்கள் வெளிவர உள்ளன. இசைப்பா அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வாலி வாரம் ஏற்படுத்துயது. பல பரிணாமங்கள் கொண்ட அவரது பாடல்கள், வரிசையாக இங்கு வெளிவந்தன. (சொடுக்கவும்) இன்றும் அவரது பாடல்கள் நம்மை இன்பம் கொள்ளசெய்கின்றன. கவிஞர் நெல்லை ஜெயந்தா அவரது பண்புகள் பற்றி எழுதி இருக்கிறார் -> வாசிக்கவும்

வாலியின் வாழ்வு
வாலியின் வாழ்வு

லேசா லேசா என்னும் படத்தில் வரும் அற்புதமான பாடல், படத்தில் எங்கும் பெரிதாக பயன்படாமல், பல உணர்வுகளை குவிக்கும் பாடல். காதலன் வருகைக்காக நாயகி காத்திருக்கும் பாங்கில் அமைந்த வரிகள். அவனது வருகைக்காக ஏங்கி நிற்கும் மனதில், அவள் படும் பாடும், அவன் செய்ய வேண்டிய செயலும் ஒருங்கே நிற்கிறது. ரசிக்க வைக்கும் ஏக்கம் என்றே சொல்ல வேண்டும். சாக்ஸபோன் கொண்டு Intredules பல இந்த பாடலில் உள்ளன. மனதின் ஆழத்தின் அடிவாரத்தில் உள்ள சோகத்தை காற்றின் அலைகள் கொண்டு மேல் எழ செய்கிறது, இசை என்னும் சோம பானம். ஹாரிஸ் ஜெயராஜ், அனுராதா ஸ்ரீராமை சரியாக தெரிவு செய்துள்ளார். காணொளி, பாடலை கெடுக்காமல், அதே சமயம் மங்கையின் உணர்வை தொட்டு, திருமுகத்தை மறைத்து அமைந்துள்ளது. பெண்ணின் பொதுப்படையான வெளிபாடு போலும்.

படம் : லேசா லேசா
பாடல் : லேசா லேசா
பாடியவர் : அனுராதா ஸ்ரீராம்
பாடலாசிரியர் : வாலிப வாலி  
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

லேசா லேசா – நீ
இல்லாமல் வாழ்வது
லேசா லேசா…

லேசா லேசா…
நீண்ட கால உறவிது
லேசா ?

காதல் தேவன்
கோவில் தேடி
வருகிறதே…
விரைவினிலே…
கலர்கலர் கனவுகள்
விழிகளிலே…
உனக்கெனவே…
உலகினிலே…
பிறந்தவளே !

லேசா லேசா…

நான் தூங்கி நாளாச்சு
நாளெல்லாம் பாலாச்சு
கொல்லாமல் என்னை
கொன்று வதைக்கிறதே

சொல்லாமல் ஏக்கம்
என்னை சிதைக்கிறதே
கண்ணெல்லாம் கண்ணன்
வண்ணம் தெரிகிறதே…
விரிகிறதே…

தனிமையில் இருக்கையில்
எரிகிறதே..
பனி இரவும்
அனல் மழையை
பொழிகிறதே…

லேசா லேசா…

வெவ்வேறு பேரோடு
வாழ்ந்தாலும் வேறல்ல
நான் வாங்கும் மூச்சுகாற்று
உனைதல்லவா !

உன் தேகம்
ஓடும் ரத்தம்
எனதல்லவா !

வெவ்வேறு…

நீ என்றால்
நான் தானென்று
உறவறிய ஊரறிய
ஒருவரில் ஒருவரில்
உயிர் கரைய
உடனடியாய்…
உதடுகளால்…
உயிலெழுது…

லேசா லேசா…

இன்னும் இன்னும் இனிய பாடல்கள், வலம் வர காத்துக்கொண்ட்டே இருக்கிறது. விரைவில் சந்திப்போம், தமிழை சிந்திப்போம்.

isaipaa vaali