கொஞ்சிப் பேசிட வேணாம்… சேதுபதி

நா. முத்துக்குமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பல வெற்றிப்பாடல்களையும், பல படங்களின் முழுப்பாடல்களையும் எழுதி வந்தவர். அநேகமாக காவியக்கவிஞர் வாலியின்  பதினைந்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எனும் சாதனையை முறியடித்திருக்கக் கூடும்.

இளங்கலை பட்டப்படிப்பில் இயற்பியலில் தேர்ந்த நா. முத்துக்குமார் தமிழ் ஆர்வம் காரணமாக முதுகலை தமிழ் படித்தவர். கவிஞர் அறிவுமதியிடம் பாடல் எழுத பயிற்சி எடுப்பதும், இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பயிற்சி எடுப்பதுமாக கழிந்த அக்காலத்தில் இறுதியாக உதவி இயக்குநர் ஆவலை முற்றாகத் துறந்தார்.

தமிழில் முனைவர் பட்டம் பெறுவதா? பாடலாசிரியராக மாறுவதா? எனும் வாய்ப்புகளில் பாடலாசிரியராக முடிவெடுத்த அவர் வெற்றிகரமான பாடலாசிரியராக வலம் வந்தவர். தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது பெற்றவர்.

கல்லூரிக் காலத்தில் இவரது ’தூர்’ கவிதை எழுத்தாளர் சுஜாதாவால் பெரிதும் பாராட்டப்பட்டு புகழ் வெளிச்சம் பெற்றதாகவும் பல்வேறு சூழல்களில் இவரே குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கவிதை எழுதச் சொன்ன சுஜாதா அவர்களிடம், எனக்கு திரைப்படங்களில் பாடல் எழுதவே ஆசை என்று தெரிவித்துள்ளார்.

யாரும் எதிர்பாராத இவரது மறைவு தமிழ்த் திரையுலகத்திற்கு ஈடு செய்ய இயலாத இழப்பாகும். பாடலாசிரியர்/கவிஞர் நா. முத்துக்குமாருக்கு இசைப்பா தளம் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது

சமீபத்தில் வெளிவந்த அவரது பாடல் இன்று இசைப்பாவில். நீண்ட நாட்களுக்கு பிறகு, வெளிவரும் இப்பதிவு, அவருக்கான இசை அஞ்சலி.

ஊருக்கு செல்லும் நாயகன். பிரிவில் உள்ள சுகம் மற்றும் வருத்தத்தைக் கூறும் பாடல். எளிய வரிகள், அழகிய காட்சியமைப்பு, துள்ளும் இசை, மயக்கும் குரல்கள். இசை என்னும் இன்பம் பெருகட்டும். அதற்கு வித்திட்ட உள்ளங்கள் நம் மனங்களில் நிலைக்கட்டும்.

na-muthukumar-isaipaa
நா முத்துகுமார் அஞ்சலி

பாடல் : கொஞ்சிப் பேசிட வேணாம்
இசை : நிவாஸ் பிரசன்னா 
பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்
பாடகர்கள் : சித்ரா, ஸ்ரீராம் பார்த்தசாரதி
படம் : சேதுபதி

கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடி

நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேக்குதடி
அட தொலைவில இருந்தா தானே
பெரும் காதல் கூடுதடி

தூரமே தூரமாய்
போகும் நேரம்

கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடா

நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேக்குதடா
அட தொலைவில இருந்தா தானே
பெரும் காதல் கூடுதடா
தூரமே தூரமாய்

போகும் நேரம்
ஆச விலையிடுதா

நெஞ்சம் அதில் விழுதா
எழுந்திடும் போதும் அன்பே
மீண்டும் விழுந்திடுதா

தனிமை உன்னை சுடுதா
நினைவில் அனல் தருதா
தலையணைப் பூக்களில் எல்லாம்
கூந்தல் மணம் வருதா ?

குறு குறு பார்வையால்
கொஞ்சம் கடத்துறியே

குளிருக்கும் நெருப்புகும்
நடுவுல நிறுத்துறியே

வேற என்ன வேணும்
நேரில் வர வேணும்
சத்தம் இல்ல முத்தம்
தர வேணும்

கொஞ்சிப் பேச வேணாம்…
நான் நின்னா…
தூரமே…

கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடா

இசைப்பா+

நா.முத்துகுமார் தன் பாடல்களுக்காக இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார்

  1. ஆனந்த யாழை… – தங்க மீன்கள்

  2. அழகே… அழகே… – சைவம்

மேலும் அவரது பாடல்களுடன் இணைய, சொடுக்கவும்

na muthukumar isaipaa banner 2
நா மு பாடல்கள்

 

வாங்க மக்கா வாங்க…

இசைப்பா ரசிகர்களுக்கு இன்று இரட்டிப்பு மகிழ்ச்சி.

இருக்காத பின்ன ? வைரமுத்துவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மிகவும் விமரிசையாக நடந்து வருகிறது. இந்த பொன் மாலை பொழுதில் இன்னமொரு பாடல். நா முத்துகுமாரின் முப்பத்து எட்டாம் பிறந்தநாள் இன்று. இரண்டு நாட்களுக்கு முன் வெளிவந்த புதிய பாடலை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

நா முத்துகுமார் :

2013ல் மட்டும், 34 படங்கள், 106 பால்கள், 10 படங்களில் அனைத்து பாடல்களும் எழுதியுள்ளார். பத்து ஆண்டு கால சாதனை, தொடர்ந்து அதிக எண்ணிகையில் பாடல்களை எழுதி குவிக்கிறார். வாசிப்பும், நேசிப்பும் தான் இதன் காரணம்.

தினமணி இலக்கிய திருவிழாவின் பேசுகையில் அவர் சொன்னது :

குடுசை வீடு தான், ஆனால் வீடு முழுவதும் 1 லக்க்ஷத்துக்கும் மேற்றப்ட்ட புத்தங்கங்கள் இருக்கும், அப்பா எந்நேரமும் வாசித்து கொண்டே இருப்பார். அவரை நான் தூங்கி பார்த்ததே இல்லை. இதை தவிர தமிழகத்தில் வரும் அனைத்து சஞ்சிகைகள், சிறு பத்திரிகைகள் என அனைத்தையும் வாங்குவார். சுற்றிலும் உள்ள 10க்கும் மேற்பட்ட நூலகங்களுக்கு, என்னையும் சைக்கிளில் அழைத்து செல்லுவார்

மிகவும் வேகமாக பாடல்கள் எழுதுவது இவரது தனித் திறம். இதன் காரணமாகவே பல வாய்புகள் இவரை தேடி தேடி வருகின்றன. எனக்கு தெரிந்த மட்டில் அடைமொழி இல்லாத கவிஞர் இவர் . (இணையத்தில் இவரை பற்றி தேடினால், கவி இளவரசன் என்று வருகிறது. அவர் அதை சூட்டிக் கொள்ளவோ, எந்த படத்திலும் பயன்படுத்தி கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்). கடந்த வருடத்தின் சிறந்த பாடலுக்கான விருதை : ஆனந்த யாழை, இந்திய அரசு இவருக்கு தந்து சிறப்பித்தது. வாழ்த்துக்கள் முத்துகுமார். உங்கள் எளிய உருவம் போல பாடல்களும் இனிமையாக வளரட்டும்.

பல பெரும் இசையமைப்பாளர்களுடன் -இளையராஜா,ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் ஷங்கர் ராஜா, ஜி வி பிரகாஷ்..  -பணியாற்றும் பெரும் பாக்கியம் கொண்டவர் நா மு.  இயக்குநராக வேண்டும் என்ற கனவோடு, மறைந்த ஒளிப்பதிவாளர்-இயக்குநர் பாலு மகேந்திராவிடம் நான்கு வருடங்கள் பணிபுரிந்துள்ளார். ஒரு சில படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். பல கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்

na muthukumar isaipaa

படத்தின் இசையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, காரணம் : இதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு ஹாலிவுட் படத்தை கைவிட்டார். காவியக்கவிஞர் வாலி எழுதிய கடைசிப் பாடல் இடம்பெற்றுள்ள திரைக் காவியம். நாடகக்கலைஞர்களைப் பற்றிய வரலாற்றை சுவையுடன் சொல்ல முயன்றிருக்கிறார் வசந்தபாலன். இத்தகு படத்தின் ஒரு பாடல் மட்டும் இணையத்தில் வெளியாகியுள்ளது. சிறிய பாடல் தான், அனைவரையும் வரவேற்கும் வகையில் அமைத்துள்ளது. குரல்கள் இசையுடன் குழைந்து, இன்பமூட்டுகின்றன. எத்தனை எத்தனை விதமான இசை கருவிகளை ரஹ்மான் பயன்படுத்தியுள்ளார் என்பதே ஆச்சரியத்தை ஊட்டுகின்றது. ஓவ்வொரு Interludeயும் ஒரு தனி ர(/ரா)கம். செவிமடுத்து ரசிக்கவும்.

படம் : காவிய தலைவன்
பாடல் : வாங்க மக்கா வாங்க…
பாடலாசிரியர் : நா,முத்துக்குமார்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள் : ஹரிசரண், Dr.நாராயணன்

ஓ…. ஓ….
செந்தமிழால இசையைக்கூட்டி
பளபள பளவென கத சொல்லுவோம்….
சந்திரன சாட்சிவெச்சி
ஜெகதலபிரதாப கத சொல்லுவோம்….
மதுர ஸ்ரீ பாலா சண்முகனாந்தா
நாடக சபா….

வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க

வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க (2)

பச்ச மஞ்ச செவப்பு
வெள்ள ஊதா
கருநீல… கண்ணனோடு மீரா (2)

உங்க கண்ணுக்குள்ள
வண்ண வண்ண
மாயம் காட்டுவோம்

நாங்க வானவில்ல – உங்க
நெஞ்சுக்குள்ள கட்டுவோம்

வாங்க மக்கா வாங்க
எங்க ஆட்டம் பாக்க வாங்க
எங்க பாட்ட கேக்க வாங்க

வாங்க மக்கா வாங்க
எங்க நாடகம் பாக்க வாங்க
எங்க பாட்ட கேக்க வாங்க

திங்கள் செவ்வாய்
புதன் வியாழன் வெள்ளி
தாங்கு நத்தோம்
தந்தீங்கு நத்தோம் சொல்லி (2)

நீங்க பாக்காத
உலகத்த காட்டுவோம்
நாங்க பகல் கனவ
நெனவாக மாத்துவோம்

வாங்க மக்கா வாங்க
சும்மா நாடகம் பாக்க வாங்க
வாங்க மக்கா வாங்க
யம்மா எங்க பாட்ட கேக்க வாங்க

வாங்க மக்கா வாங்க
நீங்க வண்டி கட்டி வாங்க
வாங்க மக்கா வாங்கி
நீங்க வரிஞ்சு கட்டி வாங்க

வாங்க மக்கா வாங்க…

வழக்கமாக இசைப்பாவில் ஒரே நாளில் இரண்டு பதிவுகள் போடுவதில்லை. இன்று இந்த விதியை சற்றே தளர்த்தி கொண்டுள்ளோம். இன்றளவில் இயங்கி வரும் இரு பெரும் தமிழ் திரைப்பாடலாசிரியர்களுக்கு எங்களின் சிரம் தாழ்த்திய வந்தனம். உங்களாலும் தமிழ் வளர்கிறது, நிம்மதி பெருகுகிறது. வைரமுத்து வாரம் இனிதே தொடரும்.

na muthukumar isaipaa banner 2

அழகே அழகே….

நண்பர்களுக்கு இசையுடன் நல்வணக்கம்,

இன்று காணவிருக்கும் பாடல் உன்னிகிருஷ்ணன் அவர்களின் புதல்வியான உத்ரா உன்னிகிருஷ்ணன் அவர்களின் மழலை ததும்பிய குரலில் பாடப்பெற்ற பாடல். பாடல் இடம் பெற்ற படம் “சைவம்” , பாடல்-“அழகே அழகே” என அழகாக தெளிவாக பாடியிருக்கிறார் உத்ரா உன்னிகிருஷ்ணன். ஜி.வி .பிரகாஷ் இசையை பாராட்ட வேண்டும் கண்டிப்பாக, பின் வாத்தியங்கள் அனைத்தும் அருமை.பாடல் வரிகள் எளிமையாக சின்ன சின்ன வரிகளாக அருமையாக அமைத்து இருக்கிறார் நா.முத்துக்குமார். குரலில் என்ன மாயமோ Loopல் கேட்க செய்கிறது. பாடலின் காட்சியமைப்பு எப்படி இருக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Utharaஅன்பின் விழிகளில் காணும் அனைத்தும் அழகே என்றும்,

சுடும் வெயில் அழகு, விழும் இலை அழகு...

என ஒரு பட்டியல் போட்டு இயற்கையோடு இணைதல் அழகு என அருமையாக வரிகள் அமைத்து இருக்கிறார் பாடலாசிரியர். வாங்களேன் பாடலை ரசிப்போம்.

 

 

படம்: சைவம்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
பாடியவர்: உத்ரா உன்னிகிருஷ்ணன்

 அழகே அழகே எதுவும் அழகே

அழகே அழகே எதுவும் அழகே

அன்பின் விழியில் எல்லாம் அழகே

மழை மட்டுமா அழகு ! சுடும் வெயில் கூட ஒரு அழகு !

மலர் மட்டுமா அழகு ! விழும் இலை கூட ஒரு அழகு !

புன்னகை வீசிடும் கார்முகில் அழகு !

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு !

நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு !

உண்மை அதுதான் நீதான் அழகு !

 ……..

குயிலிசை அது பாடிட – ஸ்வர வரிசைகள் தேவையா?

மயில் நடனங்கள் ஆடிட – ஜதி ஒலிகளும் தேவையா?

நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா ?

கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் அது தேவையா?

இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு !

கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்கை முழுதும் அழகு !

……

அழகே அழகே எதுவும் அழகே

…….

இதயம் ஒரு ஊஞ்சலே இடம் வலம் அது ஆடிடும்…

இன்பத்தில் அது தோய்ந்திடும் துன்பத்தில் அது மூழ்கிடும்

நடந்ததை நாம் நாளுமே நினைப்பதில் பொருள் இல்லையே !?

நடப்பதை நாம் எண்ணினால் அதைவிட உயர்வில்லையே…

பூக்கும் பூவில் வீசும் வாசம் என்ன அழகு !

அதையும் தாண்டி வீசும் நம் நேசம் ரொம்ப அழகு !

அழகே அழகே…..

மழை மட்டுமா அழகு ! சுடும் வெயில் கூட ஒரு அழகு !

மலர் மட்டுமா அழகு ! விழும் இலை கூட ஒரு அழகு

புன்னகை வீசிடும் கார்முகில் அழகு !

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு !

மன்னிக்கச் சொல்லிடும் பொய்களும் அழகு !

உண்மையில் அதுதான் விழியாய் அழகு !

இனியதோர்  பாடல்களுடன் மீண்டும் சந்திப்போம் !