உன் பார்வை போதும்

ஒரு பெண் தாயாகும், சமயத்தில் முழுமை பெறுகிறாள் என்பது சமூக கோட்பாடு. உண்மையும் அதுவே. அப்படி ஒரு தாய் தான் சுமந்தெடுக்கும் பிள்ளை, எப்படி இருந்தாலும்,  அவளுக்கு அவன் தங்கக் கட்டியே. அவனுக்கு எவ்வகை துயரம் வந்தாலும், அவள் ஆவலுடன் அவன் முகம் பார்த்து அவனை தழுவுகிறாள்.

விண்மீன்கள் படம். இதே போல ஒரு சூழல். பிறந்து குழந்தை மாற்று திறனாளி, அவனால் நடக்கவோ, பேசவோ, ஏதும் சுயேச்சியாக செய்ய முடியாது. மருத்துவர்கள் அவனை காப்பகத்தில் சேர்த்து விடும் படி சொல்லியும், தன் மகன் தோன்றக் காரணமாக இருந்த, தாங்களே அவன் வேர் ஊன்று நிற்க பாடுப்பட வேணும் என உணரும் பெற்றோர். இதில் விந்தை ஒன்றும் இல்ல, நம் கலாச்சாரம் தான் அது !

என்ன தான் மன திடம் இருந்தாலும், மகவின் குறை எண்ணி மனம் துடிக்க, ஒவ்வொரு இரவிலும், அவன் நிறைகளை மட்டுமே பார்க்கும் / பாரக்க துடிக்கும் தாயின் அன்பு வரிகளை, தானாக வரும் உணர்வுகளை, மிகவும் சரியாக, ரசனையுடன் எழுதியுள்ளார் நா.முத்துக்குமார். வரிக்கே ஏற்ற வேகத்தில் இசை சரியா வந்துள்ளது. பாடியவர்களை பற்றி சொல்ல வேண்டியதே இல்ல : ஹரிஹரன், ஹரினி. இந்த பாடல் படம் ஆக்கப்பட்ட விதம் மிகவும் அழகாக உள்ளது. பாடல் முடியும் போது இரு துளி கண்ணீருடன் நீங்கள் இருப்பீர்கள் என்பது திண்ணம். அதுவே பாடலின் மிக பெரும் வெற்றி

பாடல் : உன் பார்வை போதும்

பாடியவர்கள் : ஹரிணி, ஹரிஹரன்

பாடலாசிரியர் : நா.முத்துகுமார்

படம் : விண்மீன்கள்

இசை : ஜூபின்

Vinmeengal-Stills-077

உன் பார்வை போதும்
இனி என் ஜென்மம் வாழும்,

உன் பார்வை போதும்
இனி என் ஜென்மம் வாழும்,

வாய் பேசா பந்தமே
வரம் தந்த தெய்வமே
உந்தன் மனமொரு விடுகதை
புரிந்து கொள்வதே தொடர்கதை

ஒரு நடச்சதிரம் வந்த
எந்தன் வீட்டுக்குள்ளே உதித்தது
நாளை உந்தன் பேரை
சொல்லும் நம்பிக்கையும் இருக்குது

நெஞ்சுக்குள்ளே பொத்தி வச்ச
செடி ஒன்னு பூக்குது
நெஞ்சுக்குளே சேர்த்து வச்ச
கனவுகள் பலிக்குதே

உன் பார்வை போதும்
இனி என் ஜென்மம் வாழும்,
உன் தீண்டல் போதும்
இனி வேறு என்ன வேண்டும் ?

உன் முகம் பார்த்தால் ஓவியம் போலே
சலனங்கள் எதுவும் அதில் இல்லையே
மௌனமாகவே ஏதேதோ பேசி போகிறாய்

உன் மனம் என்றும் ஊஞ்சலை போல
இடம் வளம் எதுவம் அதில் இல்லையே
திசைகள் யாவையும் ஒன்றாக்கி மாயம் செய்கிறாய்

பூமி உந்தன் சொந்தமே,
வானம் உந்தன் சொந்தமே
வெல்லுகின்ற காலம்
வாசல் வந்த மாலையிடும்

மண்ணுள் உள்ள வாழக்கை என்றும்
மேடு பள்ளம் நிறைந்தது
துன்பமின்றி இன்பம் மட்டும்
உனக்கென்ன பிறந்தது

மெல்ல மெல்ல உதடுகள்
புன்னகையில் மலர்ந்தது
என்னை விட்ட உன்னை தானே
எந்தன் மனம் நம்புதடா

உன் பார்வை போதும்
இனி என் ஜென்மம் வாழும்,
உன் தீண்டல் போதும்
இனி வேறு என்ன வேண்டும் ?

நதிகளில் விழுந்த இலைகளின் பயணம்
நதி செல்லும் வழியில் தொடருமடா
அன்புன் நதியிலே இப்போது
மோதி இலைகள் ஆகிறோம்

அலைகளில் மிதந்து ஆழத்தில் அலைந்து
அனுதினம் ஆட்டம் நிகழுதடா
கொஞ்சும் போதிலே ஒன்றாகி
கடலில் சேர்கிறோம்

என்னை நானே பார்கிறேன்
இன்னும் என்ன கேட்கிறேன்
இந்த இன்பம் போதுமடா

என்ன என்ன வேண்டும் என்று
பார்த்து பார்த்து கொடுக்கிறேன்
உன்னை தீண்டும் காற்றை கூட
கையை நீட்டி தடுக்கிறேன்

உன்னை தோளில் தூக்கி கொண்ட
வானம் மேலே பறக்கிறேன்
உந்தன் வெற்றி அதை என்னை
காயங்களை மறக்கிறேன்

உன் பார்வை போதும்
இனி என் ஜென்மம் வாழும்

உன் பார்வை போதும்
இனி என் ஜென்மம் வாழும்,
உன் தீண்டல் போதும்
இனி வேறு என்ன வேண்டும் ?

உந்தன் மனமொரு விடுகதை
புரிந்து கொள்வதே தொடர்கதை

ஒரு நடச்சதிரம் வந்த
எந்தன் வீட்டுக்குள்ளே உதித்தது
நாளை உந்தன் பேரை
சொல்லும் நம்பிக்கையும் இருக்குது

நெஞ்சுக்குள்ளே பொத்தி வச்ச
செடி ஒன்னு பூக்குது

கண்ணுக்குளே சேர்த்து வச்ச
கனவுகள் பலிக்குதே

மேலும் இசை வளரட்டும். இன்பம் பெருகட்டும். உங்கள் வாசிப்புக்கும் நன்றி !