கொஞ்சிப் பேசிட வேணாம்… சேதுபதி

நா. முத்துக்குமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பல வெற்றிப்பாடல்களையும், பல படங்களின் முழுப்பாடல்களையும் எழுதி வந்தவர். அநேகமாக காவியக்கவிஞர் வாலியின்  பதினைந்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எனும் சாதனையை முறியடித்திருக்கக் கூடும்.

இளங்கலை பட்டப்படிப்பில் இயற்பியலில் தேர்ந்த நா. முத்துக்குமார் தமிழ் ஆர்வம் காரணமாக முதுகலை தமிழ் படித்தவர். கவிஞர் அறிவுமதியிடம் பாடல் எழுத பயிற்சி எடுப்பதும், இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பயிற்சி எடுப்பதுமாக கழிந்த அக்காலத்தில் இறுதியாக உதவி இயக்குநர் ஆவலை முற்றாகத் துறந்தார்.

தமிழில் முனைவர் பட்டம் பெறுவதா? பாடலாசிரியராக மாறுவதா? எனும் வாய்ப்புகளில் பாடலாசிரியராக முடிவெடுத்த அவர் வெற்றிகரமான பாடலாசிரியராக வலம் வந்தவர். தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது பெற்றவர்.

கல்லூரிக் காலத்தில் இவரது ’தூர்’ கவிதை எழுத்தாளர் சுஜாதாவால் பெரிதும் பாராட்டப்பட்டு புகழ் வெளிச்சம் பெற்றதாகவும் பல்வேறு சூழல்களில் இவரே குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கவிதை எழுதச் சொன்ன சுஜாதா அவர்களிடம், எனக்கு திரைப்படங்களில் பாடல் எழுதவே ஆசை என்று தெரிவித்துள்ளார்.

யாரும் எதிர்பாராத இவரது மறைவு தமிழ்த் திரையுலகத்திற்கு ஈடு செய்ய இயலாத இழப்பாகும். பாடலாசிரியர்/கவிஞர் நா. முத்துக்குமாருக்கு இசைப்பா தளம் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது

சமீபத்தில் வெளிவந்த அவரது பாடல் இன்று இசைப்பாவில். நீண்ட நாட்களுக்கு பிறகு, வெளிவரும் இப்பதிவு, அவருக்கான இசை அஞ்சலி.

ஊருக்கு செல்லும் நாயகன். பிரிவில் உள்ள சுகம் மற்றும் வருத்தத்தைக் கூறும் பாடல். எளிய வரிகள், அழகிய காட்சியமைப்பு, துள்ளும் இசை, மயக்கும் குரல்கள். இசை என்னும் இன்பம் பெருகட்டும். அதற்கு வித்திட்ட உள்ளங்கள் நம் மனங்களில் நிலைக்கட்டும்.

na-muthukumar-isaipaa
நா முத்துகுமார் அஞ்சலி

பாடல் : கொஞ்சிப் பேசிட வேணாம்
இசை : நிவாஸ் பிரசன்னா 
பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்
பாடகர்கள் : சித்ரா, ஸ்ரீராம் பார்த்தசாரதி
படம் : சேதுபதி

கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடி

நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேக்குதடி
அட தொலைவில இருந்தா தானே
பெரும் காதல் கூடுதடி

தூரமே தூரமாய்
போகும் நேரம்

கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடா

நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேக்குதடா
அட தொலைவில இருந்தா தானே
பெரும் காதல் கூடுதடா
தூரமே தூரமாய்

போகும் நேரம்
ஆச விலையிடுதா

நெஞ்சம் அதில் விழுதா
எழுந்திடும் போதும் அன்பே
மீண்டும் விழுந்திடுதா

தனிமை உன்னை சுடுதா
நினைவில் அனல் தருதா
தலையணைப் பூக்களில் எல்லாம்
கூந்தல் மணம் வருதா ?

குறு குறு பார்வையால்
கொஞ்சம் கடத்துறியே

குளிருக்கும் நெருப்புகும்
நடுவுல நிறுத்துறியே

வேற என்ன வேணும்
நேரில் வர வேணும்
சத்தம் இல்ல முத்தம்
தர வேணும்

கொஞ்சிப் பேச வேணாம்…
நான் நின்னா…
தூரமே…

கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடா

இசைப்பா+

நா.முத்துகுமார் தன் பாடல்களுக்காக இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார்

  1. ஆனந்த யாழை… – தங்க மீன்கள்

  2. அழகே… அழகே… – சைவம்

மேலும் அவரது பாடல்களுடன் இணைய, சொடுக்கவும்

na muthukumar isaipaa banner 2
நா மு பாடல்கள்

 

அழகே அழகே….

நண்பர்களுக்கு இசையுடன் நல்வணக்கம்,

இன்று காணவிருக்கும் பாடல் உன்னிகிருஷ்ணன் அவர்களின் புதல்வியான உத்ரா உன்னிகிருஷ்ணன் அவர்களின் மழலை ததும்பிய குரலில் பாடப்பெற்ற பாடல். பாடல் இடம் பெற்ற படம் “சைவம்” , பாடல்-“அழகே அழகே” என அழகாக தெளிவாக பாடியிருக்கிறார் உத்ரா உன்னிகிருஷ்ணன். ஜி.வி .பிரகாஷ் இசையை பாராட்ட வேண்டும் கண்டிப்பாக, பின் வாத்தியங்கள் அனைத்தும் அருமை.பாடல் வரிகள் எளிமையாக சின்ன சின்ன வரிகளாக அருமையாக அமைத்து இருக்கிறார் நா.முத்துக்குமார். குரலில் என்ன மாயமோ Loopல் கேட்க செய்கிறது. பாடலின் காட்சியமைப்பு எப்படி இருக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Utharaஅன்பின் விழிகளில் காணும் அனைத்தும் அழகே என்றும்,

சுடும் வெயில் அழகு, விழும் இலை அழகு...

என ஒரு பட்டியல் போட்டு இயற்கையோடு இணைதல் அழகு என அருமையாக வரிகள் அமைத்து இருக்கிறார் பாடலாசிரியர். வாங்களேன் பாடலை ரசிப்போம்.

 

 

படம்: சைவம்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடலாசிரியர்: நா. முத்துக்குமார்
பாடியவர்: உத்ரா உன்னிகிருஷ்ணன்

 அழகே அழகே எதுவும் அழகே

அழகே அழகே எதுவும் அழகே

அன்பின் விழியில் எல்லாம் அழகே

மழை மட்டுமா அழகு ! சுடும் வெயில் கூட ஒரு அழகு !

மலர் மட்டுமா அழகு ! விழும் இலை கூட ஒரு அழகு !

புன்னகை வீசிடும் கார்முகில் அழகு !

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு !

நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு !

உண்மை அதுதான் நீதான் அழகு !

 ……..

குயிலிசை அது பாடிட – ஸ்வர வரிசைகள் தேவையா?

மயில் நடனங்கள் ஆடிட – ஜதி ஒலிகளும் தேவையா?

நதி நடந்தே சென்றிட வழித்துணைதான் தேவையா ?

கடல் அலை அது பேசிட மொழி இலக்கணம் அது தேவையா?

இயற்கையோடு இணைந்தால் உலகம் முழுதும் அழகு !

கவலை யாவும் மறந்தால் இந்த வாழ்கை முழுதும் அழகு !

……

அழகே அழகே எதுவும் அழகே

…….

இதயம் ஒரு ஊஞ்சலே இடம் வலம் அது ஆடிடும்…

இன்பத்தில் அது தோய்ந்திடும் துன்பத்தில் அது மூழ்கிடும்

நடந்ததை நாம் நாளுமே நினைப்பதில் பொருள் இல்லையே !?

நடப்பதை நாம் எண்ணினால் அதைவிட உயர்வில்லையே…

பூக்கும் பூவில் வீசும் வாசம் என்ன அழகு !

அதையும் தாண்டி வீசும் நம் நேசம் ரொம்ப அழகு !

அழகே அழகே…..

மழை மட்டுமா அழகு ! சுடும் வெயில் கூட ஒரு அழகு !

மலர் மட்டுமா அழகு ! விழும் இலை கூட ஒரு அழகு

புன்னகை வீசிடும் கார்முகில் அழகு !

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு !

மன்னிக்கச் சொல்லிடும் பொய்களும் அழகு !

உண்மையில் அதுதான் விழியாய் அழகு !

இனியதோர்  பாடல்களுடன் மீண்டும் சந்திப்போம் !

என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்

வணக்கம்.

நீண்ட இடைவெளியாகிவிட்டது. எதிர்பாராத சூழல் காரணமாக தொடர்ச்சியாக இயங்க இயல்வில்லை. இப்பாட்லும் முன்னமே வெளிவந்திருக்க வேண்டிய பாடல். ஆனாலும் பரவாயில்லை. இசைப்பா வில் இதுவரை அறிமுகம் ஆகாத கலைஞர்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்யத் திட்டம். அந்த வரிசையில் இசையமைப்பாளர் சி.சத்யா. இந்த பாடல் மூலம் அறிமுகமாகிறார். எங்கேயும் எப்போதும் படம் மூலம் அறிமுகமாகி சென்ற ஆண்டில் மட்டும் மூன்று திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போதைய அஇளம் இசையமைப்பாளர் வரிசையில்   இவரும் ஒருவர்.

கவிஞருக்கு பாடல் எழுதிய அனுபவங்கள் ஏராளம் என்பது நிதர்சனம். இப்பாடல் மிகக் குறைவான நேரத்திலேயே எழுதி முடிக்கப்பட்டிருக்கும் என்றே கருதுகிறேன். கதாநாயகி நாயகனைக் கண்டவுடன் மறக்கிறாள். எதை மறக்கிறாள்? அவனைத் தவிர யாவையும் மறக்கிறாள்! அவ்வளவுதான் பாட்டு! இப்பாடலை பாடகி மதுஸ்ரீயுடன் இணைந்து இப்பாடலை சி. சத்யாவும் பாடியுள்ளார்.

படம்: இவன் வேற மாதிரி
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
இசை: சி.சத்யா
பாடியவர்கள்: மதுஸ்ரீ, சி.சத்யா

யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ
யார் அவனோ அவனோ அவனோ….

என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
என்னை கேட்டேனே
உன்னை நினைக்க என்னை மறந்தேன்
எல்லாம் மறந்தேனே
என் பேரை மறந்தேன்
என் ஊரை மறந்தேன்
என் தோழிகளை மறந்தேனே!
என் நடை மறந்தேன்
என் உடை மறந்தேன்
என் நினைவினை மறந்தேனே!
அந்தி மாலை கோவில் மறந்தேன்
அதிகாலை கோலம் மறந்தேன்
ஏன் மறந்தேன்?

ஓஓஓஓஒ!
ஏன் என்னை மறந்தேன்?
நான் என்னை மறந்தேன்.

கண் திறந்தும் பார்க்க மறந்தேன்
கால் நடந்தும் பாதை மறந்தேன்
வாய் திறந்தும் பேச மறந்தேன்
நான் பண்பலையின் பாடல் மறந்தேன்
தினம் சண்டை போடும் தாயிடம் கெஞ்ச மறந்தேன்
என் குட்டித் தங்கை அவளிடம் கொஞ்ச மறந்தேன்
மறந்தேன் மறந்தேன் எதனால் மறந்தேன்?
யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ
யார் அவனோ அவனோ அவனோ….

என் மனம் கவரும் ஒற்றைப் பேர்!
தாள் பணிந்தேன்…. தாள் பணிந்தேன்

படித்ததெல்லாம் பாதி மறந்தேன்
தேர்வறையில் மீதி மறந்தேன்
நாள் கிழமை தேதி மறந்தேன்
நான் மின்னஞ்சலின் சேதி மறந்தேன்
நான் என்னைப்பற்றி அவனிடம் சொல்ல மறந்தேன்
அவன் புன்னகையை மூட்டைக் கட்டி அள்ள மறந்தேன்
மறந்தேன் மறந்தேன் அவனால் மறந்தேன்?

யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ
யார் அவனோ அவனோ அவனோ….

இசைப்பா +
பாடகி மதுஸ்ரீயின் இயற்பெயர் சுஜாதா பட்டாச்சார்யா