வணக்கம்.
இம்மாதம் முழுக்க வெளிவந்த நீதானே என் பொன்வசந்தம் பாடல்களின் முழுத் தொகுப்பு இங்கே. ஒவ்வொரு பாடலையும் தனியே கேட்க/காணொளியை ரசிக்கவோ, அப்பாடலின் lyrical video -வைக் காணவோ இங்கே செல்லலாம்.
படத்தின் அனைத்து பாடல்களுக்கும்,
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்.
பாடல்: வானம் மெல்ல
பாடியவர்கள்: இளையராஜா, பெலா ஷிண்டே
வானம் மெல்ல கீழிறங்கி மண்ணில் வந்தாடுதே!
தூறல் தந்த வாசமெங்கும் வீசுதிங்கே!
வாசம் சொன்ன பாஷை என்ன? உள்ளம் திண்டாடுதே!
பேசிப் பேசி மௌனம் வந்து பேசுதிங்கே!
பூக்கள் பூக்கும் முன்னமே வாசம் வந்ததெப்படி?
காதலான உள்ளம் ரெண்டு உயிரிலே இணையும் தருணம்… தருணம்
(வானம் மெல்ல)
அன்று பார்த்தது!
அந்த பார்வை வேறடி! இந்த பார்வை வேறடி!
நெஞ்சில் கேக்குதே!
துள்ளி துள்ளி ஓடினேன். வந்து போன காலடி!
கேட்காமல் கேட்பதென்ன உன் வார்த்தை உன் பார்வை தானே ஹோ!
என் பாதை நாளும் தேடும் உன் பாதம்
என் ஆசை என்ன என்ன நீ பேசி நான் கேட்க வேண்டும்
எங்கேயும் இன்ப துன்பம் நீ தானே!
உந்தன் மூச்சு காற்றை தான்
எந்தன் சுவாசம் கேட்குதே!
அந்த காற்றை நெஞ்சினுள்ளில் பூட்டி வைத்து
காதல் காப்பேனே!
(வானம் மெல்ல)
பாதி வயதிலே தொலைந்த கதைகள் தோணுது
மீண்டும் பேசி இணையுது
பாதை மாறியே பாதம் நான்கும் போனது
மீண்டும் இங்கு சேர்ந்தது
அன்பே என் காலை மாலை உன்னாலே உன்னாலே தோன்றும்
என் வாழ்வின் அர்த்தமாக வந்தாயே
நில்லாமல் ஓடி ஓடி நான் தேடும் என் தேடல் நீ தான்
சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே
கண்கள் உள்ள காரணம்?
உன்னை பார்க்க தானடி!
வாழும் காலம் யாவும் உன்னை பார்க்க
எந்தன் கண்கள் போதாதே!
(வானம் மெல்ல)
பாடல்: காற்றைக் கொஞ்சம்
பாடியவர்: கார்த்திக்
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன்
பூப்பறித்து கோர்க்கச் சொன்னேன்
ஓடி வந்து உன்னைச் சந்திக்க
மெத்தை ஒன்று தைக்கச் சொன்னேன்
மேகம் அள்ளி தைக்கச் சொன்னேன்
கண்ணை மூடி உன்னைச் சிந்திக்க
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்
உன்னை தேடி பார்க்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்
என் காதல் நலமா? என்றேன்
(காற்றைக் கொஞ்சம்…)
நேரில் பார்த்து பேசும் காதல்
ஊரில் உண்டு ஏராளம்
நெஞ்சினுள்ளில் பேசும் காதல்
நின்று வாழும் எந்நாளும்
தள்ளி தள்ளி போனாலும் உன்னை
எண்ணி வாழுமோர் ஏழை நெஞ்சத்தை பாரடி
தங்க மெத்தை போட்டாலும்
உன் நினைவில் எந்நாளும்
தூக்கமில்லை ஏனென்று சொல்லடி
சாத்தி வைத்த வீட்டில்
தீபம் ஏற்றி வைக்க நீ வாவா
மீதி வைத்த கனவை எல்லாம்
பேசி தீர்க்கலாம்….. ஏ ஏ ஏ ஹே
(காற்றைக் கொஞ்சம் …)
நேற்று எந்தன் கனவில் வந்தாய்
நூறு முத்தம் தந்தாயே!
காலை எழுந்து பார்க்கும் போது
கண்ணில் நின்று கொண்டாயே!
பார்த்து பார்த்து எந்நாளும்
பாதுகாத்து என் நெஞ்சை
என்ன மாயம் செய்தாயோ சொல்லடி
உன்னை பார்த்த நாள் தொட்டு
எண்ணமோடும் தறி கெட்டு
இன்னும் என்ன செய்வாயோ? சொல்லடி!
என்னை இன்று மீட்கத் தான்
உன்னை தேடி வந்தேனே
மீட்டபோதும் நான்
உன்னுள் தொலைகிறேன்……. ஹே…ஹே!
பாடல்: முதல் முறை பார்த்த ஞாபகம்
பாடியவர்: சுனிதி சௌகான்
முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஒரு பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்
சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறுநாளில் ஏங்க வைத்தாய்
வெயிலா? மழையா? வலியா? சுகமா? எதில் நீ?
நீ தானே என் பொன்வசந்தம்
நீ தானே என் பொன்வசந்தம்
(முதல் முறை)
நீந்தி வரும் நிலாவினிலே, ஓராயிரம் ஞாபகங்கள்
நீண்ட நெடும் கனாவினிலே, நூறாயிரம் தீயலைகள்
நெஞ்சமெனும் வினாக்களுக்கு என் பதிலென பல வரிகள்
சேருமிடம் விலாசத்திலே உன் பார்வையின் முகவரிகள்
ஊடலில் போனது காலங்கள் இனி தேடிட நேரங்கள் இல்லையே
தேடலில் நீ வரும் ஓசைகள் அங்கு போனது உன் தடமில்லையே
காதலென்றால் வெறும் காயங்களா? – அது
காதலுக்கு அடையாளங்களா?
வெயிலா? மழையா? வலியா? சுகமா? எதில் நீ?
நீ தானே என் பொன்வசந்தம் வசந்தம், வசந்தம்
முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஒரு பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்
சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறுநாளில் ஏங்க வைத்தாய்
வெயிலா? மழையா? வலியா? சுகமா? எதில் நீ?
நீ தானே என் பொன்வசந்தம்
நீ தானே என் பொன்வசந்தம்
பாடல்: சாய்ந்து சாய்ந்து
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா , ரம்யா என்.எஸ்.கே
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் பொது அடடா ஹே
விழியோடு விழி பேச
விரலோடு விரல் பேச
அடடா வேறு என்ன பேச
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே
என் தாயைப் போல ஒரு பெண்ணை தேடி
உன்னைக் கண்டு கொண்டேனே
ஓஹோ!
என் தந்தை-தோழன் ஒன்றான ஆணை
நான் கண்டு கொண்டேன்
அழகான உந்தன் மாக்கோலம்
அதைக் கேட்கும் எந்தன் வாசல்
காலம் வந்து இந்த கோலம் இடும்
உன் கண்ணை பார்த்தாலே
முன் ஜென்மம் போவேனே
அங்கே நீயும் நானும் நாம்……!
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே
கை வீசி காற்றில் நீ பேசும் அழகில் மெய்யாகும் பொய்கள்
என் மார்பில் வீசும் உன் கூந்தல் வாசம் ஏதேதோ செய்யும்
என் வீட்டில் வரும் உன் பாதம்
எந்நாளும் இது போதும்
இன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில்
ஆள்யாரும் பார்க்காமல் தடயங்கள் இல்லாமல்
அன்பால் உன்னை நானும் கொல்வேன்
(சாய்ந்து சாய்ந்து)
பாடல்: பெண்கள் என்றால்…
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா
பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா?
பெண்ணின் காதல் கண்ணின் மைதானா?
பெண்களின் காதலின் அர்த்தமினி
புல்லின் மேல் தூங்கிடும் பனித்துளி
காலை வெயில் வந்தாலே
ஓடிப்போகும் தன்னாலே
காதல் வரும் முன்னாலே ஓ ஹோ
கண்ணீர் வரும் பின்னாலே ஓ ஹோ
என்ன சொல்லி என்ன பெண்ணே நெஞ்சமொரு காத்தாடி
தத்தி தத்தி உன்னிடத்தில் தாவுதடி கூத்தாடி
பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா?
பெண்ணின் காதல் கண்ணின் மைதானா?
இதற்கு தானா ஆசை வைத்தாய்?
இதயம் கேட்குதே!
இவளுக்காக துடிக்க வேண்டாம்
என்று சொல்லுதே!
மதிகெட்ட என்னிடம் மனம் நொந்து சொன்னது
மரணத்தை போல் இந்த பெண் இவள் என்றது
தீயை போன்ற பெண் இவள் என்று தெரிந்து கொண்டதே என் மனம்
அன்பில் செய்த ஆயுதங்கள் பெண்ணிடத்தில் உண்டு ஏராளம்
(பெண்கள் என்றால்……)
பாடல்: என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்…!
பாடியவர்: கார்த்திக்
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் |
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்
நீ என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்
செல்ல சண்டை போடுகின்றாய்
தள்ளி நின்று தேடுகின்றாய்
அஹ்ஹஹ்ஹா
அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் மன்னிக்கவும்
உனக்கு உரிமை இல்லையா
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்
என்னோடு……
வா வா என்று……
சொல்ல மாட்டேன்…
போகமாட்டேன்
கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்கி நீ சாய்வது
என்னை கொஞ்சம் பார்க்கதானடி
கண்ணை மூடி தூங்குவது போல நடிப்பது
எந்தன் குரல் கேட்கதானடி
இன்னும் என்ன சந்தேகம்
என்னை இனி எந்நாளும்
தீயாக பார்க்காதடி
சின்னப் பிள்ளை போல நீ
அடம் பிடிப்பதென்ன சொல்ல
என்னை விட யாரும் இல்லை
அன்பு செய்து உன்னை வெல்ல
சண்டை போட்ட நாட்களை எல்லாம்
எண்ணி சொல்லிக் கேட்டு கொண்டால்
கணக்கும் பயந்து நடுங்கும்
என்னோடு……
வா வா என்று……
சொல்ல மாட்டேன்…
போகமாட்டேன்
காதலுக்கு இலக்கணமே
தன்னால் வரும் சின்னச் சின்னத் தலைக்கனமே!
காதலதை பொறுக்கணுமே
இல்லையெனில் கட்டி வைத்து உதைக்கணுமே!
உன்னுடைய கையாலே தண்டனையே
தந்தாலே என் நெஞ்சம் கொண்டாடுமே!
கன்னத்தில் அடிக்கும் அடி
முத்தத்தால் வேணுமடி!
மற்றதெல்லாம் உன்னுடைய
இதழ்களின் இஷ்டப்படி
எந்த தேசம் போன பின்பும் என்னுடைய சொந்த தேசம்
உனது இதயம் தானே!
(என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்…)
பாடல்: சற்று முன்பு பார்த்த
பாடியவர்: ரம்யா என்.எஸ்.கே
சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறிப்போக
சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறிப்போக
நெஞ்சம் துடிப்பதும்
மின்னல் அடிப்பதேன் சொல்
உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
எல்லாமே பொய்யென்று சொல்வாயா?
ஓ ஓ……….
(சற்று முன்பு……)
ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைதானடா!
தூங்கப் போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா!
வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா!
தேங்கி போன ஓர் நதியென இன்று நானடா!
தாங்கி பிடிக்கவும் தோள்கள் இல்லையே
தன்னந்தனி காட்டில் எந்தன் காதல் வாட…
(சற்று முன்பு…)
சேர்ந்து போன நம் சாலைகள் மீண்டும் தோன்றுமா?
சோர்ந்து போன என் கண்களின் சோகம் மாறுமா?
ஓய்ந்து போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமா?
காய்ந்து போன என் கன்னத்தில் வண்ணம் மலருமா?
தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா?
தொட்டு தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே?
சற்று முன்பு பார்த்த மேகம் மாறிப்போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறிப்போக
பாடல்: புடிக்கல மாமு!
பாடியவர்கள்: சூரஜ் ஜகன், கார்த்திக், மற்றும் குழுவினர்
புடிக்கல மாமே! படிக்கற காலேஜ்
தெரு தெருவாக தொறத்துது நாலேஜ்
அறுக்குது புக்ஸு அலறுது டீன் ஏஜ்
சீக்கிரம் வந்திடும் நமக்கு ஓல்ட் ஏஜ்
சிங்க குட்டிய புடிச்சு ஒரு கூண்டில் அடைப்பது பாவம்
வந்த வரைக்கும் புக்ஸ்ச எடைக்கு போடுடா லாபம்
நான் tension ஆகிட்டேன் bucketடு bucketடு
tourக்கு எடுங்கடா ticketடு ticketடு
ஹே……………………………………………
புடிக்கல மாமே!
என் வார்த்த நீ கேட்டு
வெட்டு வெட்டு கல்வெட்டு
ஏயே….
எங்கேயும் chilloutடு இல்லையினா getoutடு
ஹே ஹே….
girlsசு நாம்ம classசில் இல்ல
என்ற போதும் தப்பில்ல !
singleலான boyசுக்குத்தான்
workout ஆகும் மாப்பிள்ள!
நான் எறிஞ்ச ball எல்லாம் wicketடு wicketடு
எறங்கி கலக்குடா bucketடு bucketடு
ஹே ஹே……….
(புடிக்கல மாமே!)
உடம்பில் சிறகு முளைக்கட்டும்
நரம்பில் குறும்பு இருக்கட்டும்
அடிச்சு புடிச்சு அடிக்கும் ஆட்டம்
ஆதிவாசி போல இருக்கட்டும்
அட வீதி பத்தாதே
இந்த ஊரு பத்தாதே
நாம எறங்கி கலக்க தான்
இந்த உலகம் பத்தாதே
College பத்தாதே
Teenage பத்தாதே
நாம பறந்து திரிய தான்
அந்த வானம் பத்தாதே
மச்சி கடலு மீனுக்கு
கொளத்து தண்ணி பத்தாதே
சின்ன பசங்க மனசுக்கு
வெறும் கனவு பத்தாதே
இந்த lifeவ நீயும் அனுபவிக்க
வயசு பத்தாதே
அட வீதி பத்தாதே
இந்த ஊரு பத்தாதே
நாம எறங்கி கலக்க தான்
இந்த உலகம் பத்தாதே
College பத்தாதே
Teenage பத்தாதே
நாம பறந்து திரிய தான்
அந்த வானம் பத்தாதே!
தடக்கு தடக்கு ரயில
போல வருஷம் ஓடுமடா
நீ படுத்து படுத்து எழுந்துபாரு
நிமிஷம் ஓடுமடா
தடக்கு…..
எடக்கு மடக்கு இல்லையிநா
எளமை எதுக்குடா
நீ குறுக்கு நெடுக்கு மடக்கலைனா
உடம்பு எதுக்குடா
படிக்குற பாடம் போதாதடா
தெருவில் இறங்கி நீ படிடா
கனவில் எதையும் ஓட்டாதடா
ஜெயிக்கும் இடத்த புடிடா
நம்ம திசையில பார்த்து
சுத்து அடிக்குது காத்து
ஹே உலுக்கி உலுக்கி
முறுக்கி முறுக்கி
மேளம் அடிங்கடா
அட வீதி பத்தாதே
இந்த ஊரு பத்தாதே
நாம எறங்கி கலக்க தான்
இந்த உலகம் பத்தாதே
அட வீதி பத்தாதே|
இந்த ஊரு பத்தாதே
நாம எறங்கி கலக்க தான்
இந்த உலகம் பத்தாதே
College பத்தாதே
Teenage பத்தாதே
நாம பறந்து திரிய தான்
அந்த வானம் பத்தாதே
பாடல் காட்சிகளையோ, பாடல் வரிகளின் அதிகாரப்பூர்வ (!) காணொளியையோ காண இங்கே செல்லலாம்.
பிழைகள், திருத்தங்கள், கருத்துகளுக்கு செவி மடுக்க எப்போதும்போல ஆர்வத்தோடு உள்ளோம்.
நன்றியோடு,
இசைப்பா குழுவினர்