கயல் படத்திலிருந்து அடுத்த பாடல்.
காதலை தொலைத்து விட்டு தேம்பும் நாயகனின் சோக கேதம் இந்த பாடல். மீண்டும் அவளை தேடுகிறான், திண்டாடி போகிறான். ஏகத்தின் குரலை எளிதாக பகிர்ந்துள்ளார் யுகபாரதி. மிகவும் மெல்லிய இசையில் சோகத்தின் ஆழத்தை கசியவிட்டுள்ளார் இமான்.
பாடல்: எங்க புள்ள இருக்க ?
இசை: இமான்
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்: பலராம்
படம்: கயல்
எங்க புள்ள
இருக்க நீ சொல்லடி ?
கண்ணு முன்ன வந்து
நீ கொஞ்சம் நில்லடி
.
ஒத்தையா வேகுறேன்.
மொத்தமா நோகுறேன்.
இது ஏனோ தானே…
இல்ல இல்ல உசிரே!
எங்க புள்ள
இருக்க நீ சொல்லடி ?
கண்ணு முன்ன
வந்து நீ நில்லடி
அரிதான பொருளாக
தெரிந்தாயடி!
அடைக்காக்க தெரியாமல்
தொலைத்தேனடி!
எனக்குள்ளே புது
மூச்சை கொடுத்தாயடி.
சுழல் போல
அதை நீயே இழுத்தாயடி…
பொத்தி வச்ச
உன் நினைப்பு
பொத்திக்கிட்டு கொட்டுதடி
சுத்தி விட்டு ராட்டினமா
என மனசு சுத்தடி
இது ஏனோ தானே….
இல்ல இல்ல உசிரே!
எங்க புள்ள
இருக்க நீ சொல்லடி!
கண்ணு முன்ன வந்து
நீ கொஞ்சம் நில்லடி!
எனக்கான வரம் போல
பிறந்தாய்யடி
தவமேதும் புரியாமல்
கிடைத்தாயடி
இனிமேலும் இவன்
வாழ முடியாதடி
இறந்தாலும் உன்னை
தேடி அலைவேனடி
உன்ன இவன்
கண்ணின் முழி
பெத்தவளா காணுதடி
உன்ன எண்ணி
அப்படியே செத்திடவும்
தோணுதடி
இது ஏனோ தானோ…
இல்ல இல்ல உசிரே!
எங்க புள்ள
இருக்க நீ சொல்லடி!
கண்ணு முன்ன
வந்து நீ நில்லடி
ஒத்தையா வேகுறேன்.
மொத்தமா நோகுறேன்.
இது ஏனோ தானே…
இல்ல இல்ல உசிரே!
மீண்டும் ஒரு இனிய பாடலுடன் இணைவோம்