கும்கி பாடல்கள்!

அன்பு உள்ளங்களுக்கு ,

நாங்கள் சென்ற ஆண்டின் ”ஜம்போ ஹிட்” ஆன  திரைப்படமான கும்கியின் பாடல்களை வழங்க உள்ளோம். பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த கும்கியின்அனைவரையும் கவர்ந்த பாடல்களை தர உள்ளோம் .

எல்லா பாடல்களையும் எழுதியவர்  கவிஞர் யுகபாரதி. மேலும் பாடல்கள்  படமாக்கிய விதம் அருமை என்றே சொல்லுவேன். அத்தனை  காட்சிகளும் அப்பப்பா! கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். இயற்கையான சூழலையும் எளிமையான இயல்பையும் கொண்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இப்படத்தின் பாடல்கள் .

இசையுள் குதிப்பதற்கு முன்னதாக:

இத்திரைப்படம் வெளிவந்து இத்தனை நாட்கள் கடந்து வெளியிடுவதற்கு வருத்தங்கள். இதை தீபாவளி சமயத்திலும், பின் பொங்கல் தருணத்திலும் முழுமையாக வெளியிடத் திட்டம் இருந்தது. பல்வேறு காரணங்களாலும், சூழல்களாலும் இவ்வளவு நாட்கள் தள்ளி வெளிவருகிறது. அதை ஈடுசெய்யும் விதமாக பல்வேறு புதிய முயற்சிகள் நடக்கின்றன.

இந்த கோடைகாலம் இசையால் உங்களுக்கு இன்பம் தரட்டும். இன்னும் இனிமையான பாடல்களை இங்கே தர விருப்பம். இப்போதைக்கு கும்கி.

படம் : கும்கி
இசை: டி.இமான்
பாடியவர்: மகிழினி மணிமாறன்.
பாடலாசிரியர் : யுகபாரதி.
பாடல் : சொய், 
சொய், சொய்… 

சொய் சொய்
சொய் சொய்

சொய்… சொய் சொய்… சொய்

கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்!
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்!
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும்
நினைப்பே போதும் மச்சான்

சொய்… சொய் சொய்… சொய்

வானளவு விட்டத்தில வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்லை அதுதான் பாசம் மச்சான்
நாம வேண்டி கொண்டாலும் வேண்டா விட்டாலும்
சாமி கேட்கும் மச்சான்

சொய்… சொய் சொய்… சொய்

ஏடளவு எண்ணத்துல எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவு கோலே இல்ல அது தான் ஊரு மச்சான்
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே
அதுவே போதும் மச்சான்

சொய்… சொய் சொய்… சொய்

நாடளவு கஷ்டத்துல நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவு கோலே இல்ல அது தான் நேசம் மச்சான்
நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க
உறவு வேணும் மச்சான்

சொய்… சொய் சொய்… சொய்

கையளவு நெஞ்சத்தில கடலலவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம காணும் எல்லாமே கையில் சேந்தாலே
கவலை ஏது மச்சான்

சொய்… சொய் சொய்… சொய்

சொய்… சொய் சொய்… சொய்

separator-notes

படம் : கும்கி
இசை: டி.இமான்
பாடியவர்: அல்போன்ஸ் ஜோசப்
பாடலாசிரியர் : யுகபாரதி.
பாடல் : நீ எப்போ புள்ள சொல்ல போற?

நீ எப்போ புள்ள
நீ எப்போ புள்ள

நீ எப்போ புள்ள சொல்ல போற?

நீ எப்போ புள்ள சொல்ல போற?
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற?
நீ எப்போ புள்ள சொல்ல போற?
தப்பென்ன செஞ்சேன் தள்ளி போற?

நீ வெறும் வாய மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு!
சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு!

நீ எப்போ… நீ எப்போ…?
நீ எப்போ புள்ள சொல்ல போற?

பக்குவமா சோறாக்கி, பட்டினியை நீ போக்கி
பெத்தவள கண்ணு முன்னே கொண்டு வந்த நேத்து
என்னாச்சு அந்த பாசம்? எதிலேயும் இல்ல வேசம்!
என் மேலே என்ன பூவே ரோசம்!
முள்ளாச்சே முல்லை வாசம்! வச்சேனே அள்ளி  நேசம்!
வேறென்ன செஞ்சேன் மோசம் மோசம்?

நீ எப்போ… நீ எப்போ…?
நீ எப்போ புள்ள சொல்ல போற?

வெள்ளி நிலா வானோட, வெத்தலயும் வாயோட,
என் உலகம் உன்னோட என்று இருந்தேனே!
யம்மாடி யென்ன சொல்ல, அன்பாலே வந்த தொல்ல!

உன் மேலே தப்பே இல்ல இல்ல!

என்னோட கண்ணுக்குள்ள கண்ணீரும் சிந்த இல்ல!
செத்தேனே இப்ப மெல்ல மெல்ல!

நீ எப்போ… நீ எப்போ…?
நீ எப்போ புள்ள சொல்ல போற?

நீ வெறும் வாய மெல்லாம ஒரு வார்த்தை சொல்லு!
சொல்ல பதிலேதும் இல்லனா அடியோடு கொல்லு!

நீ எப்போ… நீ எப்போ…?
நீ எப்போ புள்ள சொல்ல போற?

separator-notes

படம் : கும்கி
இசை: டி.இமான்
பாடியவர்கள்: ஷ்ரேயா கோஷல், ரஞ்சித்
பாடலாசிரியர் : யுகபாரதி.
பாடல் : சொல்லிட்டாளே அவ காதல!

சொல்லிட்டாளே அவ காதல!
சொல்லிட்டாளே அவ காதல!

சொல்லிட்டாளே அவ காதல!

சொல்லிட்டாளே அவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு  வார்த்தைய
கேட்டிடவும் எண்ணிப்  பாக்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
ஏதும்… ஏதும்…

சொல்லிட்டேனே இவன்  காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்த்தைய
பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை
ஏதும்… ஏதும்…

அம்மையவ சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேர ஒன்னா பாத்தேன்

மனசயும் தொறந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல

அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
ஏதும்… ஏதும்…

சொல்லிட்டேனே இவ காதல

சொல்லிட்டாளே அவ காதல

எத்தனையோ சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே
சொல்லுறதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே ஏது துன்பம்

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலச்சிடும் உதிரத்துல

அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
ஏதும்… ஏதும்…

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல ஒரு வார்த்தைய
யாரிடமும் செல்ல தோணல
இனி வேறொரு வார்த்தைய
பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை
ஏதும்… ஏதும்…

separator-notes

படம் : கும்கி
இசை: டி.இமான்
பாடியவர்: டி.இமான்
பாடலாசிரியர் : யுகபாரதி.
பாடல் : ஒண்ணும் புரியல சொல்ல தெரியல

ஒண்ணும் புரியல
ஒண்ணும் புரியல

ஒண்ணும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல
ஆசை கூடுதே!

உச்சந்தலையில, உள்ள நரம்புல,
பத்து விரலுல தொட்ட நொடியில
சூடு ஏறுதே!

நெத்தி போட்டு தெறிக்குது
விட்டு விட்டு ரெக்கை முளைக்குது
நெஞ்சுக் குழி அடைக்குது மானே!

மனம் தத்தி தாவியே
தறி கெட்டு ஓடுது
உயிர் உன்னை சேரவே
ஒரு திட்டம் போடுது
ஹேய் ஹேய் யேலே…
(ஒண்ணும் புரியல)

அலையிற பேயா அவளது பார்வை
என்ன தாக்குது வந்து என்ன தாக்குது!
பரவுற நோயா அவளது வாசம்
என்னை வாட்டுது நின்னு என்னை வாட்டுது!
அவளது திரு மேனி வெறி கூட்டுது
அவளிடம் அடி வாங்க வழி காட்டுது
அவ என்ன பேசுவா அத எண்ண தோனுது
அவ எங்க தூங்குவா அத கண்ணு தேடுது
ஹேய் ஹேய் யேலே…
(ஒண்ணும் புரியல)

கதிர் அருவாளா மனசயும் கீறி
துண்டு போடுறா என்ன துண்டு போடுறா
கலவர ஊரா அவ உருமாறி
குண்டு போடுறா செல்ல குண்டு போடுறா
விழியில் பல நூறு படம் காட்டுறா
அறுபது நிலவாக ஒளி கூட்டுறா
அவ கிட்ட வந்ததும் தலை சுத்தியாடுது
அவ எட்டி போனதும் அட புத்தி  மாறுது
ஹேய் ஹேய் யேலே லே…

ஒண்ணும் புரியல சொல்ல தெரியல
கண்ணு முழியில கண்ட அழகுல…

separator-notes

படம் : கும்கி
இசை: டி.இமான்
பாடியவர்: ஹரிச்சரண்
பாடலாசிரியர் : யுகபாரதி.
பாடல் : அய்யய்யயோ ஆனந்தமே!

அய்யய்யய்யோ ஆனந்தமே!
அய்யய்யய்யோ ஆனந்தமே!

அய்யய்யயோ ஆனந்தமே!
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே!

நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே!
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கி போகுதே!

ஏதோ ஒரு ஆச!
வா வா கதை பேச
அய்யய்யோ…

அய்யய்யய்யோ… ஓ… ஓ… அய்யய்யய்யோ…

உன்னை முதல் முறை கண்ட நொடியில்
தண்ணிக்குள்ளே விழுந்தேன்
அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல
மெல்ல மெல்ல கரைந்தேன்
கரை சேர நீயும் கையில் ஏந்த வா
உயிர் காதலோடு நானும் நீந்தவா

கண்களில் கண்டது பாதி
வரும் கற்பனை தந்தது மீதி
தொடுதே… சுடுதே… மனதே…

அய்யய்யயோஆனந்தமே!
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே!

கண்கள் இருப்பது உன்னை ரசித்திட
என்று சொல்ல பிறந்தேன்!
கைகள் இருப்பது தொட்டு அனைத்திட
அள்ளிக் கொல்ல துணிந்தேன்
எதற்காக கால்கள் கேள்வி கேட்கிறேன்?
துணை சேர்ந்து போக தேதி பார்க்கிறேன்!

நெற்றியில் குங்குமம் சூட
இள நெஞ்சினில் இன்பமும் கூட
மெதுவா… வரவா… தரவா…

அய்யய்யயோ ஆனந்தமே!
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே!

நூறு கோடி வானவில்
மாறி மாறி சேருதே!
காதல் போடும் தூறலில்
தேகம் மூழ்கிப் போகுதே!

ஏதோ ஒரு ஆச!
வா வா கதை பேச!
அய்யய்யயோ…

separator-notes

படம் : கும்கி
இசை: டி.இமான்
பாடியவர்கள்: டி.இமான், பென்னி தயாள்
பாடலாசிரியர் : யுகபாரதி.
பாடல் : எல்லா ஊரும் எங்களுக்கு சொந்த ஊருங்க

எல்லா ஊரும்
எல்லா ஊரும்

தனனானனனானே… தனனானனனானே…
தனனானனனானே… தனனானே…

எல்லா ஊரும் எங்களுக்கு சொந்த ஊருங்க
யானையோடு சேத்து நாங்க நாலு பேருங்க
நம்பிக்கைய நம்பி உங்க வாழ்க்கை போகுது
தும்பிக்கைய நம்பி எங்க காலம் ஓடுது

நின்ன இடத்துல சோறு!
நீட்டி படுக்கையில் தூக்கம்!
என்ன எது நடந்தாலும் சிரிப்போமே!

கண்ணு முழிச்சதும் வேலை!
கைய விரிச்சதும் கூலி!
அள்ளிக் கொடுப்பது நீங்க…. மதிப்போமே!

தந்தானானே… நானே நானே…
தந்தானானே நானேனா…
தானானே தானானே னா…

வீதியெல்லாம் சுத்தி வித்த காட்டுறோமுங்க
வேலியில்லாக் காற்றப் போல வாழுறோமுங்க
யானை பலம் வேணுமுன்னு சொன்னதாருங்க?
எங்க பலம் யானையினு சொல்லுவோமுங்க!

முங்கி குளிச்சுட ஆறு!
முட்ட நடந்திட ரோடு!
லுங்கி மடிப்புல பீடி!
ஒளிப்போமே!

நல்ல துணி கிடையாது!
தங்க இடம் கிடையாது!
உங்க ரசிப்புல நாங்க
பொழப்போமே!

*இதுதவிர ஒண்ணும் புரியல, சொல்லிட்டாளே அவ காதல, அய்யய்யோ ஆனந்தமே கரோக்கிகளும் (Karoke),  சோக வடிவில் மீண்டும் ஒருமுறை (A lady & The violin ) இடம்பெறுகிறது.

தற்போது இசைப்பா தளம் 10,000 பார்வைகளைக் கடந்து போய்க்கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்த ஆதரவுகளுக்கு நன்றி. குறைகளோ, திருத்தங்களோ இருப்பின் சொல்லலாம். மாற்றங்களுக்கு தயாராக உள்ளோம். தங்களின் மேலான ஆதரவிற்கு நன்றி.

சொல்லிட்டாளே அவ காதல..!

இசை வணக்கங்கள்.

shreya ghoshal

இன்று பிரபல பின்னணிப் பாடகி ஷ்ரேயா கோஷல் அவர்களின் பிறந்தநாள். ட்விட்டர் தளத்தில் சிறப்பான ட்ரென்ட் ஆக மாறி


கும்கி படத்தில் இடம் பெற்ற இப்பாடல் டி.இமான் அவர்களால் இசைக்கப்பட்டு கவிஞர் யுகபாரதி அவர்களால் எழுதப்பட்டது.  நாயகன் காதலை நாயகியிடத்து சொன்னதன் பின்னணியில் ஒலிக்கிற இப்பாடல் குறித்த அறிமுகங்கள் தேவைப்படாது என நம்புகிறோம்.
யுள்ளது. இன்றைய தினம் அவருடைய குரலில் மனம் கவர்ந்த பாடலை ஒவ்வொருவரும் சொல்லியிருக்கிறார்கள். இன்று இசைப்பாவில் அவர் பிறந்தநாளிற்கு சென்ற ஆண்டின் வெற்றிப்பாடல்களுள்’ ஒன்றான இப்பாடலைத் தருவதில் மகிழ்ச்சியே

படம்: கும்கி
பாடல்: சொல்லிட்டாளே அவ காதல..!
இசை: டி.இமான்
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள்: ஷ்ரேயா கோஷல், ரஞ்சித்

சொல்லிட்டாளே அவ காதல!

சொல்லிட்டாளே அவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய
யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு  வார்த்தைய
கேட்டிடவும் எண்ணிப்  பாக்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
ஏதும்… ஏதும்…

சொல்லிட்டேனே இவன்  காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்த்தைய
பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை
ஏதும்… ஏதும்…

அம்மையவ சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேர ஒன்னா பாத்தேன்

மனசயும் தொறந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல

அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
ஏதும்… ஏதும்…

சொல்லிட்டேனே இவ காதல

சொல்லிட்டாளே அவ காதல

எத்தனையோ சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே
சொல்லுறதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே ஏது துன்பம்

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலச்சிடும் உதிரத்துல

அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
ஏதும்… ஏதும்…

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல ஒரு வார்த்தைய
யாரிடமும் செல்ல தோணல
இனி வேறொரு வார்த்தைய
பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை
ஏதும்… ஏதும்…!

இப்பாடல் இசைப்பாவில் முன்னமே வர வேண்டியது. சில தவிர்க்க இயலாத சூழ்நிலைகளால்,  பாடலின் வெளியீடு தள்ளிப்போயுள்ளது. இப்பாடல் இன்றளவில், இசைப்பாவில் இசை அமைப்பாளர் டி.இமான் அவர்களின் முதல் பாடல். இப்பாடலும் உங்கள் மனம் கவர்ந்த பாடலாக இருந்திருக்கும் என நம்புகிறோம். உங்கள் கருத்துகளையும், பங்களிப்புகளையும் இசைப்பா வழக்கம்போல் எதிர்பார்க்கிறது. 3444 தாண்டிய பார்வைகளுக்கு நன்றி.