நண்பர்களுக்கு இசையுடன் வணக்கம்,
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய பாடலோடு சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பாடல் இடம் பெற்ற படம் அபியும் நானும் வித்யாசாகர் இசையில் பாடல் விறுவிறுப்பாக அமைந்து இருக்கும் . வைரமுத்து வரிகள் கொண்டு பிரிவை எதிர்கொள்ளும் தந்தையின் மனநிலையை அப்படியே உணர்த்தியுள்ளார்.
மகளின் பிரிவை எதிர்நோக்கும் விதமாக பாடல் அமைந்து இருக்கிறது. தந்தையின் மனவலியையும் அவரின் நிலையையும் ஒவ்வொரு வரியிலும் உணரலாம்.அவர் ஆசையாக தேவதையாக வளர்த்த அப்பெண்ணை, அவள் சேரும் இடம் எப்படி இருக்குமோ என்கிற உருகும் மனநிலையுடன் நம் மனதை உருக வைக்கும் அளவிற்கு வடிவமைத்துள்ளார் பாடலாசிரியர்.பாடலை கேட்டவாறே நாமும் பெண் பிள்ளைகள் பெற்ற அப்பாக்களின் உணர்வுகளை உணரலாம் வாருங்கள்.
படம்:அபியும் நானும்
பாடல்: அழகிய அழகிய கிளி..
பாடலாசிரியர்: வைரமுத்து
இசை:வித்யாசாகர்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
அழகிய அழகிய
கிளி ஒன்றை
பிடிபிடி பிடித்தது பூனை
பனி விழும் – பனி விழும்
மலர் ஒன்றை
பறி பறி பறித்தது யானை
அய்யோ அய்யோ அநியாயம்
அய்யய்யோ
உயிர்போல் வளர்த்தேன்
உன் உணர்வும் பொய்யையோ
நூலானது இழையும் இழையும்
தரிதானடி வலிகளரியும் வலிதந்தது
எனது நிலையம் ,ஆசை கண்ணே
………
…………….
அழகிய அழகிய
கிளி ஒன்றை
பிடிபிடி பிடித்தது பூனை
பனி விழும் பனி விழும்
மலர் ஒன்றை
பறி பறி பறித்தது யானை
ஒஹ்ஹ…….
………
…………..
உயிரின் பிரிவு
புதுசாய் மரணம்
உறவின் பிரிவு
பாதி மரணம்
விதியின் பிடியில்
நானே சரணம்
ஞானம் பழக
இதுவே தருணம்
என் வாசனை வாசனை
வாடையோ இன்று வானர சேனையிடம்
அட காடுகள் கூடுகள்ஆகுமோ – என் பைங்கிளிசேருமிடம்
என் கண்ணாடி கை மாறி கை சேருமோ….
…….
………….
நூலானது இழையும் இழையும்
தரிதானடி வலிகளரியும்
அது போன்றது எனது நிலையம்
ஆசை கண்ணே ….
……..
……………
தாய் தான் அழுதால் – கூடம் நனையும்
தந்தை அழுதால் – வீடே நனையும்
ஊமை வலியில் – உள்ளம் ஒளியும்
பெண்ணை பெற்றால் – உமக்கும் புரியும்
நான் ஆசையில் சேமித்த புதையலை – ஒரு அந்நியன் திருடுவதோ
அஹ்ஹா…..
எந்தன் நெஞ்சினில் ஆடிய நிலவினை
இன்று கிரகணம் தீண்டுவதோ
இனி என் வாழிவில்
பெண் வாழ்வு என்னாகுமோ
மகள் என்பது முதலில் இனிமை
மகள் என்பது பிரிவில் கொடுமை
முடிவென்பது முதுமை தனிமை
போய் வா பெண்ணே ….
மீண்டு ஓர் இனிய பாடலுடன் சந்திக்கலாம் !
சிறந்த பகிர்வு
தொடருங்கள்