மறு வார்த்தை பேசாதே!

அறிமுகம் தேவை இல்லாத பாடல். பல நூறு முறை கேட்டுவிட்டேன்… இன்னும் இன்னும் இனிக்கிறது. தாமரை + கெளதம் + சித் + தர்புகா சிவா அசத்தல் கூட்டணி 😀

சென்னையில் திருவையாறு விழாவில் சித் ஸ்ரீராம் பாடிய கர்நாடிக் பதிப்பு : https://www.facebook.com/Thillai.Elanthendral/videos/530859777349980/

எனக்கு பிடித்த, இந்தியன் ராகாவின் கர்நாடிக் வார்ப்பு : https://www.youtube.com/watch?v=Ju_vObcp00w

maruvartahi

பாடல் : மறு வார்த்தை பேசாதே
இசை : நிவாஸ் பிரசன்னா  
பாடலாசிரியர் : தாமரை 
பாடகர்: சித் ஸ்ரீராம்
படம் : என்னை நோக்கி பாயும் தோட்டா

மறு வார்த்தை பேசாதே!
மடிமீது நீ தூங்கிடு!

இமை போல நான் காக்க..
கனவாய் நீ மாறிடு !

மயில் தோகை போலே
விரலுன்னை வருடும்!
மனப்பாடமாய்
உரையாடல் நிகழும்..

விழிநீரும் வீணாக
இமைத்தாண்டக் கூடாதென..
துளியாக நான் சேர்த்தேன்..
கடலாகக் கண்ணானதே..!

மறந்தாலும் நான் உன்னை
நினைக்காத நாளில்லையே ..!

பிரிந்தாலும் என் அன்பு..
ஒருபோதும் பொய்யில்லையே !

விடியாத காலைகள்..
முடியாத மாலைகளில்..
வடியாத வேர்வைத் துளிகள்..
பிரியாத போர்வை நொடிகள்!

மணிக்காட்டும் கடிகாரம்
தரும்வாதை அறிந்தோம்..
உடைமாற்றும் இடைவேளை
அதன் பின்பே உணர்ந்தோம்!

மறவாதே மனம்..
மடிந்தாலும் வரும்..!
முதல் நீ…!
முடிவும் நீ…!
அலர் நீ…!
அகிலம் நீ…!

தொலைதூரம் சென்றாலும்…
தொடுவானம் என்றாலும் நீ…
விழியோரம்தானே மறைந்தாய்..
உயிரோடு முன்பே கலந்தாய் …!

இதழ் என்னும் மலர்கொண்டு..
கடிதங்கள் வரைந்தாய்!
பதில் நானும் தருமுன்பே
கனவாகி கலைந்தாய் ..!

பிடிவாதம் பிடி !
சினம் தீரும் அடி!
இழந்தோம்..
எழில்கோலம் !
இனிமேல்..
மழை காலம்..!!

 

கொஞ்சிப் பேசிட வேணாம்… சேதுபதி

நா. முத்துக்குமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பல வெற்றிப்பாடல்களையும், பல படங்களின் முழுப்பாடல்களையும் எழுதி வந்தவர். அநேகமாக காவியக்கவிஞர் வாலியின்  பதினைந்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எனும் சாதனையை முறியடித்திருக்கக் கூடும்.

இளங்கலை பட்டப்படிப்பில் இயற்பியலில் தேர்ந்த நா. முத்துக்குமார் தமிழ் ஆர்வம் காரணமாக முதுகலை தமிழ் படித்தவர். கவிஞர் அறிவுமதியிடம் பாடல் எழுத பயிற்சி எடுப்பதும், இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பயிற்சி எடுப்பதுமாக கழிந்த அக்காலத்தில் இறுதியாக உதவி இயக்குநர் ஆவலை முற்றாகத் துறந்தார்.

தமிழில் முனைவர் பட்டம் பெறுவதா? பாடலாசிரியராக மாறுவதா? எனும் வாய்ப்புகளில் பாடலாசிரியராக முடிவெடுத்த அவர் வெற்றிகரமான பாடலாசிரியராக வலம் வந்தவர். தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது பெற்றவர்.

கல்லூரிக் காலத்தில் இவரது ’தூர்’ கவிதை எழுத்தாளர் சுஜாதாவால் பெரிதும் பாராட்டப்பட்டு புகழ் வெளிச்சம் பெற்றதாகவும் பல்வேறு சூழல்களில் இவரே குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கவிதை எழுதச் சொன்ன சுஜாதா அவர்களிடம், எனக்கு திரைப்படங்களில் பாடல் எழுதவே ஆசை என்று தெரிவித்துள்ளார்.

யாரும் எதிர்பாராத இவரது மறைவு தமிழ்த் திரையுலகத்திற்கு ஈடு செய்ய இயலாத இழப்பாகும். பாடலாசிரியர்/கவிஞர் நா. முத்துக்குமாருக்கு இசைப்பா தளம் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது

சமீபத்தில் வெளிவந்த அவரது பாடல் இன்று இசைப்பாவில். நீண்ட நாட்களுக்கு பிறகு, வெளிவரும் இப்பதிவு, அவருக்கான இசை அஞ்சலி.

ஊருக்கு செல்லும் நாயகன். பிரிவில் உள்ள சுகம் மற்றும் வருத்தத்தைக் கூறும் பாடல். எளிய வரிகள், அழகிய காட்சியமைப்பு, துள்ளும் இசை, மயக்கும் குரல்கள். இசை என்னும் இன்பம் பெருகட்டும். அதற்கு வித்திட்ட உள்ளங்கள் நம் மனங்களில் நிலைக்கட்டும்.

na-muthukumar-isaipaa
நா முத்துகுமார் அஞ்சலி

பாடல் : கொஞ்சிப் பேசிட வேணாம்
இசை : நிவாஸ் பிரசன்னா 
பாடலாசிரியர் : நா. முத்துக்குமார்
பாடகர்கள் : சித்ரா, ஸ்ரீராம் பார்த்தசாரதி
படம் : சேதுபதி

கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடி

நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேக்குதடி
அட தொலைவில இருந்தா தானே
பெரும் காதல் கூடுதடி

தூரமே தூரமாய்
போகும் நேரம்

கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடா

நான் நின்னா நடந்தா கண்ணு
உன் முகமே கேக்குதடா
அட தொலைவில இருந்தா தானே
பெரும் காதல் கூடுதடா
தூரமே தூரமாய்

போகும் நேரம்
ஆச விலையிடுதா

நெஞ்சம் அதில் விழுதா
எழுந்திடும் போதும் அன்பே
மீண்டும் விழுந்திடுதா

தனிமை உன்னை சுடுதா
நினைவில் அனல் தருதா
தலையணைப் பூக்களில் எல்லாம்
கூந்தல் மணம் வருதா ?

குறு குறு பார்வையால்
கொஞ்சம் கடத்துறியே

குளிருக்கும் நெருப்புகும்
நடுவுல நிறுத்துறியே

வேற என்ன வேணும்
நேரில் வர வேணும்
சத்தம் இல்ல முத்தம்
தர வேணும்

கொஞ்சிப் பேச வேணாம்…
நான் நின்னா…
தூரமே…

கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடா

இசைப்பா+

நா.முத்துகுமார் தன் பாடல்களுக்காக இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார்

  1. ஆனந்த யாழை… – தங்க மீன்கள்

  2. அழகே… அழகே… – சைவம்

மேலும் அவரது பாடல்களுடன் இணைய, சொடுக்கவும்

na muthukumar isaipaa banner 2
நா மு பாடல்கள்

 

நீயே உனக்கு ராஜா – தூங்காவனம்

இசை வணக்கம். வெகு நாட்களுக்கு பிறகு புத்தம் புது பாடலுடன் களமிறங்குகிறோம்.

கமலின் அடுத்த படம் தூங்காவனம். அவரிடமே வேலை செய்த ராஜேஷ் இயக்கும் முதல் படம். ஒரே ஒரு பாடல் தானாம். கமல் பாடியுள்ளார், இதனை Metal Singing என்கிறார்கள். நாயகனை வழிபடும் வரிகளை எழுதியவர் வைரமுத்து. அன்பே சிவம் பாடதில் வரும் வரி

மனதின் நீளம் எதிவோ ?
அதுவே வாழ்வின் நீளமடா !
என்ற வரிகளை போல இந்த பாடலில் :
உள்ளம் என்பது 
என்ன நீளமோ  ?
அது தான் உந்தளவே.  

Electronic இசையை தெறிக்க விட்டுள்ளார் ஜிப்ரான். இடையிசையில் வரும் வீணை நல்ல முயற்சி. கேட்டு மகிழுங்கள்.


பாடல் :
நீயே உனக்கு ராஜா
படம் : தூங்காவனம்
இசை : ஜிப்ரான்
வரிகள் : வைரமுத்து
பாடியவர் : கமல்ஹாசன்
THoongavanam

நீயே உனக்கு ராஜா
உனது தலையே உனது
கிரீடம் தோழா
தீயாய் எழுந்து வாடா
திசைகள் கடந்தும்
பயணம் போடா போடா

அண்டம் யாவும்
வெல்லும் நாள் வரை
ரெண்டு கண்களும்
தூங்காவனம்…
புயல் வேளையில்
கடல் தூங்குமா ?
அதுபோல் இவன்
தூங்காவனம்…

எந்த பக்கமும்
திசைகள் திறந்தே
உள்ளதே முன்னேற்றம்
உனதே நண்பா
எந்த துக்கமும் உனக்கு
தடையே இல்லையே
எல்லாம் வெற்றியே நண்பா

நீயே உனக்கு ராஜா…

வேலை வீசியே
வாலை ஏந்தியே
வெளிச்சத்தை கொலை
செய்ய முடியாது.
ஜீவஜோதியாய்  நீயும் மாறினால்
அழிவே கிடையாது

உன் கொள்கை என்றும்
அது தூங்கவானம்

தோல்வி என்பதே
ஞான வெற்றி தான்.
துணிந்தால் கடலும்
தொடை அளவே.
உள்ளம் என்பது
என்ன நீளமோ  ?
அது தான் உந்தளவே.

உன் துள்ளும் உள்ளம்

அது தூங்கவனம்

நீயே உனக்கு ராஜா…

அண்டம் யாவும்…
எந்த பக்கமும்…

Ya thats it
We are done

மீண்டும் ஒரு இனிய பாடலுடன் இணையலாம்.