நீயே உனக்கு ராஜா – தூங்காவனம்

இசை வணக்கம். வெகு நாட்களுக்கு பிறகு புத்தம் புது பாடலுடன் களமிறங்குகிறோம்.

கமலின் அடுத்த படம் தூங்காவனம். அவரிடமே வேலை செய்த ராஜேஷ் இயக்கும் முதல் படம். ஒரே ஒரு பாடல் தானாம். கமல் பாடியுள்ளார், இதனை Metal Singing என்கிறார்கள். நாயகனை வழிபடும் வரிகளை எழுதியவர் வைரமுத்து. அன்பே சிவம் பாடதில் வரும் வரி

மனதின் நீளம் எதிவோ ?
அதுவே வாழ்வின் நீளமடா !
என்ற வரிகளை போல இந்த பாடலில் :
உள்ளம் என்பது 
என்ன நீளமோ  ?
அது தான் உந்தளவே.  

Electronic இசையை தெறிக்க விட்டுள்ளார் ஜிப்ரான். இடையிசையில் வரும் வீணை நல்ல முயற்சி. கேட்டு மகிழுங்கள்.


பாடல் :
நீயே உனக்கு ராஜா
படம் : தூங்காவனம்
இசை : ஜிப்ரான்
வரிகள் : வைரமுத்து
பாடியவர் : கமல்ஹாசன்
THoongavanam

நீயே உனக்கு ராஜா
உனது தலையே உனது
கிரீடம் தோழா
தீயாய் எழுந்து வாடா
திசைகள் கடந்தும்
பயணம் போடா போடா

அண்டம் யாவும்
வெல்லும் நாள் வரை
ரெண்டு கண்களும்
தூங்காவனம்…
புயல் வேளையில்
கடல் தூங்குமா ?
அதுபோல் இவன்
தூங்காவனம்…

எந்த பக்கமும்
திசைகள் திறந்தே
உள்ளதே முன்னேற்றம்
உனதே நண்பா
எந்த துக்கமும் உனக்கு
தடையே இல்லையே
எல்லாம் வெற்றியே நண்பா

நீயே உனக்கு ராஜா…

வேலை வீசியே
வாலை ஏந்தியே
வெளிச்சத்தை கொலை
செய்ய முடியாது.
ஜீவஜோதியாய்  நீயும் மாறினால்
அழிவே கிடையாது

உன் கொள்கை என்றும்
அது தூங்கவானம்

தோல்வி என்பதே
ஞான வெற்றி தான்.
துணிந்தால் கடலும்
தொடை அளவே.
உள்ளம் என்பது
என்ன நீளமோ  ?
அது தான் உந்தளவே.

உன் துள்ளும் உள்ளம்

அது தூங்கவனம்

நீயே உனக்கு ராஜா…

அண்டம் யாவும்…
எந்த பக்கமும்…

Ya thats it
We are done

மீண்டும் ஒரு இனிய பாடலுடன் இணையலாம்.

பார்த்த முதல் நாளே

இசையின் வசமானவர்களுக்கு,

வணக்கம். இந்த பாடலை அனுப்பியவர் இசைப்பாவின் மூத்த பங்களிப்பாளர் ரஞ்சனி அவர்கள். அவர்கள் முழுச் சுதந்திரம் கொடுத்து இப்பாடலை வெளியிடக் கோரினார்கள். நான் சில வார்த்தைகளைச் சேர்த்திருக்கிறேன். அவ்வளவே. இதன் பாராட்டுகள் அனைத்தும் அவர்க்குரியதே.

இப்போதெல்லாம் திரைப்படப் பாடல்களை அவ்வளவாகக் கேட்பதில்லை. இசை காதுக்கு இனிமையாக இருப்பதில்லை; அல்லது பாடகர் தமிழை கொலை செய்திருப்பார்; குரலினிமை இல்லாத இசை அமைப்பாளரே பாடி நம்மை ஒரு வழி பண்ணி விடுவார். மொத்தத்தில் ‘உனக்கு வயதாகி விட்டது’ என்பான் என் பிள்ளை!

‘வேட்டையாடு விளையாடு’ படத்தைப் பற்றி எல்லாப் பத்திரிகைகளும் ஆஹா ஓஹோ என்று எழுத, வரவில்லை என்று சொன்ன கணவரை கட்டாயப் படுத்தி கூப்பிட்டுக் கொண்டு திரை அரங்கில் இந்தப் படத்தைப் பார்த்து அவரிடமிருந்து செம திட்டு! ‘இதை விட வயலன்ஸ் படம் வேறு கிடைக்கவில்லையா பார்க்க?’ என்று இடைவேளையின் போதே ஆரம்பித்த திட்டு இன்று வரை ஓயவில்லை. அதனால் ‘விஸ்வரூபம்’ போகலாமா என்று பிள்ளை கேட்டபோது அப்பாவுக்கு டிக்கட் வாங்காதே என்று சொல்லிவிட்டேன். ஹி…ஹி….!

சரி இப்போது ‘பார்த்த முதல் நாளே’ பாட்டிற்கு வருவோம். முதல் தடவை கேட்டபோதே ரொம்பவும் பிடித்து விட்டது. எனது அலைபேசியில் காலர் டியூனாகப் போட்டுக் கொண்டேன். ஒரு புதிய அலையையே உருவாக்கி விட்டது இந்தப் பாடல்!

என் மாணவர்களுக்கு ரொம்பவும் வியப்பு நான் காலர் டியூன் போட்டுக் கொண்டது. இத்தனை நாள் இல்லாமல் இது என்ன? எதற்கு இந்தப் பாடலை போட்டுக் கொண்டேன் என்று கேள்வி மேல் கேள்வி. தமிழ் தெரியாத மாணவர்கள் பாடலுக்கு அர்த்தம் கேட்க ஆரம்பித்து விட்டனர்!  முதல் வரியில் வரும் ‘உன்னை’ என்பது யார் என்று அறிய ஆவல் அவர்களுக்கு!

பொதுவாக பாடல் நன்றாக இருந்தால் காட்சி அமைப்பு படு மோசமாக இருக்கும். காட்சி அமைப்பு நன்றாக இருந்து பாடல் சிலசமயம் படுத்தும். அப்படி இல்லாமல் பாடல், இசை, காட்சி அமைப்பு என்று எல்லாவற்றிலும் முதல் இடத்தைப் பிடிக்கிறது இந்தப் பாடல். பாடகர்களும் குறிப்பாக பாம்பே ஜெயஸ்ரீயின் கீழ் ஸ்தாயி குரல் பாடலுக்கு மெருகூட்டுகிறது.

படம் : வேட்டையாடு விளையாடு
பாடல் : பார்த்த முதல்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: தாமரை
பாடியவர்கள் : உன்னி மேனன், பாம்பே ஜெயஸ்ரீ

பார்த்த முதல் நாளே,
உன்னை பார்த்த முதல் நாளே,
காட்சி பிழை போலே,
உணர்ந்தேன் காட்சி பிழை போலே !

ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய் !
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய் !
என் பதாகை தங்கிய உன் முகம்
உன் முகம் என்றும் மறையாதே !

காட்டி கொடுக்கிறதே கண்ணே
காட்டி கொடுக்கிறதே !
காதல் வழிகிறதே கண்ணில்
காதல் வழிகிறதே !

உன் விழியில் வழியும் பிரியங்களை,
பார்த்தே கடந்தேன் பகல் இரவை.
உன் அலாதி அன்பினில் நனைந்தபின்
நனைந்தபின் நானும் மழையானேன் !

காலை எழுந்ததும் என் கண்கள்,
முதலில் தேடி பிடிப்பது உந்தன் முகமே !
தூக்கம் வருகையில் கண் பார்க்கும்,
கடைசி காட்சிக்குள் நிற்பது உன் முகமே !

என்னை பற்றி எனக்கே தெரியாத பலவும்,
நீ அறிந்து நடப்பது வியப்பேன் !
உனை ஏதும் கேட்காமல் உனது ஆசை அனைத்தும்,
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன் !

போகின்றேன் என நீ பல நூறு முறைகள்,
விடை பெற்றும் போகாமல் இருப்பாய் !
சரி என்று சரி என்று உனை போக சொல்லி,
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய் ,
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய் !!

காட்டி கொடுக்கிறதே,
கண்ணே காட்டி கொடுக்கிறதே…
காதல் வழிகிறதே,
கண்ணில் காதல் வழிகிறதே…

ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தங்கிய உன் முகம்
உன் முகம் என்றும் மறையாதே

உன்னை மறந்து நீ,
தூக்கத்தில் சிரித்தாய்,
தூங்காமல் அதை கண்டு ரசித்தேன் !

தூக்கம் மறந்து நான் – உன்னை
பார்க்கும் காட்சி கனவாக
வந்தது என்று நினைத்தேன் !

யாரும் மானிடரே இல்லாத இடத்தில்,
சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும் !
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை,
மரம் தோறும் செதுக்கிட வேண்டும் !

கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்,
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான் !
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்,
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்,
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான் !!

பார்த்த முதல் நாளே,
உன்னை பார்த்த முதல் நாளே,
காட்சி பிழை போலே,
உணர்ந்தேன் காட்சி பிழை போலே !

ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய் !
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய் !
என் பதாகை தங்கிய உன் முகம்
உன் முகம் என்றும் மறையாதே !

கம்பீரமான காவல் அதிகாரிகளுக்கு திரையில் மவுசு கூடியது சூர்யாவின் காக்க காக்க திரைப் படம் வந்தபின் தான். வேட்டையாடு விளையாடு படத்தில் இவர்களின் கம்பீரத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறார், கமல் தன் அட்டகாசமான நடிப்பினால்.

அட்டூழியம் செய்யும் அநியாயக்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் காவல் அதிகாரி, தன் மனைவியிடம் கொஞ்சி, குழைந்து, சண்டை போட்டு, பின் சரணடைந்து தான் ஒரு சாதாரண மனிதன் என்பதை இந்தப் பாடல் காட்சியில் நிரூபிக்கிறார். இது தான் இந்தப் பாடல் வெற்றி பெறக் காரணமோ?

Triple Treat !
Triple Treat !

கௌதம்-தாமரை-ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியின் சிறப்பான பாடல்களில் இதுவும் கண்டிப்பாக இடம்பெறும். வெளிவந்த காலத்தில் பலரது காதுகளையும் குளிரவைத்த இப்பாடல் காட்சியமைப்பிலும் சிறப்பாகவே இருக்கும்.

விஸ்வரூபம் பாடல்கள் !

நீண்ட நாட்களாகி விட்டது. இனிமேல் இந்த வருடத்தில் தொடர்ச்சியாக இயங்க முடிவு செய்துள்ளோம். முன்னமே இதைப் போல சில Promo முயற்சிகள் செய்ய திட்டமிட்டு இருந்தோம். ஆனால் சூழ்நிலை காரணமாக சில திட்டங்கள் நிறைவேறாமல் போய்விட்டன.

புது வருடத்தை சிறப்பாக துவங்க எண்ணி தற்போது விஸ்வரூபம் படப் பாடல்களை முழுவதுமாய் கொண்டு வர முயற்சித்தோம்.அதன் விளைவுதான்  இந்தப் பதிவு.

விஸ்வரூபம் படப் பாடல்கள் முழுதும், ஒரே பதிவில், அதுவும் தமிழில் வருவது இதுவே இணையத்தில் முதல் முறை என நம்புகிறோம்.

படம் – விஸ்வரூபம்
இசை – ஷங்கர் இஷான் லாய்

பாடல் 1
பாடலாசிரியர் – வைரமுத்து
பாடியவர்(கள்) – சுராஜ் ஜகன்

எவன் என்று நினைத்தாய்
எதை கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில்
வெளிப்படும் புதுரூபம்

நெருப்புக்கு பிறந்தான்,
நித்தம் நித்தம் மலர்ந்தான்.
வேளை வந்து சேரும் போது,
வெளிப்படும் சுய ரூபம்

யார் என்று புரிகிறதா ?
இவன் தீயென்று தெரிகிறதா ?
தடைகளை வென்றே,
சரித்திரம் படைத்தவன்,
ஞாபகம் வருகிறதா ?

யாருக்கும் அடிமை இல்லை,
இவன் யாருக்கும் அரசன் இல்லை.
காலங்கள் தாண்டி கடக்கிற பொழுதும்,
காற்றுக்கு காயம் இல்லை.

எவன்…

சின்ன சின்ன அணுவாய் மண்ணுக்குள்ளே கிடப்பான்
வெட்டுப்படும் வேளையிலே வெளிப்படும் விஸ்வரூபம்
என்ன ரூபம் எடுப்பான், எவனுக்கு தெரியும்,
சொந்த ரூபம், மாற்றி மாற்றி, எடுப்பான் விஸ்வரூபம்

யார் என்று…

ரீமிக்ஸ் பாடல் :  

separator-notes

பாடல் 2
பாடலாசிரியர் – கமல்ஹாசன் 
பாடியவர்(கள்) – ஷங்கர் மஹாதேவன், கமல்ஹாசன்

தக தக தக
தின தின தின
நக நக நக

திகிட தான தான தான
திகிட திகிட தாக்கின தான
தாக்குட தான
திக்கிட்டு தாக்கத்தா தி தி தி
தான தானகின்
தடானு தான தானகின்
தலானு தான தானகின்
தலானு

அதி நவநீதா, அபிநய ராஜா,
கோகுல பாலா, கோடி பிரகாஷா,
விரக, நரக, ஸ்ரீ ரக்க்ஷகமலா,
எத்தனை முறை நான் ஏங்கிச் சாவேன் ?
இத்தவணை என்னை ஆட்கொள்வாயா,
சூடிய வாடலை சூடியவா,
களவாடிய சிந்தினையை திரும்பத்தா,
பூதனையாக பணித்திடுவாயா ?
பாவை விரகம் பருகிடுவாயா ?
ஆயர் தம் மாயா நீ வா – ஆயா மாயா !!!
ஆயர் தம் மாயா நீ வா – ஆயா மாயா !!!
ஆயர் தம் மாயா நீ வா – ஆயா மாயா வா !!!

உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே…………….

உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே…………….

மாயத்திருடன் கண்ணா! கண்ணா!
காமகலைஞன் கண்ணா! கண்ணா!
மாயத்திருடன் கண்ணா! கண்ணா!
காமகலைஞன் கண்ணா! கண்ணா!
கிருஷ்ணா……

உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் வேரில்லையே…………….

நிதம் காண்கின்ற வான்கூட நிஜமல்ல
இதம் சேர்க்கும் கனாகூட சுகமல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே….

உன்னை காணாமல்…..
உன்னை காணாமல்…..
உன்னை காணாமல்…..
உன்னை காணாமல்…..
கமபத நிஸ பம கம ரிகரிஸ

உன்னை காணாமல்
பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேரில்லையே

நளின மோக, ஷ்யாமள ரங்கா
தீம் தீம் க்டதகதின்னா
நடன பாவ, ஸ்ரூதிலயகங்கா
க்டதகதின் தீம் தின்னா
சரிவர தூங்காது வாடும்
அனுதினமுனக்காக ஏங்கும்,
ராதா நான் உனக்கென
ராதா தான் உனக்கொரு
ராதா தான்

க்ருடுதா க்ருடுதீம்
க்ருடுதா க்ருடுதீம்
ததகிட தக தா
ததகிட தக தா
ததகிட தக
ததகிட தக
ததகிட தக
தாக தாக
க்டுதா

அவ்வாறு நோக்கினால், எவ்வாறு நாணுவேன்
கண்ணாடி முன் நின்று பார்த்து கொண்டேன்.
ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம் ,
ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்து இருந்தேன்
எதிர்பாராமலே அவன்………..
எதிர்பாராமலே அவன்……. ஓ
பின் இருந்து வந்து என்னை
பம்பரமாய் சுழற்றி விட்டு
உலகுண்ட பெருவாயன் – எந்தன்
வாயோடு வாய் பதித்தான்
இங்கு பூலோகம் என்று
ஒரு பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறைந்தாளடி

உடல் அணிந்த ஆடை போல்
என்னை நீ அணிந்து கொள்வாயா, இனி நீ
இனி நீ – கண்ணா
தூங்காத என் கண்ணில்
துயில் உரித்த கண்ணன் தான் -இனி நீ
இனி நீ

இது நேராமலே நான் –
உன்னை பாராமலே நான்
இந்த முழு ஜென்மம் போய் இருந்தால்
…………………….
என்று அதை எண்ணி வீண் ஏக்கம்
ஏங்காமலே உன்னை மூச்சாக்கி
வாழ்வேனடா

தின தக தக தின
தக தக தின
தக தக தின
தக தக தின
தக தின
தக தின
தோம்ன தோம்ன தகிட
தோம்ன தகதிலான துமுதகிட
தக தரி கிட தக
தக தரி கிட தக
தக தரி கிட தக
தக தரி கிட தக
நக நக நக

நேயத்திருடன் கண்ணா! கண்ணா!
காமகலைஞன் கண்ணா! கண்ணா!
மாயத்திருடன் கண்ணா! கண்ணா!
காமகலைஞன் கண்ணா! கண்ணா!
மாயத்திருடன் கண்ணா! கண்ணா!
காமகலைஞன் கண்ணா! கண்ணா!
மாயத்திருடன் கண்ணா! கண்ணா!
காமகலைஞன் கண்ணா! கண்ணா!

separator-notes

பாடல் 3
பாடலாசிரியர் – வைரமுத்து
பாடியவர்(கள்) – பென்னி தயாள், கமல்ஹாசன்

On the ground,
in the dirt,
in the heat,
sense of dead and
total blind,
when u wer born,
on yur mind…..

Hear the bronze of battle, beating in yur head !
Am the only soul, in singing, is the song all the day !
I am not a man, but a shot waiting to explode !
On my shoulders, got a burning novel load !

துப்பாக்கி எங்கள் தோளிலே
துர்பாக்கியம் தான் வாழ்விலே
எப்போதும் சாவு நேரிலே
எப்போது வெல்வோம் போரிலே

போர்களை நாங்கள் தேர்ந்தேடுக்கவில்லை
போர்தான் எம்மை தேர்ந்தேடுக்கொண்டது
எங்கள் கையில் ஆயுதங்கள் இல்லை
ஆயுதத்தின் கைகளில் எங்கள் உடல் உள்ளது

ஊரை காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம்
சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம்
ஒட்டக முதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது
டாலர் உலகத்தில் சம கர்வம் கிடையாது
நீதி காணாமல் போர்கள் ஓயாது

துர்பாக்கியங்கள் தோழனே
தோள் கொண்ட வீரன் தெய்வமே
எப்போதும் எங்கள் கோப்பையில்,
தேநீரும் பருகும் மரணமே

With the life full in your hand
Its down to match the man
To live you gotta let die
N there is an eye for an eye
U cant afford to fail
Gotta a fighting truth in vain
Got to live by the warriors code
Cannot afford to look back down the road

பூமியை தாங்க கொஞ்சம் நேரம் கேட்கின்றோம்
புயலை சுவாசிக்க ஒரு  நுரையீரல் கேட்கின்றோம்
எஃகு தசைகளாய் ஒரு இதயம் கேட்கின்றோம்
இருநூறாண்டு இளமை கேட்கின்றோம்

துப்பகியும் தலையணை தூங்கி திரிகின்றோம்
தோளோடு எம்மரணத்தை தூக்கி திரிகின்றோம்
ஒட்டக முதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது
டாலர் உலகத்தில் சம கர்வம் கிடையாது !

நீதி காணாமல் போர்கள் ஓயாது !

separator-notes

பாடல் 4
பாடலாசிரியர் – கமல்ஹாசன்
பாடியவர்(கள்) – கமல்ஹாசன், நிக்ஹில் டி’சௌசா

There is a place far away
I wanna to be there some day
(There…)

அணு விதைத்த பூமியிலே
அறுவடைக்கும் அணு கதிர் தான்

பேராசை கடல் பொங்கி விட்டால்
தங்கும் இடம் இல்லை
புது வீடெதுவும் பால் வெளியில்
இன்று வரை இல்லை

பார் சொல்லும் வீரம் ஒரு தாய் மகன் தான்
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்
பாரடா

கருவைறையும் வீடல்ல
கடல சூழ் உலகம் உனதல்ல
நிரந்தரமாய் நமதென்று சொல்லும் இல்லை
நம் நோக்கி அன்பன்றி வேறு மருந்தில்லை
(பார்…)

There is a place far away
I wanna to go there some day
(There…)

separator-notes

முதல் முறையாக ஒரு தமிழ் திரைப்படம் DTH மூலம் வெளி வர உள்ளது. அதுவும் தியேட்டருக்கு வரும் முன். பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும், இந்த விஸ்வரூபத்தை. ஆனாலும் இது ஒரு உலகத்தரம் வாய்ந்த படம் என்றே சொல்லலாம் !

மேலும் இது போல பல நல்ல பாடல்கள் இசைப்பாவை அலங்கரிக்கும். உங்கள் வாசகர் விருப்பங்களை அனுப்புங்கள். இங்கே இதற்கு முன் வந்த பழைய பாடல்களை ரசியுங்கள். மறக்காமல் பகிருங்கள். இசை என்றால் இன்பம் !