அழகே அழகே….

நண்பர்களுக்கு இசையுடன் நல்வணக்கம்,

இன்று காணவிருக்கும் பாடல் உன்னிகிருஷ்ணன் அவர்களின் புதல்வியான உத்ரா உன்னிகிருஷ்ணன் அவர்களின் மழலை ததும்பிய குரலில் பாடப்பெற்ற பாடல். பாடல் இடம் பெற்ற படம் “சைவம்” , பாடல்-“அழகே அழகே” என அழகாக தெளிவாக பாடியிருக்கிறார் உத்ரா உன்னிகிருஷ்ணன். ஜி.வி .பிரகாஷ் இசையை பாராட்ட வேண்டும் கண்டிப்பாக, பின் வாத்தியங்கள் அனைத்தும் அருமை.பாடல் வரிகள் எளிமையாக சின்ன சின்ன வரிகளாக அருமையாக அமைத்து இருக்கிறார் நா.முத்துக்குமார். குரலில் என்ன மாயமோ Loopல் கேட்க செய்கிறது. பாடலின் காட்சியமைப்பு எப்படி இருக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Utharaஅன்பின் விழிகளில் காணும் அனைத்தும் அழகே என்றும்,

சுடும் வெயில் அழகு, விழும் இலை அழகு...

என ஒரு பட்டியல் போட்டு இயற்கையோடு இணைதல் அழகு என அருமையாக வரிகள் அமைத்து இருக்கிறார் பாடலாசிரியர். வாங்களேன் பாடலை ரசிப்போம்.

 

 

படம்: சைவம்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
பாடியவர்: உத்ரா உன்னிகிருஷ்ணன்

 அழகே அழகே எதுவும் அழகே

அழகே அழகே எதுவும் அழகே

அன்பின் விழியில் எல்லாம் அழகே

மழை மட்டுமா அழகு ! சுடும் வெயில் கூட ஒரு அழகு !

மலர் மட்டுமா அழகு ! விழும் இலை கூட ஒரு அழகு !

புன்னகை வீசிடும் கார்முகில் அழகு !

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு !

நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு !

உண்மை அதுதான் நீதான் அழகு !

 ……..

குயிலிசை அது பாடிட – ஸ்வர வரிசைகள் தேவையா?

மயில் நடனங்கள் ஆடிட – ஜதி ஒலிகளும் தேவையா?

நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா ?

கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் அது தேவையா?

இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு !

கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்கை முழுதும் அழகு !

……

அழகே அழகே எதுவும் அழகே

…….

இதயம் ஒரு ஊஞ்சலே இடம் வலம் அது ஆடிடும்…

இன்பத்தில் அது தோய்ந்திடும் துன்பத்தில் அது மூழ்கிடும்

நடந்ததை நாம் நாளுமே நினைப்பதில் பொருள் இல்லையே !?

நடப்பதை நாம் எண்ணினால் அதைவிட உயர்வில்லையே…

பூக்கும் பூவில் வீசும் வாசம் என்ன அழகு !

அதையும் தாண்டி வீசும் நம் நேசம் ரொம்ப அழகு !

அழகே அழகே…..

மழை மட்டுமா அழகு ! சுடும் வெயில் கூட ஒரு அழகு !

மலர் மட்டுமா அழகு ! விழும் இலை கூட ஒரு அழகு

புன்னகை வீசிடும் கார்முகில் அழகு !

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு !

மன்னிக்கச் சொல்லிடும் பொய்களும் அழகு !

உண்மையில் அதுதான் விழியாய் அழகு !

இனியதோர்  பாடல்களுடன் மீண்டும் சந்திப்போம் !