மறு வார்த்தை பேசாதே!

அறிமுகம் தேவை இல்லாத பாடல். பல நூறு முறை கேட்டுவிட்டேன்… இன்னும் இன்னும் இனிக்கிறது. தாமரை + கெளதம் + சித் + தர்புகா சிவா அசத்தல் கூட்டணி 😀

சென்னையில் திருவையாறு விழாவில் சித் ஸ்ரீராம் பாடிய கர்நாடிக் பதிப்பு : https://www.facebook.com/Thillai.Elanthendral/videos/530859777349980/

எனக்கு பிடித்த, இந்தியன் ராகாவின் கர்நாடிக் வார்ப்பு : https://www.youtube.com/watch?v=Ju_vObcp00w

maruvartahi

பாடல் : மறு வார்த்தை பேசாதே
இசை : நிவாஸ் பிரசன்னா  
பாடலாசிரியர் : தாமரை 
பாடகர்: சித் ஸ்ரீராம்
படம் : என்னை நோக்கி பாயும் தோட்டா

மறு வார்த்தை பேசாதே!
மடிமீது நீ தூங்கிடு!

இமை போல நான் காக்க..
கனவாய் நீ மாறிடு !

மயில் தோகை போலே
விரலுன்னை வருடும்!
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்..

விழிநீரும் வீணாக
இமைத்தாண்டக் கூடாதென..
துளியாக நான் சேர்த்தேன்..
கடலாகக் கண்ணானதே..!

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே ..!

பிரிந்தாலும் என் அன்பு..
ஒருபோதும் பொய்யில்லையே !

விடியாத காலைகள்..
முடியாத மாலைகளில்..
வடியாத வேர்வைத் துளிகள்..
பிரியாத போர்வை நொடிகள்!

மணிக்காட்டும் கடிகாரம்
தரும்வாதை அறிந்தோம்..
உடைமாற்றும் இடைவேளை
அதன் பின்பே உணர்ந்தோம்!

மறவாதே மனம்..
மடிந்தாலும் வரும்..!
முதல் நீ…!
முடிவும் நீ…!
அலர் நீ…!
அகிலம் நீ…!

தொலைதூரம் சென்றாலும்…
தொடுவானம் என்றாலும் நீ…
விழியோரம்தானே மறைந்தாய்..
உயிரோடு முன்பே கலந்தாய் …!

இதழ் என்னும் மலர்கொண்டு..
கடிதங்கள் வரைந்தாய்!
பதில் நானும் தருமுன்பே
கனவாகி கலைந்தாய் ..!

பிடிவாதம் பிடி !
சினம் தீரும் அடி!
இழந்தோம்..
எழில்கோலம் !
இனிமேல்..
மழை காலம்..!!

 

மேலே மேலே தன்னாலே…

நாயகியை பலத்த எதிர்பார்ப்புடன் காணும், நாயகனின் உணர்வுகளை பதிவு செய்யும் பாடல். அவள பாத்துடாதடா.. பாத்தா அப்படியே (காதல்ல) விழுந்திடுவ – என அனைவரும் சூளுரைக்க, சும்மா இருப்பாரா நம்ம வாரிசு. நான் எல்லாம் அனுமார் பக்தர்…. எங்கள யாரும் ஒன்னும் பண்ண முடியாது, என்ற ஏத்தத்துடன் கண்டு, மேலே மேலே போறார்… காதல் வானில் விழுந்த தேனியாய், மயங்கி, கிறங்கி, ஆட்டம் போடுகிறார்.

ஹாரிஸ் ஜெயராஜின் துள்ளல் இசை இனிமையாக உள்ளது. பல நாட்களுக்கு பின் ஒலிக்கும் கார்த்திக்கின் குரல், இன்னுமும் அதே வசீகரத்துடன் உள்ளது. தாமரையின் எளிய வரிகள், எதுகை மொவனை எல்லாம் மிகவும் பொருத்தமாக வந்துள்ளது : தூறல், சாரல், ஈசல், ஆவல், மோதல், ஏஞ்சல் ! இன்னும் ஒன்று : கொடும, அரும, பெரும, இனிம, பொறும, தெறம !

பாடல் : மேலே மேலே தன்னாலே
படம்: இது கதிர்வேலன் காதல்
பாடியவர் : கார்த்திக்
பாடலாசிரியர் : தாமரை
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

மேலே மேலே தன்னாலே
என்னக் கொண்டு போனாளே
அந்த புள்ள கண்ணாலே
நெஞ்ச அள்ளிட்டாள்

மேலே மேலே….

ஆள திண்ணு போனாளே,
ஆட்டம் போடா வச்சாளே,
அந்தரத்தில் என்ன தான்
பத்த வச்சுட்டாளே !

அவன் தூர நின்னா தூறலு,
என் பக்கம் வந்தா சாரலு,
அவளாலே நான் ஆனா ஈசலு !

அவ மேலே ரொம்ப ஆவலே,
அதனாலே உள்ளே மோதலு,
அவன என்னோட காதல் ஏஞ்சலு !

வா ராசா ராசா
வழி எல்லாம் ரோசா ரோசா
ஹே லேசா லேசா
பாடாதே நீயும் லூசா லூசா

அவ ஒரு அழகிய கொடும,
அத பொலம்பிட பொலம்பிட அரும,
நிதம் என்ன பாத்ததும் ஏறிப்போச்சு பெரும!

அவ ஒரு வகையில இனிமை,
அத அறிஞ்ஜிட அறிஞ்ஜிட புதும,
என்ன தொட்டு பேசிட கூடிப் போச்சு திறம !

அவ நேருல வந்தா போதும்,
தெருவெல்லாம் தேரடியாகும்,
அவ கண்ணாலே பேசும் தீபம் !

மேலே.. மேலே….

கடவுள துதிப்பவன் இருப்பான்,
கொண்ட கடமைய மதிப்பவன் இருப்பான்,
அட அவல பாத்திட எல்லாத்தையும் மறப்பான் !

ஒலகத்த ரசிப்பவன் இருப்பான்,
எந்த உணவையும் ருசிப்பவன் இருப்பான்,
அவ கூட நின்னவன் தன்ன தானே இழப்பான் !

அவ ஒரு முற வச்ச காரம்,
என் உசுருல நித்தம் ஊரும்,

அவ தீராத நீராகாரம் !

மேலே… மேலே…
வா ராசா ராசா…

நல்ல பாடல். படத்தை ஒரு முறை பார்க்கலாம். இசை எங்கும் பரவட்டும். இனிமை எங்கும் பொங்கட்டும். வாழ்த்துக்கள்

அன்பே அன்பே, எல்லாம் அன்பே….

வணக்கம்.

பாடல் இடம்பெற்ற படம் ’இது கதிர்வேலன் காதல்’. ஒரு மென்மையான சோக பாடல். வரிகளில் பெரும் அட்டகாசம் இல்லை என்றாலும்… இசையும் பாடிய விதமும், இழையோடும் சோக மெட்டும், மனதை வருடுகின்றன. ஹரிணியின் குரலில் இருக்கும் depth மிக அபூர்வம். அந்த உணர்வை, மெல்லிய இசையால் ஹாரிஸ் ஜெயராஜ் கை தூக்கி விட்டிருப்பது – நேர்த்தி. எங்கோ கேட்டு பழக்கம் உள்ள மெட்டாக இருந்தாலும் பாடல் ஈர்க்கிறது.

காதலன் காதலியின் பிரிவை, சின்ன சின்ன சம்பவங்களாக புது கவிதை (வசனம், கதை சொல்வது) போல சித்தரித்திருப்பது அழகு. வரிகள் ஒவ்வொன்றும் காட்சியை அழகாக காட்டுகிறது. இயக்குனருக்கு வேலை மிச்சம். தார தப்பட்டை எல்லாம் வைத்து கிழிக்காமல், இப்படி அமைதியாக சோகத்தை சொல்வது அலாதியான உணர்வலைகளை ஏற்படுத்துகின்றது. வைரமுத்து ராஜா/ரஹ்மான் போல – தாமரை + ஹாரிஸ் வலுவான வெற்றி கூட்டணி !

பல இசைகளை சார்ந்தது ஹாரிஸ் ஜெயராஜின் இசை என்பது பலரின் கருத்து (/குறை). என்னை பொருத்த மட்டில் கேட்க இனிமையாக இருந்தால், திரும்ப கேட்க முடியுமானால் பாடல் சூப்பர் தான் !

படம் : இது கதிர்வேலன் காதல்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர் : தாமாரை
பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா, ஹரிணி

(ஆண்)
அன்பே அன்பே
எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்
மழைகாலம் மட்டும்
கண்ணில் வேணாடம் என்பேன்
பணிக்கலாம் போர்வைக்
கொண்டு வந்தேன்

ஓ அன்பே அன்பே….

(பெண்)
என் மேஜை மீது பூங்கொத்தை
வைத்தது நீ தானே
நான் வானம் பார்க்க வழி செய்த
சாளரம் நீ தானே
என் இதயம் மெல்ல
சிதையில் தள்ள நீ தான்
நிலாவை காட்டி தேற்றினாய்

அன்பே அன்பே….

(பெண்)

தூக்கம் கண்ணில் வரவில்லை
சொப்பனம் காண வழியில்லை
எங்கோ பாடல் கேட்டாலும்
நெஞ்சில் முன்போல் தீயில்லி

(ஆண்)

மழை தரும் கார்முகிலே – நீ
மிதந்திடும் மயிலிறகே
இதம் தரும் இன்னிசையே – நீ
ஒளிதரும் இன்னிசையே

(பெண்)
இருப்பது ஓர் உயிரே
அது உருகியே கரிகிரதே
நினைவுகள் கொல்வதனால்
மனம் மறுபடி சரிகிறதே

அன்பே அன்பே….

(ஆண்)
உன்னை பார்க்க கூடாது
என் கண்ணி மூடிக் கொண்டாலும்
கண்ணை பிரித்து நீ வந்தாய்
இமைகளின் இடையில் நீ நின்றாய்

(பெண்)
உன்னிடம் சொல்வதற்கு என்
கதை பல காத்திருக்கு
இரு கண்களின் தந்திகளால்
அதை கடத்திட சொல் எதற்கு ?

(ஆண்)
உடைகளின் நேர்த்தியினால் இந்த
உலகினை வென்றவள் நீ !
சிறு உதட்டின் புன்னகையினால் என்
இதயத்தில் நின்றவள் நீ !

அன்பே அன்பே….

மேலும் ஒரு இனிய பாடலுடன் விரைவில் வருகிறோம். இசை பூமியை ஆளட்டும் !